Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம் பெயர் மக்களின் மனங்களை வெல்வதற்கான வழி இதுவன்று.....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போரினால் பாதிப்புற்ற தமது உறவு களுக்காக மேற்குலகில் குறிப்பாக பிரிட்டனிலும், பிரான்ஸிலும் வசிக்கும் ஈழத் தமிழ் வம்சாவழியினர் அனுப்பி வைத்த நிவாரணப் பொருள்கள் சுமார் நான்கு மாத இழுபறிகளுக்குப் பின்னர் கொழும்பில் இறக்கப் படும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

இலங்கையில் யுத்தம் சூடு பிடித்து, வன்னியில் கொடூரப் போர் நிகழ்ந்த கால கட்டத்தில் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்த நிவாரணப் பொருள்கள் ஈழத் தமிழ் உறவுகளினால் மேற்குலகில் சேகரிக்கப்பட்டன. அவசர, அவசிய மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதற்கான நிவாரண மற்றும் மருந்துப் பொருள் களே இவ்வாறு சேகரிக்கப்பட்டன.

இந்தப் பொருள்களின் சேகரிப்பும், அவற்றைக் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற் பாடும் பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தே முன்னெடுக் கப்பட்டன. இந்தப் பின்னணியிலேயே இந்தப் பொருள் களுடன் "வணங்கா மண்" (கப்டன் அலி) கப்பல் ஏப்ரல் 20 ஆம் திகதி பிரிட்டனிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது. ஜூன் 4 ஆம் திகதி இலங்கையின் கடல் எல்லைக்குள் அது நுழைந்த சமயம், கடற்படையின ரால் அது வழிமறிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. சில இழுபறிகளுக்குப் பின்னர், இலங்கைக் கடல் பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற நிபந்தனை யுடன் அந்தக் கப்பல் விடுவிக்கப்பட்டது.

அந்தக் கப்பலில் இருந்த நிவாரணப் பொருள்களை இறக்கவோ அல்லது அவற்றைப் பொறுப்பேற்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவற்றைப் பகிர்ந்தளிக்கவோ இலங்கை அரசுபிடிவாதத்துடன் மறுத்து விட்டது.

இந்தப் பின்புலத்தில் இலங்கைக் கடல் எல்லையை விட்டு வெளியேறிய அக்கப்பல் ஜூன் 14 ஆம் திகதி முதல் சென்னைத் துறைமுகத்துக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் தரித்து நின்றது.

இச்சூழலில் புதுடில்லி அரசுத் தலைமை இவ்விவ காரம் குறித்துக் கொழும்புடன் பேசி, வற்புறுத்திய மையை அடுத்து, அக்கப்பலில் உள்ள பொருள்களைப் பொறுப்பேற்று இடம் பெயர்ந்த தமிழ் அகதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கக் குழு ஊடாக விநியோகிப்பதற்கு கொழும்பு இணங்கியது. இதன் தொடராக கடந்த வியாழனன்று "வணங்கா மண்" கப்பல் சென்னைத் துறைமுகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது. அதி லிருந்த 884 தொன் நிவாரணப் பொருள்களும் வேறு கப்பல் ஒன்றுக்கு மாற்றப்பட்டதை அடுத்து "வணங்கா மண்" சென்னைத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்போது மேற்படி நிவாரணப் பொருள்கள் ஏற்றப் பட்டுள்ள புதிய கப்பல் இன்று சென்னையிலிருந்து கொழும்புக்குப் புறப்படும் என்றும், அது கொழும்பை வந்தடைந்தவுடன் அப்பொருள்கள் இறக்கப்பட்டு, எடுத்துச் செல்லப்பட்டு, வன்னி அகதிகளுக்கு விநி யோகிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த விநியோகம் தொடர்பான ஏற்பாடுகளில் இலங் கைச் செஞ்சிலுவைச்சங்கம், இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை அரசு, இந்திய அரசுஆகிய தரப்புக் களின் அதிகாரி கள் ஈடுபட்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

"யார் குற்றினாலும் அரிசியானால் சரி" என்பார்கள். அந்த வகையில் பிரிட்டிஷ், பிரான்ஸ் ஈழத் தமிழ் உறவு கள், தமது தாயக மண்ணில் யுத்தத்தால் பாதிக்கப் பட்ட தங்கள் மக்களுக்கு வழங்கவென சேகரித்து அனுப்பிய அவசர, அவசிய மனிதாபிமானத் தேவை களை நிறைவு செய்யும் நிவாரண மற்றும் மருந்துப் பொருள்கள், எப்படியோ கடைசியாக அந்த மக்களுக் குக் கிடைக்கும் நிலைமை ஏற்பட்டிருப்பது திருப்திக் குரியதே. ஆனாலும் இந்த விடயத்தில் இத்தகைய இழுபறிகளும், முட்டுக்கட்டைகளும் அர்த்தமற்றவை, அபத்தமானவை என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே.

விடுதலைப் புலிகளை அடியோடு அழித்து விட் டதாக இலங்கை அரசுமார்தட்டும் அதேவேளை, புதிய ஐக்கிய இலங்கையை சுபீட்சத்தை நோக்கிக் கட்டி யெழுப்புவதற்காக வாரீர் என்று புலம்பெயர்ந்த மக்களை நோக்கி அழைப்பு விடுகின்றார் நாட்டின் தலைவர் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ.

புலிகள் இயக்கத்தை யுத்தத்தில் வெற்றி கொண்ட தான அறிவிப்பு உண்மையானதாக இருக்கலாம். ஆனால் சிறுபான்மையினரான தமிழர்களின் மனங்களையும் அவர்களின் பலமான சக்தியாக இன்றும் விளங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் மனங்களையும் வெல்ல மேலும் பல காரியங்களைச் சாதித்து பல தடைகளைத் தாண்டி விடயங்களை ஆற்ற வேண்டியுள்ளது என் பது மறுக்கப்பட முடியாததாகும்.

இந்தியத் தலையீடும், வற்புறுத்தலும் இல்லாமல் "வணங்கா மண்" கப்பல் பொருள்களைப் பொறுப் பெடுத்து, வன்னியில் இடம் பெயர்ந்த மக்களுக்கு விநியோகிக்க கொழும்பு இணங்கியிருக்குமானால், புலம் பெயர்ந்த தமிழர்களின் மனதை ஆசுவாசப்படுத் தும் சிறிய வாய்ப்பு ஒன்று கொழும்புக்குக் கிடைத்திருக் கும். ஆனால் "வணங்காமண்" கப்பல் விடயத்தில் கொழும்பு காட்டிய தீவிர எதிர்ப்புப் போக்கு அந்த வாய்ப்புக் கோட்டை விடப்பட்டாயிற்று என்பதையே காட்டுகின்றது.

ஒரு புறம் நாடு திரும்பி, இலங்கையைக் கட்டி யெழுப்ப ஒன்றிணையுங்கள் என்ற அரசுத் தலைவரின் அழைப்பு. மறுபுறம் நாடு திரும்பும் புலம்பெயர் தமிழர் களுக்கு விமான நிலையத்திலிருந்து எல்லா இடங்களிலும் சந்தேகப் பார்வையுடன் கூடிய "கெடுபிடி" வரவேற்பு என்ற பீதி.

இத்தகைய போக்குத் தொடருமானால் புலம் பெயர் தமிழர்களை அரவணைத்து அவர்களின் மனங்களையும் வெல்லுதல் என்ற கொழும்பின் நோக்கு வெறும் போக்கோடு போய்விடும். சம்பந்தப்பட்டோர் புரிந்து கொண்டால் சரி....!

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.