Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தமிழ் வீடும் தாக்கப்படவில்லை எந்தவொரு தமிழரும் அச்சுறுத்தப்படவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தமிழ் வீடும் தாக்கப்படவில்லை எந்தவொரு தமிழரும் அச்சுறுத்தப்படவில்லை

[09 - July - 2009] [Font Size - A - A - A]

இராணுவ வெற்றியைத் தொடர்ந்து ஒரு தமிழ் வீடும் தாக்கப்படவில்லை. எந்தவொரு தமிழரும் இம்சைப்படுத்தப்படவில்லை. தமிழர்களின் குடும்ப கலாசாரத்தை நான் எப்போதும் மதிப்பவன். அது மிகவும் முக்கியமானதாகும். ஆனால், அதனைப் புலிகள் அழித்துள்ளனர் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து வெளியாகும் ""இந்து' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். ராமுக்கு ஜனாதிபதி அளித்த பேட்டியின் இறுதிப் பகுதி நேற்று புதன்கிழமை வெளியாகியிருந்தது. அதனை இங்கு தருகின்றோம்.

என். ராம்: இராணுவ வெற்றியைத் தொடர்ந்து வெற்றிக்களிப்பு இலங்கையில் காணப்பட்டதாக இலங்கைக்கு வெளிப்புறத்தே நோக்கப்பட்டது. இது தொடர்பாக நீங்கள் கவலையடைந்தீர்களா? தெற்கில் இது நிறுத்தப்பட வேண்டியதாக இருந்தது. இல்லையா?

ஜனாதிபதி: இல்லை. தமிழர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இரு நாட்களுக்கு அவர்களுக்கு பயமாக இருந்தது. நான் அதனை ஏற்றுக்கொள்வது அவசியம். ""எமக்கு இந்த மாதிரியான பிரச்சினை உள்ளது' என்று எனது நண்பர்கள் எனக்கு அறிவித்தனர் அவர்கள் இந்தப் பயத்தைக் கொண்டிருந்தனர் நான் அவர்களுக்கு தமிழில் கூறினேன்; ""கவலைப்பட வேண்டாம் நான் உங்களை பார்த்துக்கொள்வேன்' மக்கள் இரு வாரங்களாக மகிழ்ச்சியைக் கொண்டாடினர். ஒருநாள் வாகனத்தை எடுத்துக்கொண்டு என்ன நடக்கிறதென பார்க்கச் சென்றேன். தமிழர் வீடுகளுக்கு அருகில் இராணுவத்தையும், பொலிஸாரையும் நிறுத்தியிருந்தேன். எதுவும் நடக்கவில்லை. எந்தவொரு தமிழர் வீடும் தாக்கப்படவில்லை. எந்தவொரு தமிழரும் இம்சைப்படுத்தப்படவில்லை. ஒரு முஸ்லிமும் இம்சைப்படுத்தப்படவில்லை. அண்மையில் சண்டை ஒன்று நடைபெற்றமை குறித்து உங்களுக்குத் தெரியுமா. இருவர் கொல்லப்பட்டனர். ""மற்றொரு பிரச்சினை' ஏற்பட்டிருப்பதாக நான் நினைத்தேன். கும்பலொன்று விசாவிற்கு விண்ணப்பித்திருந்தது என்பதை அறிந்துகொண்டோம். ""இராணுவம் எம்மீது குண்டு போடுகிறது, எம்முடன் சண்டையிடுகிறது' என்று அவர்கள் தப்பிச்செல்வதற்கு இதனைப் பயன்படுத்தியுள்ளனர். எவ்வாறோ அவர்கள் இரண்டு விசாக்களைப் பெற்றுள்ளனர். (அதனைக் கொண்டாட) பாட்டியொன்றை ஒழுங்கு செய்திருந்தனர். குடித்த பின் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். நாம் அவர்களை பிடித்து விசாரித்தோம். அவர்கள் புலிகள் அல்ல. அவர்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் கோஷ்டியினர். கோஷ்டிமோதல் தொடர்கிறது. இவை பாதாள உலகமாகும். அவர்களை நாம் கையாளவேண்டியுள்ளது. அவர்கள் சில மேற்கு நாடுகளுக்குச் செல்ல விரும்புகின்றனர். அவர்களை அந்த அரசாங்கங்கள் விரும்பினால் எடுத்துக்கொள்ளட்டும். எனக்குக் கவலை இல்லை.

என். ராம்: ஜனாதிபதி பதவியானது மிகவும் அதிகாரம் மிகுந்ததாக இருப்பதாக கருத்துள்ளது. அப்படியானால், அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடு என்ன. இந்த விமர்சன தொடர் குறித்து உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

ஜனாதிபதி: இது மிகவும் அதிகாரம் உள்ளதல்ல என்பதே எனது பதிலாகும். இது எனது 3 வருட அனுபவங்களில் இருந்து கிடைத்ததாகும். பண விடயங்களில் நான் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது. எனது பணத்தை பாராளுமன்றம் கட்டுப்படுத்துகிறது. ஆணைக்குழுக்களால் எனது அதிகாரங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. உங்களது மத்திய அரசாங்கத்தைப் போன்று என்னால் எந்தவொரு மாகாண சபையையும் கலைக்க முடியாது. உங்கள் மத்திய அரசாங்கத்திடம் சட்டசபையை கலைப்பதற்கு அரசியல் அமைப்பு ரீதியான அதிகாரம் உள்ளது. இவ்வாறான நிலையில் நான் அதிகாரமுடையவர் என எவ்வாறு கூறமுடியும். மாகாண சபையிலுள்ள ஆசிரியரைக் கூட என்னால் இடம்மாற்ற முடியாது. பாடசாலை ஒன்றை தேசிய பாடசாலையாக என்னால் மாற்ற முடியாது. அவ்வாறானால் இது என்ன அதிகாரம். பாதுகாப்பு விடயத்தைப் பொறுத்தவரை அதிகாரம் உள்ளது. நாட்டை ஒன்றாக வைத்திருப்பதற்கு அதிகாரம் உள்ளது. ஏனைய வழிகளில் எனக்கு அதிகாரங்கள் இல்லை. அமைச்சரவையிடமே சகல அதிகாரங்களும் உள்ளன. நான் கோரிக்கை விடுக்க முடியும்.

என். ராம்: நீங்கள் பாராளுமன்றத்தின் மனிதர் இல்லையா?

ஜனாதிபதி: நான் பாராளுமன்ற மனிதனென எப்போதுமே கூறுகிறேன். எனக்கு விவாதிக்க விருப்பம். சண்டையிட விருப்பம். ஆனால், உடல் ரீதியாக அல்ல. நீங்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளே இருந்தால் தொடர்புகளைக் கொண்டவர்களாக இருப்பீர்கள். இப்போது நான் சிறையில் உள்ளேன். கீர்த்திமிக்க சிறைக்கைதியாக உள்ளேன் என்று இந்தப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவ்வாறு இருப்பதாக என்னால் கூறமுடியும். கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு நடந்து சென்றவன் நான். 18 நாட்களில் 180 மைல் கல் தூரத்தை நடத்து சென்றுள்ளேன். மக்களை சென்று சந்திக்க விரும்பும் மனிதன் நான். அவர்களுடைய வீடுகளுக்கு நான் சென்று சந்தித்துள்ளேன். நான் சுதந்திரமாக இருந்தேன். 40 வருட அரசியல் வாழ்வில் மக்களுடன் இருந்தேன். ஆயினும், சடுதியாக நான் இங்கு வந்துள்ளேன். 3 மாதங்கள் நான் தடுப்புக் காவலில் இருந்துள்ளேன். ஆனால், அதற்கும் இப்போதுள்ள நிலைமைக்கும் இடையில் நான் வேறுபாட்டைக் காணவில்லை. இந்த வசதிகளை எல்லாம் நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்பது உண்மை. ஆனால், இது என்ன சௌகரியம்? இது சௌகரியமானது அல்ல. நான் வெளியே செல்ல முடியாது. நண்பர்களை சந்திக்க முடியாது. அவர்களை இங்கு கொண்டுவர முடியாது. எதனையும் அனுபவிக்க முடியாது.

என். ராம்: நண்பர்களை நீங்கள் மதிப்பவர் என கூறுகின்றனர். உங்களுக்கு இந்தியாவில் நண்பர்கள் உள்ளனரே.

ஜனாதிபதி: நண்பருக்காக நான் எதனையும் செய்வேன் தீய செயல்களுக்கு அல்ல. ஆனால், நெருக்கடியான நிலையில் நண்பர் ஒருவர் அணுகினால் அவர்களுக்கு ஆறுதல்படுத்தக்கூடிய சாத்தியமான எதனையும் நான் செய்வேன். நாடொன்று நண்பராக கருதினால் அந்த நாட்டை எப்போதுமே நண்பராக நம்பிக்கை கொள்வேன். சர்வதேச உறவுகளில் கூட தனிப்பட்ட நட்பு மிகவும் முக்கியமாக உள்ளது. அதனாலேயே இந்தியாவை நான் எப்போதும் நண்பராக நடத்துகிறேன். அதற்கும் அப்பால் உறவினராக நடத்துகிறேன் என நான் கூறுவேன்.

என். ராம்: அண்மைய முன்னேற்றங்களின் போது இந்தியாவின் கருத்துக் குறித்து நீங்கள் மகிழ்ச்சியாக உள்ளீர்களா?

ஜனாதிபதி: ஆம். இந்தியா மிகவும் உதவியாக உள்ளது. என்ன நடக்கிறது என்பது தொடர்பாக புரிந்துணர்வுடன் உள்ளது. எம்மிடம் ஒரு பட்டியல் உள்ளது. எது சாத்தியம் எது சாத்தியமற்றது தொடர்பான பட்டியல் இருந்தது. நாம் ஆயுதங்களை கொள்வனவு செய்தோம். சீனாவிடம் இருந்து அவற்றைப் பெற விரும்பியிருந்தோம். இது ஒரு வர்த்தக நடவடிக்கையாகும். சீனா அதற்கு உதவியது. யாராவது உங்களுக்கு உதவும் போது அதனை நீங்கள் பாராட்ட வேண்டும் இல்லையா? ஆயினும், சர்வதேச நியமத்தின் பிரகாரம் நாம் அவர்களுக்கு கொடுப்பனவுகளை செலுத்தியுள்ளோம். இதில் நாம் மிகவும் தெளிவாக இருந்தோம். பாகிஸ்தானிலும் அதனையே மேற்கொண்டோம். அவர்கள் ஓரங்கட்டப்பட்டபோது நான் அவர்களுக்கு ஆதரவாக இருந்தேன். பின்னர் பொதுநலவாய செயலாளர் நாயகத்தை தெரிவுசெய்யும் நடவடிக்கைகளில் இந்தியாவுக்காக நான் ஆதரவு கோரியிருந்தேன். எந்தவொரு நாட்டின் தலைவரும் வெளிப்படையாக இதனை செய்திருப்பாரென நான் நினைக்கவில்லை. இந்தப் பதவிக்கு (பொதுநலவாய செயலாளர் நாயகம்) ஆர்வம் கொண்டவர்கள் இலங்கையிலும் இருந்தனர். ஆனால், இந்திய வேட்பாளரையே நான் விரும்புவதாக கூறியிருந்தேன். இந்தப் பிராந்தியத்தில் எமக்கு தலைவர் அவசியம். இங்கு சார்க் அமைப்பின் தலைவர் அச்சமயம் இருந்துள்ளார். சர்வதேச ரீதியாக அவர்களை சக்திவாய்ந்தவர்களாக உருவாக்க வேண்டும். அப்போது தான் சர்வதேச மட்டத்தில் எம்மைப் பாதுகாப்பதற்கு நண்பர்களை நாம் கொண்டிருப்போம். இதுவே எனது காரணமாகும்.

என். ராம்: இலங்கையில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்களும் அழுத்தங்களும் காணப்படுவதாக சர்வதேச மத்தியில் விசனம் உள்ளது. இந்தப் பத்திரிகையாளர்கள் சிலர் உங்களின் தனிப்பட்ட நண்பர்களாக இருந்தவர்கள். விசேடமாக லசந்த விக்கிரமசிங்க 2009 ஜனவரியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பின்னர் ஜூனில் தமிழ்ப் பெண் பத்திரிகையாளர் (கிருஷ்ணி இபாம் கந்தசாமி, இன்டர் நியூஸ்) கொழும்பில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டிருந்தார்)

ஜனாதிபதி: இவற்றில் அநேகமானவை உருவாக்கப்பட்டவை என்று என்னால் கூறமுடியும். நீங்கள் வீதியில் யாருடனும் சண்டையிட்டால் அந்த மனிதர் வந்து உங்களை தாக்கக்கூடும். இதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியுமா? ஆனால், பத்திரிகையாளர்கள் எங்களை தாக்கினாலும் கூட அவர்களுக்கு எதிராக நாம் எதனையும் செய்யவில்லை. உதாரணமாக தமிழ் செய்திப் பத்திரிகை ஒன்றின் உரிமையாளரும் ஆசிரியரும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதற்கான ஆதாரம் எம்மிடம் இருந்தது. ஆயினும், நாம் அவர்களை பத்திரிகையாளர்களாக நடத்தினோம். இங்கு நான் அவர்களை வரவழைத்தேன். அவர்கள் இங்கு வந்து எமது சிரேஷ்ட அதிகாரிகளிடம் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தும் கூட நாம் அவர்களை வரவழைத்தோம். எமது சில பத்திரிகையாளர்கள் ஊடக சுதந்திரத்தை விரும்புகின்றனர். அவர்கள் எவரையும் தாக்க முடியும். ஆனால், அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்த முடியாது. அரசியல் அமைப்பின் கீழ் விசாரணையில் இருந்து விலக்களிக்கப்படும் சிறப்புரிமை ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு. ஆனால், பத்திரிகையாளர்கள் தாங்கள் என்ன செய்ய விரும்பினாலும் அதனைச் செய்வதற்கான உரிமை உண்டு என்று நினைக்கின்றனர். ஏனெனில், தாங்கள் பத்திரிகையாளர்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். இது தொடர்பாக தாங்கள் ஒன்றுபட்டு எதனையோ செய்யப்போவதாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர். ஆனால், சில செய்திப் பத்திரிகைகள் எதனைச் செய்கின்றன. அவர்கள் ஊடக அதிகாரத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களை மிரட்டி பணத்தை சேகரிக்கின்றனர். நான் அரசியல்வாதி. இதனை நான் எதிர்கொள்ள முடியும். ஆனால், அரசாங்க ஊழியர்கள் எதனைச் செய்ய முடியும். பத்திரிகையாளர் எதோ ஒன்றை எழுதுகிறார். பின்னர் திருத்தம் பிரசுரிக்கப்படுகிறது. இது பிரயோசனமற்ற விடயமாகும். இந்த நபர் மோசடி இலஞ்சம் வாங்குபவர் அல்லது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர் என்று அவர்கள் பிழையாக எழுதினால் இத்தகைய உதாரணங்கள் உண்டு இதற்கு அவர் என்ன செய்ய முடியும். அவரால் வீட்டிற்குப் போக முடியாது. அவரது பிள்ளைகளை எதிர்கொள்ள முடியாது. நீதிமன்றத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்க எத்தனை பேரால் அதற்குரிய சக்தி உள்ளது. பத்திரிகைகள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அவ்வாறு இதனைச் செய்யவில்லையானால் அதனை அவர்கள் செய்யவைப்பதற்கு சட்டங்கள் தேவை. லசந்த எனது நண்பர். என்னை இங்கு வந்து சந்திப்பார். பல்வேறு விடயங்களை எனக்கு கூறியுள்ளார். எனது கட்சியில் உள்ள பல்வேறு விடயங்களை என்னிடம் கூறியுள்ளார். அதிகாலை 2 மணி வரை அவர் இருப்பார். எனது வாகனத்திலேயே அவரை திரும்ப நான் அனுப்பிவைப்பது வழக்கம்.

என். ராம்: உங்களுக்கு அவர் கடைசியாக அழைப்பு விடுத்ததாக?

ஜனாதிபதி: ஆம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நான் வழிபாட்டறையில் இருந்தேன். அது ஒரு கெட்ட காலமாக இருந்தது. நான் வெளியில் இருந்திருந்தால் என்னிடம் அவர்கள் தொலைபேசியை தந்திருப்பார்கள். நான் எனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் மிகவும் ஆத்திரமடைந்திருந்தேன்.

ஜனாதிபதி: நான் எப்போதும் தமிழர்களின் குடும்ப கலாசாரத்திற்கு மதிப்பளிப்பவன். அது மிகவும் முக்கியமானதாகும். ஆனால், அதனைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களிலுள்ள 19 வயது பெண்ணொருவருக்கு 7 பிள்ளைகள் இருந்தனர். ஒவ்வொரு வருடமும் அவர் தாய்மைப்பேறு அடைந்திருந்தார். ஏனென்றால், யுத்தத்திற்கு புலிகள் அவரை கொண்டுசெல்லாமல் இருப்பதற்காக அவர் அவ்வாறு இருந்தார். தந்தையைக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை.

என். ராம்: இதற்குப் பெற்றோர்கள் ஆதரவளித்திருந்தார்களா?

ஜனாதிபதி: ஆம். பிள்ளையைப் பார்ப்பதற்காக/ இது பாரம்பரிய வழக்கத்தையுடைய குடும்பம். இதுவே நாம் வாழும் சமூகம். இவை யாவற்றையும் பகிரங்கப்படுத்த நாம் விரும்பவில்லை. ஆயினும், எனது உரைகளில் ஒன்றை இதனை நான் குறிப்பிட்டுள்ளேன். உங்களால் ஒரு நாட்டின் கலாசாரத்தை அழிக்க முடியாது. இளம் சமூகத்தின் எதிர்காலத்தை அழிக்க முடியாது என்பதே இங்குள்ள விடயம். ஆனால், போதைவஸ்து வியாபாரிகள் அதனைச் செய்கின்றார்கள். அதனை நிறுத்துவதற்கு நாம் சகலவற்றையும் செய்ய வேண்டியது அவசியமாகும்.

http://www.thinakural.com/news/2009/7/9/im...s_page76691.htm

Edited by ஜீவா

ஓம். அவர்கள் நன்றாகவே பரப்புரையை செய்கிறார்கள். நாமோ, எல்லாமே முடிந்துவிட்டது என்று மூலையில் முடங்கிக் கிடக்கிறோம். நியாயங்கள் எங்கள் பக்கம் இருந்தும் நாம் உண்மையைச் சொல்ல தயங்கி நிற்கிறோம். புலத்தில் நாம் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகளுக்கு மக்களினதும், மக்கள் மத்தியில் பணியாற்றுபவர்களினதும், அமைப்புக்களினதும் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை. எனவே, உணர்ந்து எல்லோரும் முன்வந்தால் நிறையவே செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.