Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக நாடு கடத்தப்பட உள்ள கனடாவாழ் தமிழர் மேல் முறையீடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக நாடு கடத்தப்பட உள்ள கனடாவாழ் தமிழர் மேல் முறையீடு

கனடா வாழ் ஈழத்தமிழர்கள் ஐந்து பேரை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்திய குற்றத்துக்காக கனடியன் பொலிசார் கைது செய்து விசாரித்தனர். இவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் இவர்களை கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் ரமணன் மயில்வாகனம் (30) என்பவர் தனது நாடு கடத்தலை எதிர்த்து கனடா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முயற்சி செய்வதாக அறிவிக்கப்படுகிறது. இந்த வழக்கை ஏற்றுக் கொளவதா இல்லையா என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை செய்து வருவதாகவும் இவ்வாறு மேன்முறையீடு செய்வதே மயில்வாகனம் கனடா நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கான கடைசி சந்தர்ப்பம் எனவும் கூறப்படுகிறது.

கனடா வாட்டர்லோ பல்கலைக்கழக மாணவரான இவர் 1992 இல் கனடா வந்துள்ளார். அமெரிக்க அதிகாரிகளின் உத்தரவின்பேரில் இவர் ஆகஸ்ட் 22, 2006 இல் கைது செய்யப்பட்டார். கனடாவிலும், அமெரிக்காவிலும் இயங்கி வந்த புலி உறுப்பினர்களின் தொடர்புகளை வைத்தே இவர் கைது செய்யப்பட்டிருந்தார். கனடா ஏப்பிரல் 2006 இல் இருந்து புலிகள் அமைப்பைத் தடைசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.meenagam.org/?p=5670

Edited by விடியல்

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பினைப் பார்த்து சிறிலங்காவுக்கு நாடு கடத்தப் போகிறார்கள் என்று நினைத்தேன். அமெரிக்காவுக்குத் தான் நாடு கடத்தப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பே தவறானது. அவர்கள் ஆயுதங்கள் கடத்தவில்லை. இலத்திரனியல் உபகரணங்கள் கடத்தியதாகத்தான் குற்றச்சாட்டு உள்ளது.இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது

தலைப்பினைப் பார்த்து சிறிலங்காவுக்கு நாடு கடத்தப் போகிறார்கள் என்று நினைத்தேன். அமெரிக்காவுக்குத் தான் நாடு கடத்தப் போகிறார்கள்.
அமெரிக்கவுக்கு அனுப்புவதும் அவர்களுக்கு ஆபத்தானது.

Edited by kuloth

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.