Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று அரசியல் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால் அது ஒருபோதும் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கப்படாது: மனோ கணேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று அரசியல் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால் அது ஒருபோதும் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கப்படாது: மனோ கணேசன்

இன்று அரசியல் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால் அது ஒருபோதும் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கப்படாது. எனவே தமிழர்களாகிய எங்களால் இனிமேலும் “வரும், வராது” என காத்திருக்க முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டின் ஜனாதிபதி இந்தியாவிற்கு சென்று “தேர்டீன் (13) ப்ளஸ் ப்ளஸ்” என உறுதிமொழி அளிக்கிறார். உள்நாட்டிற்கு வந்து தமது பங்காளி கட்சிகளிடம் “தேர்டீன் (13) மைனஸ் மைனஸ்” என்று வாக்குறுதி அளிக்கிறார். இந்த தெளிவற்ற தீர்விற்காககூட தமிழர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடந்து முடியும்வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.

இது தமிழர்களாகிய எங்களுக்கு எதுவும் கிடைக்காது என்ற அரசாங்கத்தின் செய்தியாகவே எம்மை வந்து சேர்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர எம்பி, நவ ஹெல உருமய கட்சித்தலைவர் சரத் மணிமேந்திர, வண. தேரர் மாலபே சீலாரட்ண ஆகியோரும் கலந்துகொண்ட மாநாட்டில் உரையாற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

அமைச்சர்கள் ராஜித சேனாரட்ண, டிலான் பெரேரா, டியு குணசேகர, திஸ்ஸ வித்தாரன மற்றும் ஜனாதிபதி ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் 13வது திருத்த சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக ஒரு இயக்கத்தை அரசாங்கத்திற்கு உள்ளேயே இருந்தபடி ஆரம்பித்தனர். இன்று அந்த இயக்கம் என்னவானது?

இன்று விமல் வீரவங்ச எம்பியும், சம்பிக்க ரணவக்க அமைச்சரும் தேசிய இனப்பிரச்சினையே இந்நாட்டில் கிடையாது என்றும், எனவே இதுவரையில் முழுமையாக அமுல்படுத்தப்படாத 13வது திருத்தத்தைகூட குப்பை தொட்டியில் வீசவேண்டும் என்கிறார்கள். அமைச்சர் ராஜித, விமல் வீரவங்ச எம்பியின் கருத்தை கணக்கில் எடுக்கவேண்டாம் என தமிழர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.

ஆனால் விமல் வீரவங்சவின் கட்சிக்கு கடந்தவாரம் தான் அமைச்சரவை அந்தஸ்த்து வழங்கப்பட்டு அவர்களது செல்வாக்கு அரசாங்கத்தில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை பேச்சாளரான அமைச்சர் கேஹெலிய, இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியேறும் வரை அரசியல் தீர்வு வராது என்கிறார்.

அரசியல் தீர்விற்கும், இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியேறுவதற்கும் என்ன சம்பந்தம் என்பது அமைச்சருக்குத்தான் வெளிச்சம். அது ஒரு காரணமாக இருக்குமானால் எவ்விதம் இவர்கள் யாழ் மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்கும் தேர்தல் நடத்துகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

இதுவெல்லாம் இப்படியிருக்கையில் ஜனாதிபதி திடீரென தாம் இன்னொருமுறை தெரிவு செய்யப்படும் வரைக்கும் அரசியல் தீர்வு வராது என இந்தியாவின் இந்து பத்திரிகையின் மூலம் அறிவித்து விட்டார். இப்பொழுது இந்நாட்டின் அமைச்சர்கள் அனைவரும் இதையே ஒப்புவிக்கின்றார்கள். இது எந்தவகையிலும் நியாயமல்ல.

இந்நாட்டின் இறைமையையும், ஆட்சி உரிமையையும் ஒருபோதும் தமிழர்களுக்கும், தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் நியாயமாக பங்கிட்டு வழங்கப்படவில்லை. இதனால் தான் பிரிவினை வாதமும், பயங்கரவாதமும் தலைத்தூக்கியது. இவற்றால் மூண்ட போரினால் மிகவும் பேரவலத்திற்கு உள்ளாகிய தமிழர்களாகிய எங்களுக்குத்தான் இது தொடர்பான துன்பமும், துயரமும் புரிகின்றது.

போர் முடிவிற்கு வந்துவிட்டதால் அரசியல் தீர்விற்கான தீர்மானகரமான வேளை இன்று உதயமாகிவிட்டது. இனிமேலும் அரசியல் தீர்வு ஒத்திவைக்கப்படும் ஒவ்வொரு நாளும், அரசாங்கத்திற்கு உள்ளும், பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும், ஜேவிபிக்குள்ளும் இருக்கின்ற அரசியல் தீர்விக்கு எதிரான சக்திகள் பலமடைவார்கள்.

எனவே இன்று அரசியல் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால் அது ஒருபோதும் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கப்படாது. எனவே தமிழர்களாகிய எங்களால் இனிமேலும் “வரும், வராது” என காத்திருக்க முடியாது.

இந்நாட்டு அரசாங்கத்தின் வேதமான மஹிந்த சிந்தனையில் எந்தவொரு தீர்வும் பொதுசன வாக்கெடுப்பின் மூலமாக முடிவு செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தல்வரை காத்திருக்காமல் அரசாங்கத்தின் திட்டவட்டமான அரசியல் தீர்வு திட்டத்தை இப்பொழுதே முன்வைத்து பொதுசன வாக்கெடுப்பை தாராளமாக நடத்தலாம். இதை அரசாங்கத்திற்கு உள்ளே இருக்கும் தமிழ் கட்சிகள் ஜனாதிபதியிடம் எடுத்து சொல்லவேண்டும்.

நியாயமான ஒரு தீர்வு திட்டத்தை முன்வைத்து அதற்காக பொதுசன வாக்கெடுப்பை அரசாங்கம் நடத்துமானால் அரசாங்கத்துடன் ஒரே மேடையில் ஏறி நின்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்காக செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஒற்றையாட்சி, சமஷ்டியாட்சி என்ற வார்த்தை பதங்களில் சிக்கி அரசியல் தீர்வை பின்தள்ளும் போக்கு அரசாங்கத்தின் பிரதான கட்சிகள் மத்தியில் இருக்கின்து. இந்த போக்கு ஐக்கிய தேசிய கட்சியிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் தென்படுகின்றது.

எனவே இந்த வார்த்தை பிரயோகங்களில் சிக்கி தீர்வை ஒத்திவைக்காமல் உடனடியாக அரசியல் தீர்வை முன்னெடுக்கும்படி ஆளுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் கூட்டமைப்பு உட்பட வடகிழக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகளிடம் நாம் கோருகின்றோம்.

http://www.meenagam.org/?p=5675

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.