Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த இடங்களுக்கு அகதிகளை அனுப்பாமல் வைத்திருப்பதன் "பரம இரகசியம்' என்ன?-- மங்கள சமரவீர கேள்வி

Featured Replies

வடபகுதி அகதி முகாம் பகுதி சனத்தொகையில் கொழும்புக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாக இருப்பதாக கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர, முகாம் மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்பாமல் வைத்திருக்கும் "பரம இரகசியம்' என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

ராஜகிரியவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயேமங்கள சமரவீர இந்தக் கருத்தை வெளியிட்டார்.

தமிழ்த் தலைவர்களுக்கும் அப்பால் சென்று தமிழ் மக்களுக்காக மங்கள சமரவீர குரல் எழுப்பி வருவதாக ஆளுந்தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது;

நான் தமிழ் மக்கள் பற்றியல்ல, இலங்கை பிரஜைகள் பற்றியே பேசினேன். (வடக்கில்) முகாம்களில் கஷ்டப்படுபவர்கள் எமது பெற்றோர். அவர்கள் கஷ்டப்படுவதை பார்த்து நாம் பேசக்கூடாதா? இலட்சக்கணக்கான மக்கள் அங்கு வைக்கப்பட்டிருப்பது பற்றி நாம் பேசியே ஆக வேண்டும்.

சிங்கள மக்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவர்கள். அந்த முகாம்களில் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை பார்த்தால் கண்ணீர் சிந்தி விடுவார்கள்.

கொழும்பை அடுத்து அங்கு பெரிய நகரமொன்று உருவாகியுள்ளது. அதாவது சுமார் 3 இலட்சம் மக்கள் ஒரே இடத்தில் இருக்கின்றனர். வங்கியில் ஒரு பில்லியன் (100 கோடி) ரூபா வைப்பிலிடப்பட்டிருக்கிறது.

அங்குள்ள மக்கள் உடுக்க உடைகளையோ, பணமோ கேட்கவில்லை. தத்தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லக் கேட்கின்றனர். அவர்களை சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்காமல் இருப்பதற்கான பரம இரகசியம் என்ன என்பதே எமது கேள்வி.

இதேநேரம், முகாம்களில் மாதமொன்றுக்கு 1400 மரணம் சம்பவிப்பதாக ?லண்டன் ரைம்ஸ்? செய்தி வெளியிட்டிருந்ததை நான் கூறியதாக இங்குள்ளவர்கள் தெரிவித்திருந்தனர். இது ஆங்கிலம் தெரியாதவர்களாகவே இருக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என கேட்கப்பட்ட கேள்விக்கு அவ்வாறான செய்திகள் வெளிவருகின்ற போது இதில் உண்மை, பொய் தெரியாதென்று மட்டுமே நான் பதிலளித்திருந்தேன்.

இது பொய் என்றால் அனைவரையும் முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட அனுமதிக்க வேண்டும். விசேடமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த அனுமதி வழங்கப்பட வேண்டும். அதேபோல் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்புகள். ஊடகங்கள் போன்றவற்றுக்கும் மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு சுதந்திரமாக சென்று வர அனுமதி வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஏதோ பரம இரகசியமொன்றை மறைப்பதாகவே அர்த்தப்படும் என்று இதன்போது பதிலளித்தார்

http://www.appaa.com/index.php?option=com_...5&Itemid=53

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.