Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை ஏதலிகளை திருப்பி அனுப்பமாட்டோம்: தமிழக அமைச்சர் அன்பழகன் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை ஏதலிகளை திருப்பி அனுப்பமாட்டோம்: தமிழக அமைச்சர் அன்பழகன் தெரிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழ் ஏதிலிகள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அனுப்பும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை. திருப்பி அனுப்பும் முயற்சியில் மத்திய அரசோ, மாநில அரசோ ஈடுபடவில்லை. இவ்வாறு தமிழக சட்டசபையில் முதலமைச்சர் கருணாநிதி சார்பில் விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

சட்டசபையில் பொதுத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்மைச்சர் கருணாநிதி சார்பில் அமைச்சர் அன்பழகன் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“இலங்கை தமிழ் ஏதிலிகள் பற்றி உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்கள். அவர்களுடைய நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பக்கூடாது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

இலங்கை தமிழ் ஏதிலிகள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அனுப்பும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை. திருப்பி அனுப்பும் முயற்சியில் மத்திய அரசோ, மாநில அரசோ ஈடுபடவில்லை. ஆனால் திரும்பிச் செல்ல விரும்புவர்களின் கோரிக்கை ஏற்கப்படும். சொந்த நாட்டில் உறவினர்களுடன் வாழ விரும்புகிறவர்களை தடுக்கமாட்டோம்.

இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களில் படும் துன்பங்களை கருத்தில் கொண்டு அதை சரி செய்வதற்காக முதலமைச்சர் கருணாநிதி 2 அமைச்சர்களை முகாம்களுக்கு அனுப்பி குறைகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தார்.

ரூ. 16 கோடி செலவில் முகாம்களில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. கட்டிடங்களை சீரமைக்க ரூ. 5 கோடி செலவிடப்பட்டது. இந்த ஆண்டு இலங்கை அகதிகளுக்காக ரூ. 55 கோடியே 48 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் துன்பப்படும் தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள இந்திய தூதரக கண்காணிப்புடன் செஞ்சிலுவை சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முறையாக ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. சிங்கள அரசு எந்த விதத்திலும் இதில் தலையிடவில்லை என்று எங்களுக்கு தகவல் கிடைத்து இருக்கிறது.

இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசு சார்பில் திரட்டப்பட்ட ரூ. 50 கோடி நிதியில் ரூ. 12 கோடி தவிர மீதமுள்ள தொகைக்கு பொருட்கள் வாங்கி அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசு அனுப்பிய மருத்துவ குழு மூலம் 15 ஆயிரம் தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அங்கு தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்ற மத்திய அரசு சார்பில் 4 நிபுணர்கள் குழு அனுப்பப்படுகிறது. மத்திய அரசு வழங்கிய ரூ. 500 கோடி உதவியும் முறைப்படி இலங்கை தமிழர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும் மத்திய அரசு உதவிகளை செய்து வருகிறது.

வணங்காமன் கப்பலில் இருந்த பொருட்கள் வேறு கப்பல் மூலம் மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் கண்ணீரை துடைக்க அரசு எப்போதும் தயாராக இருக்கிறது” என்றார்.

http://www.meenagam.org/?p=5863

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.