Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகாம்களை விட்டு வெளியேற எப்போது எமக்கு அனுமதி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகாம்களை விட்டு வெளியேற எப்போது எமக்கு அனுமதி?

* ஒவ்வொரு தடவை செல்லும்போதும் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியிடம் கேள்வி எழுப்பும் அகதிகள்

வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களுக்கு தான் செல்கின்ற ஒவ்வொரு தடவையும் அங்குள்ள மக்கள் "எப்போது நாங்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட போகின்றோம்?' என்று தம்மிடம் கேட்பதாக தெரிவித்திருக்கும் இலங்கையிலுள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே, முகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் மக்கள் தமது எதிர்காலம் குறித்து பெரும் கவலையுடன் இப்போதிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, உதவி வழங்கும் முகவரமைப்புகள் முகாம்களிச்ன் நிலைவரம் தொடர்பாக ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் மீளாய்வு செய்யவிருப்பதாகக் கூறிய நீல் பூனே, முகாம்களிலிருந்து வெளியே செல்வதற்கு வாசல் கதவுகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்குமானால் தாங்கள் (ஐ.நா.) வெளியேறுவார்களா? என்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக ஏ.பி.செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.

வட இலங்கைக் காட்டுக்குள் யுத்த அகதிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் உலகிலேயே பாரிய முகாம்களில் ஒன்றாக விளங்கும் இந்த இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்கள் வங்கிகள், தபாலகங்கள், பாடசாலைகள், பல்பொருள் அங்காடி என்பவற்றைக் கொண்டதாக 6 மாத காலப்பகுதியில் உருவாக்கம் பெற்றுள்ளது. ஆனால், எவருமே உள்ளே செல்வதற்கோ அல்லது வெளியே வருவதற்கோ அனுமதிக்கப்படவில்லை.

உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் 210,000 தமிழர்களை கொண்டிருக்கும் மெனிக் பாம் முகாமானது நிரந்தரமாகவே இராணுவ காவலுடன் கூடிய முகாமாக காலவரையறையின்றி நீடித்திருக்குமோ? என்ற அச்சத்தை உதவிப் பணியாளர்களும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கொண்டுள்ளதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. இந்த முகாம்கள் தொடர்பாக தமது கவலைகளை வெளிப்படுத்திவரும் சர்வதேச சமூகம் பல்லாயிரக்கணக்கான மில்லியன் டொலர்களை இந்த முகாம்களுக்காக செலவிட்டிருப்பதை அதிக எண்ணிக்கையான உதவிப் பணியாளர்கள், ஐ.நா. அதிகாரிகள், இராஜதந்திரிகள், உரிமைகள் ஆர்வலர்கள் என அதிகளவிலானவர்களிடம் மேற்கொண்ட பேட்டியின் மூலம் விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடிந்ததாகவும் இவற்றை விட அரசாங்கத்தின் அறிக்கைகள் ஐ.நா.விடம் இருந்து பெற்ற ஆவணங்கள் என்பவற்றிலிருந்தும் மேலதி விபரங்களை திரட்டக் கூடியதாக இருந்ததாகவும் ஏ.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

"சகல சர்வதேச கொள்கை விதிகளின் பிரகாரம் இது கசப்பான தன்மையையே கொண்டிருப்பதாக கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டதுடன், இது சட்ட ரீதியற்ற தன்மையை அதிகளவுக்கு கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். அவர் அச்சத்தினால் தன்னை அடையாளங்காட்டிக்கொள்ள விரும்பவில்லை என்று ஏ.பி.செய்திச் சேவை கூறியுள்ளது. முகாமின் நிலைமைகள் மோசமாகி வருவதாக தென்படுவதை ஆவணங்களும் பேட்டிகளும் வெளிப்படுத்துகின்றன.

ஜூன் மாதம் பொக்கிளிப்பான் மற்றும் நெருப்புக் காய்ச்சல், ஈரல் அழற்சி, சரும வியாதிகள், சுவாச நோய்கள், வைற்றோட்டம் போன்றவை அதிகரித்துள்ளன. ஐ.நா.வின் அறிக்கைகள் இதனை தெரிவித்துள்ளன. 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 35% அதிகமானோர் போஷாக்கின்றி உள்ளதாக ஜூலை 3 இல் வெளியான ஆவணம் ஏ.பி.க்கு கசிந்துள்ளது.

5 பேர் தங்கியிருப்பதற்கான கூடாரத்தில் 15 பேர் உள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது. பருவமழை எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளது. இதனால் பாரதூரமான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுமென வெளிநாட்டு உதவிப் பணியாளர்கள் பலர் தெரிவித்தனர். முகாம்களுக்குள் தங்கியிருப்போரை பார்ப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதியில்லை. ஆயினும், முட்கம்பி வேலிப் பக்கம் அதிக எண்ணிக்கையானோர் குழுமி நின்று தமது அன்புக்குரியவர்களிடமிருந்த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.