Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவ்வித இடர் வரினும் இலட்சியப் போர் தொடர உறுதி கொள்வோம் – சுவிஸ் தமிழர் பேரவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வித இடர் வரினும் இலட்சியப் போர் தொடர உறுதி கொள்வோம் – சுவிஸ் தமிழர் பேரவை

“இலட்சியத்தால் ஒன்றுபட்ட எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கி விட முடியாது என்ற எங்கள் அழியாச்சுடர் தேசியத்தலைவர் அவர்களின் இலட்சிய மொழியை நெஞ்சில் நிலைநிறுத்தி தாயகத்தில் வாழும் உறவுகளுக்காக ஒன்றுபடுவோம். தமிழினத்தின் உரிமைகளுக்காக மானிடம் சுடரும் விடுதலைக்காய் ஒன்றிணைவோம்” என சுவிஸ் தமிழர் பேரவை அழைப்பொன்றை விடுத்துள்ளது.

இவ் அமைப்பு விடுத்த அழைப்பு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

உறுதியும், விடுதலை வேட்கையும் தாயகப்பற்றும் கொண்ட சுவிஸ்வாழ் மக்களே,

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைமைகளை முற்றிலுமாக அழித்து விட்டதாகவும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாகவும் சிறிலங்கா அரசு அறிவித்தள்ள நிலையில், சில விரும்பத்தகாத, தமிழர் விரோதச் சக்திகள் தமிழரை வழிநடத்த முன்வந்துள்ளன. இது தமிழ்மக்களின் மத்தியில் ஒருவித குழப்பநிலை ஏற்பட்டிருக்கிறது.

விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

இந்தப் போராட்டம் தொடருமா அல்லது கைவிடப்பட்டு விடுமா?

எதிர்காலத்தில் தமிழ்மக்களுக்குத் தலைமையேற்கப் போவது யார்?

இதுபோன்ற கேள்விகள் ஒரு புறத்திலும், இறுதிக் கட்டப் போரின் போது நடந்து போன துயரமான நிகழ்வுகள் பற்றிய மர்மங்கள் இன்னொரு புறத்திலுமாக மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கியிருந்தன. தமிழ் மக்களை நிரந்தரமாக அடிமை கொள்வதற்கு வசதியாக- இத்தகைய குழப்பநிலையை தொடர்ந்து ஊக்குவித்தும் வருகிறது சிங்களதேசம்.

விடுதலைப்புலிகளின் தாயகக்கனவை இலட்சிய வேட்கையை தமது அரசு அழித்துள்ளது என்ற விவாதத்துக்குள் தமிழ்மக்களைத் தள்ளிவிட்டு ஒன்றுபட்டு நின்ற தமிழ்மக்களை இரண்டு படுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது அது.

அதிர்ச்சியான செய்திகளாலும் காணொளிக் காட்சிகளாலும் பெரும் மன அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ள புலம்பெயர் தமிழ் மக்கள், தகுந்த தலைமையும் வழிகாட்டுதலும் இல்லாத நிலையில் முற்று முழுதான செயலற்ற நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.

இதன்மூலம் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை- அதன் மூலம் தனக்கு ஏற்பட்டு வந்த நெருக்கடியைக் குறைப்பதிலும் சிங்கள அரசு வெற்றி பெறவே துடிக்கிறது. புலிகளின் தலைமைத்துவக் கட்டமைப்பு முழுமையாகவே அழிக்கப்பட்டு விட்டது என்ற ஒரு மாயச் சூழல் உருவாகியுள்ள நிலையில்,

அடுத்த கட்டமாக நாம் என்ன செய்யப் போகிறோம்?

எமது இனத்தின் எதிர்காலம் என்ன?

என்ற கேள்விகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இந்த கேள்விகள் எழுந்துள்ள சூழலில் இதற்கு விடை கொடுப்பதுபோல் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிறைவேற்றுச் செயற்குழுவின் அறிவிப்பு சூலை 21.2009 வெளிவந்துள்ளமை வரவேற்புக்குரியதாகும்.

அவர்களின் அவ் உத்தியோக பூர்வ அறிவிப்பில் தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுகளை செல்வராஜா பத்மநாதன் அவர்கள் வழிநடாத்துவார் என்றும், வரலாற்றின் தேவை கருதி – பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப – புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் – எமது இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மீள்-ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுள்ளது. நீண்ட- விரிவான ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் இறுதியாக எமது நிர்வாகச் செயற்குழுவால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவுக்கு அமைய எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளரான செல்வராஜா பத்மநாதன் அவர்கள் – இனிவரும் காலத்தில் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக போராட்ட நகர்வுளை வழிநடாத்திச் செல்வார் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்துவெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்அறிவிப்பினை சுவிஸ் தமிழ்மக்கள் சார்பில் தமிழர் பேரவை வரவேற்றுள்ளதுடன் ஒன்றுதிரண்ட பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது. அதேவேளை தாயகத்தில் விடுதலைப் போருக்குத் தலைமையேற்ற புலிகளின் ஆயுதப்போராட்டம் வடிவம் மாறியுள்ள நிலையில்- எமது விடுதலைப் போரை முன்னகர்த்த வேண்டிய பொறுப்பு புலம்பெயர் மக்களின் தோள்களில் விழுந்திருக்கிறது. இந்த முயற்சியின் ஓர் உச்ச வடிவமாக நாடுகடந்த அரசாங்கம் ஒன்றின் ஊடாக தமிழ்மக்களின் அபிலாஷைகளையும் கோரிக்கைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்டங்களை புலம்பெயர் மக்கள் பொறுப்பேற்று நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

நாடுகடந்த அரசு என்பது ‘கற்பனை உலகம்’ என்பது போன்ற பிரசாரங்கள் ஒருபுறம் நடந்தாலும்- இன்று தமிழ்மக்களின் கோரிக்கைகளை சர்வதேசத்தின் முன்பாக எடுத்துச் செல்வதற்கு இருக்கின்ற ஒரே வழி அது தான் என்பதை யாரும் மறந்து போய் விடக் கூடாது.

எனவே, நாடு கடந்த அரசின் ஊடாக ஒன்றிணைந்து பணியாற்ற அனைவரும் முன்வருவது அவசியமாகிறது. புலம்பெயர் மக்களின் சக்தி தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பலமாக இருந்தது. இதை யாரும் எப்போதும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதரீதியாகப் பலம் பெற புலம்பெயர் சமூகம் எந்தளவுக்குப் பங்காற்றியதோ-அது போன்றே அரசியல் ரீதியாக பலம் பெறுவதற்கும் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் தோள் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

நாடு கடந்த அரசு என்ற ஒரே குடையின் கீழ் ஒன்றுபட்டு நிற்பதன் மூலம் எமது மக்களின் அபிலாஷைகளையும் உரிமைக் கோரிக்கைகளையும் உலகத்தின் காதுகளுக்குக் கொண்டு செல்ல முடியும். மிகவும் நெருக்கடியானதொரு காலகட்டத்தில் இருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு எந்தவழியில் எப்படி உதவிகளை செய்ய முடியும்? அவர்களின் உயிருக்கும் உரிமைக்கும் எப்படிப் பாதுகாப்புக் கொடுக்க முடியும்? என்பதையெல்லாம் தீர்மானிக்கின்ற பலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டியது எமது பொறுப்பே.

இந்நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசு வெகு விரைவில் நிறுவப்படுவதற்கு அனைத்து நல்லிதயம் படைத்த தமிழரும் தமது முழுமனதான பரிபூரண ஒத்துழைப்பை வழங்க முன்வரவேண்டும் எனவும் தமிழர் பேரவை வேண்டிக்கொள்கிறது.

அத்தோடு மட்டும் நில்லாது, இடம் பெயர்ந்த மக்களை உரிய நட்டஈடு வழங்கி பாதுகாப்புடன் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தவும், தமிழர்கள் மீதான இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச மட்ட விசாரணை நடாத்தப்பட சர்வதேசத்தின் ஆதரவைத் திரட்டவும் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

புலம்பெயர் மக்கள் மத்தியில் இருக்கின்ற வேறுபாடுகள் அனைத்தையும் களைந்துவிட்டு ஒன்றுபட்டு நிற்போமானால்- அதுவே தமிழ்மக்களுக்குப் பெரும் பலமாக- பாதுகாப்புக் கவசமாக இருக்கும். எனவே இலட்சியத்தால் ஒன்றுபட்ட எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கி விட முடியாது என்ற எங்கள் அழியாச்சுடர் தேசியத்தலைவர் அவர்களின் இலட்சிய மொழியை நெஞ்சில் நிலைநிறுத்தி தாயகத்தில் வாழும் உறவுகளுக்காக ஒன்றுபடுவோம். தமிழினத்தின் உரிமைகளுக்காக மானிடம் சுடரும் விடுதலைக்காய் ஒன்றிணைவோம்.

தமிழர் பேரவை

சுவிற்சர்லாந்து.

இவ்வாறு அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.meenagam.org/?p=6244

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.