Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை இல்லை: தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி அறிவிப்பு

Featured Replies

இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் தமிழ் இனவாதிகளுக்குமே இன்று அரசியல் தீர்வு தேவைப்படுகின்றதே தவிர தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை இல்லை. அவர்கள் அரசியல் தீர்வைக் கேட்கவும் இல்லை எனத் தெரிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் தலைவர் குணதாச அமரசேகர, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவால் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வு யோசனைகளைக் குப்பைக்கூடைக்குள் வீசிவிட வேண்டும் எனவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றார

சரி அன்னாச்சியே சொல்லிட்டாரு இனி எங்களுக்கு என்ன வேலை?..எல்லாரும் மூட்டை முடிச்சுகளை கட்டுங்கப்பா

  • கருத்துக்கள உறவுகள்

அதனைவிடுத்து தமிழ் இனவாதிகளினதும், இந்தியாவினதும், அதன் உளவுப் பிரிவான 'றோ'வினதும், மேற்கு நாடுகளினதும் தேவைக்கான பிரிவினையை அடிப்படையாகக்கொண்ட தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கும் அவசியம் எமக்கு இல்லை. எமது நாட்டுக்கு உகந்த தீர்வு ஒன்றை அரச தலைவர் தேர்தலுக்குப் பின்னர் முன்வைப்பதாக அரசு தலைவர் ஏற்கனவே அறிவித்திருக்கின்றார்" என குணதாச அமரசேகர மேலும் தெரிவித்தார். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் முழுமையாகப் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும். இந்த இலக்குகளை வெற்றிகொண்டு அவர்களுக்கு ஜனநாயகத்தை வழங்கிய பின்னரே அரசியல் தீர்வை வழங்க வேண்டும்.

[url="http://www.puthinam.com

இன்னொரு கிட்லரும் அவரது கூட்டமுமான உங்களிடம் ஜனநாயகமா? ஜனநாயகம் பிரசவித்த குழந்தையே விடுதலைக்கான போராட்டமாகும்.

இவர்கள் யாராவது தமிழினத்துக்கான அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசியிருக்கிறார்களா? அபிவிருத்தியோ அத்துமீறிய குடியேற்றத்துக்கான கால அவகாசமோ? ஆடுநனையுதென்று ஓநாய் அழுகிறதாம்.

தமிழினத்தைத்தீர்ப்பதற்கான அனைத்து உதவிகளையும் சிங்களத்துக்குச் செய்தவர்கள் ஆயிற்றே. நான் சொல்வது போல் சொல்லுகிறேன். நீங்கள் அதனை தடுத்தாடும் காய்களை நகர்த்தினால் இராணுவ ரீதியாக வென்றதைப் போல் அரசியல் ரீதியாகவும் நாம் தமிழரை அடிமைகொள்ளலாம் என்ற இனவாத முகத்தின் வெளிப்பாடே இது. இவர்களிடம் தமிழினம் கடந்த அறுபத்தியொரு ஆண்டுகளாகக் கண்டுவந்த விடயங்களே இவை. இதைப்புரியாது இப்போதும் தேசியக் கட்சிகளோடு நின்று உரிமைபெறலாம் என்று வெற்று இலைக்குள் விழட்டாம் தமிழரை என்று கொலைக் களத்துக்கு அனுப்ப, அரசியல் கொலைக்களத்தக்கு அனுப்ப விளையும் கொலைகாரர்கள் பற்றிய விழிப்புணர்வு தமிழருக்கு அவசியமானது. வன்னியிலே கொலைவெறியாடிய கையோடு வாக்குக் கேட்டுச் சிங்களத்தால் உங்கள் வீடுகளுக்கு வரமுடிகிறதென்றால் எவளவு கீழாகத் தமிழினம் மிதிக்கப்படுகிறது என்பதற்கான அளவுகோலை வேறெங்கும் தேட வேண்டியதில்லையே. விழிப்படையாத தமிழினமாகத் தொடர்ந்திருக்கப்போகிறோமா?

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.