Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த அரசை உருவாக்குவதில் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பங்கு உண்டு: வி.உருத்திரகுமாரன்

Featured Replies

நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதில் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பங்கு உண்டு என்று தெரிவித்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன், தமிழ் மக்களின் அரசியலில் நாடு கடந்த அரசே அதியுயர் அமைப்பாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூஜேர்சி மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.07.09) அமெரிக்க இலங்கை தமிழ் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'உயிர்த்தெழுவோம்' நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு, அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை [united States Political Action Counvil], அமெரிக்க தமிழ் இளையோர் அமைப்பு [PEARL] ஆகிய நான்கு அமைப்பினர் கூட்டாக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கலந்துகொண்டு - நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சி பற்றி விளக்கமளித்து - அவர் ஆற்றிய உரை வருமாறு:

விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை வெவ்வேறு நாடுகள் தமது அரசியல், பூகோள நலன்களுக்காக அழித்துவிட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தை அழித்தன் காரணமாக தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கக்கூடிய மார்க்கத்தை அழித்துவிட்டார்கள்.

தமிழ்த் தேசிய தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை அழித்ததன் மூலம் இலங்கைத் தீவில் ஒரு சமரசப் பேச்சுவார்த்தைக்கு இன்றியமையாததான - அத்தியாவசியமான - அந்த அதிகார மையத்தையும் அனைத்துலக சமூகம் அழித்துவிட்டது.

இலங்கைத் தீவில் இன்று தமிழர் தரப்பில் ஒரு அதிகார வெறுமை - அதிகார வெற்றிடம் - அரசியல் வெற்றிடம் - காணப்படுகிறது. இலங்கைத்தீவில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட முன்னரும் இந்த அதிகார வெற்றிடம் இருந்தது. அதன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டத்தை ஏந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அந்த ஆயுதப் போராட்டத்தை நசுக்கியதன் மூலம் இலங்கைத் தீவில் இன்று அதிகார வெற்றிடம் தோன்றியுள்ளது.

இத்தகைய அதிகார வெற்றிடத்தை நாங்கள் எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றியே நாங்கள் சிந்திக்க வேண்டும். இலங்கைத் தீவின் உள்ளேயே இருந்துகொண்டு இதனை நிவர்த்தி செய்யலாமா என்பதைப் பார்க்க வேண்டும்.

இலங்கைத்தீவில் இன்று 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்க

நாடு கடந்த அரசு அமைப்பது குறித்த எமது முயற்சியை வெளிப்படுத்தியபோது, இப்படியான நாடு கடந்த அரசு அமைத்ததாக வரலாற்றில் இல்லை என்றும் இது உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான பங்களிப்பாக இருக்கும் என்று கூறினார்கள். நாங்கள் ஒரு தனித்துவமாக இருக்கின்றோம். தனித்துவமாகத்தான் எங்களுடைய போராட்டத்தை நாங்கள் நடத்திக்கொண்டு செல்லமுடியும்

அப்ப தமிழந்தான் எல்லாத்துக்கும் கினிபிக்(சீமை எலி)

.

தியாகம் விரயமானதாக வரலாறு இல்லை, நீதி தோற்றதாக சரித்திரம் இல்லை தர்மம் தனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்

இன்னும் அண்ண இதில நம்பிக்கை வத்திருக்கிறார் போல,தமிழன் எல்லோரும் அழிந்த பின்பும் இந்த டயலக் வரும்

Edited by Jil

வெறும் வாயளவில் பங்காளிகளாக்காமல் எல்லாருக்கும் அத்தாட்ச்சி( அடையாள அட்டைகள் போல) பத்திரம் வழங்கி உறுதிப்படுத்த வேண்டும்... அவைக்கான செலவை அவர்களிடம் இருந்து பெற்று கொள்ளலாம்...

இணையான முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளேன்.... சில மணிநேரங்களில் யாழில் வெள்ளோட்டம் விடப்படும்.......

ஜடீயாவுக்கு நன்றி தயா....

பனங்காய்

http://eelamese.board-directory.com/

ஒரு சங்கம் மாதிரி தொடங்கினேன்.. அலுத்து/வெறுத்துப்போய் விட்டது யாருக்காவது வெணுமெண்டா தனிமடலில் சுய ஈ-மெய்ல் அட்ரெஸோட கேளுங்கோ..... முற்றிலும் இலவசம்... தலைமை நிர்வாகியின் பேரும் பாஸ்ஸும் தரப்படும்.. சும்ம ஒரு ஈ-மெய்ல் போதும்.. போரத்துக்கு வாரவை உங்களை தொடர்புகொள்ளவும், போரத்தில் என்ன நடந்தாலும் உங்களை தொடர்பு கொள்ளவும் மட்டுமே. மற்றும் உங்களுக்கு 24 மனித்தியால இலவச உதவி போரம் தயாரிப்பாளர்களினால் தரப்படும்.... ஆனால்.. தங்கள் விளம்பரம் இதில் இருக்கும்.. (கீழே பாருங்கோ..) நீக்குவதற்ற்கு மாசம் 2 பவுன்....

Edited by Panangkai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.