Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தித் தளங்களிற்கும் செய்திகளை இணைப்பவர்களிற்கும்!

Featured Replies

தமிழ் செய்தித் தளங்கள் மற்றும் ஈழத் தமிழ் செய்தித் தளங்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் இணையத்தளங்களும் பத்திரிகைகளும் தமிழ் நாட்டுச் செய்தி ஊடகங்களின் தயவினிலேயே தங்களை வளர்த்துக் கொள்ளும் தன்மை காணப்படுகின்றது.

ஆறு கோடி மக்களிற்கு மேல் இருக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் பத்திரிகைகள் மற்றும் செய்தித் தளங்களைவிட தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஒரு சில இலட்சம் மக்களிடம் அதிகமாகவே இருக்கின்றது. ஆயினும் அவை அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஊடகங்களின் தயவிலும் ஒருசில தொண்டர்களால் அத்தொண்டர்கள் தாமாக விரும்பி தகவல்களை வழங்கினால் வெளியிடும் வறுமையிலேயே வாடுகின்றன. உலகநாடுகள் பலவற்றிலும் குடியேறி அந் நாடுகளின் குடியுரிமை பெற்றுப் பல தலைமுறையாகவே அந்த நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் செய்யும் விடயங்களைக்கூடி தன் நாட்டு மக்களிற்கு இந்திய ஊடகங்கள் வெளியிடுகின்றன.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் ஊடகங்கள் அவற்றினை அப்படியே அத் தகவல்களை வெளியிட்டு தங்கள் இந்திய விசுவாசத்தினைக் காட்டிக்கொண்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் வாழும் இந்தியர்களிற்கு ஓர் இந்தியனாக அச் செய்திகள் முக்கியமானவையாகப் படுகின்றது. அதனை அவர்கள் தங்கள் செய்தித் தளங்களில் பதிவிடுகிறார்கள்.

ஆனால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்களின் ஊடகங்களின் முக்கிய நுகர்வோராகக் காணப்படுபவர்கள் ஈழத் தமிழ் மக்கள். குறைந்தது அவரவர் வாழும் நாடுகளில் நடைபெறும் செய்திகளையாவது, அவை எவ்வாறு இந்த மக்களின் வாழ்வியலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது போன்ற தகவல்களையாவது வெளியிட மறுக்கிறார்கள். இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அல்லது குஜராத் மாநிலத்தில் ஒருவர் தனிப்பட்ட விடயம் காரணமாக நஞ்சினை உண்டு மரணித்தார் என்றால் அதனை இந்திய ஊடகத்தின் துணையுடன் வெளிக் கொண்டுவரும் இவ்வூடகங்கள் தாங்கள் தாங்கள் இருக்கும் நாடுகளில் நடைபெறும் விடயங்களைச் சிறிதாவது வெளிக்கொணரத் தயங்குகின்றனர்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களிடம் இருக்கும் ஊடகங்கள் ஊடகம் என்றால் என்ன என்பதனை மறந்து செயற்படுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. செய்தியாளர்கள் இல்லாது தங்கள் தளங்களினை நடாத்துகின்றார்களெனில் குறைந்தது அவர்கள் நாடுகளில் உள்ள பிற ஊடகங்களினையும் கவனத்தில் எடுத்துச் செயற்படுவது சிறந்தது.

இங்கு இவ்வாறு ஓர் விமர்சனம் வைப்பதன் மூலம் இந்திய எதிர்ப்பினைப் பதிவுசெய்வதென்பது நோக்கமல்ல. இதனை வாசிப்பவர்கள் அவ்வாறு இதனை எடுத்துக் கொள்வது அவரவரினைப் பொறுப்பு. சமூகத்தில் ஊடகத்திற்கு இருக்கும் பொறுப்பினைத் ஊடகங்கள் உணர்ந்து கொள்ளாதுவிடின் அதனைச் சுட்டிக்காட்டவேண்டியது அச் சமூகத்தில் இருப்பவர்களின் பொறுப்பு. அவ்வகையிலேயே இவ்விமர்சனத்தினை இங்கு வைக்கின்றேன். (இங்கு பெயர் குறிப்பிட்டு பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களைக் குறிப்பிட விரும்பவில்லை)

குறிப்பாக இணையத் தளங்களிற்கும் அதனை நடாத்துபவர்களிற்கும்!, உங்கள் இணையத்தளமானது செய்தியாளர்களைக் கொண்டிருக்கவில்லையானால் அல்லது நீங்கள் வேறு இணையத்தளங்களை மட்டுமே உங்கள் இணையத் தளச் செய்திகளிற்கு நம்பியிருப்பவர்களாக இருப்பின் தயவுசெய்து உங்கள் இணையத் தளங்களைச் செய்தியூடகமாக விளிக்க வேண்டாம் எனத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன். அவற்றினைத் தனியார் ஒருவரின் தளம் என்றே கூறவும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சுடர்.

அநேகமாக பல ஈழவர் இணையத்தளங்களும் சரி, பத்திரிகைகளும் சரி, ஒலி,ஒளிபரப்புத் துறைகளும் சரி ரெடிமெட் செய்திகளுக்கும், ஆக்கங்களுக்கும் கொடுக்கும் ஊக்கத்தை நம்மவர்களுக்குள் நல்ல நிருபர்கள் தோன்றுவதற்கு வழங்குவதில்லை. நூற்றில் ஒருவீதம்கூட ஊக்கிவிக்காமல் தகவல்த்துறை சார்ந்து திறமையானவர்களை உருவாக்காமல் இரவல் நிலையில் எம்மை முடக்கிக் கொள்கிறோம். கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடி உதெல்லாம் முடியும்,... பத்து தளம் என்றால் ஒன்பது தளம் உதைத்தான் செய்யுது... பிறகு என்ன செய்ய...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்து நல்ல சமூக சிந்தனை. வரவேற்கின்றேன்

உண்மையில் நாம் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகின்ற விடயங்களை கூறுவது நல் ஊடகத்தி்ன் சிறப்பாகும்.

இந்திய தமிழ் சினிமாவை விட்டால் வேறு நிகழ்ச்சிகளே இல்லை என்னும் அளவில் தற்போது பல ஊடகங்கள் இயங்குகின்றன.

சினிமா வேண்டும் தான் ஆனால் சினிமாவே வாழ்்கையாக கூடாது.

செய்திகளை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு உதாரணத்திற்கு யாழை எடுத்தீர்கள் என்றால் புலி சம்பந்தப்பட்ட செய்திஎன்றால் அதிகம் பேர் வாசிப்ப்பார்கள் ஏனயவற்றை பார்ப்பவர்கள் மிகவும் குறைவு

இவ்விடயத்தில் சில கருத்துக்களை நாம் உள்வாங்கிக் கொண்ட பின்பே யோசிப்பதும் கருத்துரைப்பதும் சிறந்ததாகவிருக்குமென நம்புகின்றேன். முதலாவதாக இன்றைய ஊடக உலகில் 100/100 வீதம் தாமாகவே சொந்தமாக செய்தியாளர்களை வைத்துக் கொண்டு செய்திகளைப் பெற்று வெளியிடும் ஊடகங்கள் மிகவும் குறைவு அல்லது இல்லை என்றே கூறலாம். உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஊடகங்கள் பலவும் கூட மற்றய செய்தித் தாபனங்களிடமிருந்தும் மற்றும் தனிப்பட்ட ரீதியில் சுயமாக இயங்கும் ஊடகவியலாளர்களிடம் இருந்து செய்திகளைப் பெற்றே அவற்றினை வெளியிட்டு வருவது வெள்ளைடைமலை. இதற்கு தமிழ் ஊடகங்கள் பலவும் கூட விதி விலக்கல்ல. மேலும் சில சமயங்களில் செய்தி ஊடகங்கள் சில ஒன்று சேர்ந்து ஒரு பொதுவான ஊடகவியலாளர் குழுமத்தினை வைத்துக் கொண்டு அவர்களால் வெளியிடப்படும் செய்திகளினைத் தமது ஊடகங்களில் சிற்சில வித்தியாசங்களுடன் வெளியிட்டு வருவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மேலும் தத்தம் இயல்புக்கிணங்க பல்வேறு செய்திகளினைத் தேர்வு செய்து தமது ஊடகங்களில் வெளியிட்டு வருவதனை யாவரும் பற்பல பிரபல ஊடகங்களிலேயே அவதானிக்கலாம்.

இணையத்தில் செய்தித் தளங்கள் பற்பல மட்டங்களில் உள்ளன. இவற்றில் சில ஒரு தனிநபர் வைத்திருக்கும் வலைப்பூ தளமாகவோ அல்லது முழுமையான ஒரு செய்தித்தளமாகவோ காணப்படுகின்றன. அது இணையத்தில் காணப்படும் சுதந்திர ஊடக கோட்பாடுகளுக்குட்பட்ட ஒரு உலகளாவிய விடயம். அது பற்றிக் கருத்துக் கூறுவது அவரவர் விருப்பம். ஆனால் ஆகக் குறைந்த பட்சம் மூலவூடகங்களின் பெயரினையோ சுட்டிகளையோ ஆவது அவ்வ்வாறு மீள் வெளியீடு செய்பவர்கள் தமது தளங்களில் குறிப்பிட வேண்டும் என்பது ஒரு நல்ல ஊடக வழக்கமாக இருக்கும். செய்தியாளர்களற்ற அல்லது ஆரம்ப நிலை இணைய செய்தித் தளங்களினைச் செய்தித் தளங்களாகவே அவற்றின் உரிமையாளர்கள் வரித்துக் கொள்ளக் கூடாது என்பது கொஞ்சம் சர்வாதிகாரப் போக்கினைக் கொண்டவொரு கருத்தாகவமையுமே தவிர வேறொன்றுமில்லையென்பது அடியேன் கருத்து. ஊடகவியல் என்பதே சுதந்திரக் கருத்துரிமை என்பதை அடிப்படையாகக் கொண்டதொரு ஆக்க வேலையாகும். அம்மாதிரியான விடயத்தினைத் தடைகளுக்குட்படுத்தி வளர்த்தெடுப்பதென்பது கொஞ்சம் நகைப்புக்குரியதொரு விடயமாகவே அமையும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாக சொன்னீர்கள் ஜில்.

பென்மன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.