Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா அரசு தடுத்து வைத்துள்ள மூன்று தமிழ் மருத்துவர்களையும் உடன் விடுவிக்க வேண்டும்: மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு வலியுறுத்தல்

Featured Replies

கடந்த மே மாதம் 16 ஆம் நாள் முதல் சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று மருத்துவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று 'மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள்' என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்திருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணைக் குழு ஒன்றை உருவாக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் அந்த அமைப்பு கோரிக்கையையும் வைத்துள்ளது.

வன்னியில் போர் உக்கிரமடைந்திருந்தபோது அங்கு தங்கியிருந்து மருத்துவ சேவையை ஆற்றிவந்த மருத்துவர்களான கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, முள்ளிவாய்க்கால் தள மருத்துவமனையின் மருத்துவ மேலாளர் வி.சண்முகராஜா, முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் துரைராஜா வரதராஜா ஆகியோர் போரின் இறுதி நாட்களில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்கள் பற்றிய விபரங்களை வெளி உலகுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் வெளிப்படுத்தினார்கள்.

இதுவே அவர்கள் செய்த மிகப்பெரிய குற்றமாக இப்போது சிறிலங்கா அரசால் கூறப்படுகின்றது. அவர்கள் பொய் கூறினார்கள் எனக் குற்றம் சாட்டும் அரசு, அவர்களை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தடுத்து வைத்துள்ளது.

அவர்களின் தடுத்து வைப்பு தொடர்பாக 'மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள்' அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் விபரம் வருமாறு:

மூன்று மருத்துவர்களும் சிறிலங்கா தரைப்படையினரால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டனர் என்று மே மாதம் 18 ஆம் நாள் சுகாதாரத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதும் அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் யாருக்குமே தெரியாது. அவர்களில் இரு மருத்துவர்கள் விசாரணைகளுக்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும்.

போர்ப் பிரதேசத்தில் அரச படைகள் நடத்திய குண்டுவீச்சு மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு பற்றிய தகவல்களை வெளிநாட்டு ஊடகங்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் வழங்கியதற்காக, அவர்கள் அரச படைகளால் சித்திரவதைக்கு அல்லது பலப்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படக்கூடும் என்று மனித உரிமைகளுக்கான மருத்துவர் அமைப்பு அஞ்சுகிறது.

சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பரந்தளவில் யாரை வேண்டுமானாலும் கைது செய்து விசாரணைகள் இன்றி அடைத்து வைக்கும் உரிமையை அரச படையினருக்கு வழங்கியிருக்கின்றது.

எமது சகாக்கள் மூவர் கைது செய்யப்பட்டது குறித்தும் குற்றச்சாட்டுக்கள் ஏதும் இன்றி, தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறித்தும் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அந்த மூவரதும் உடல் நிலைமை குறித்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலை குறித்து எம்மிடம் எந்தத் தகவலும் இல்லை. ஆனாலும் அவர்களின் பாதுகாப்பு, உடல்நிலை குறித்து நாம் அச்சமடைந்துள்ளோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில் மூன்று மருத்துவர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு சிறிலங்கா அரசை நாம் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கும் மருத்துவ கவனிப்பைப் பெறுவதற்கும் குடும்ப உறுப்பினர்கள் வந்து பார்வையிடுவதற்கும் மருத்துவர்களுக்கு இருக்கும் உரிமையை அரசு மதிக்க வேண்டும் என்றும் கோருகின்றோம் என்றார் பிராங் டொனாக்கோ. இவர், மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பின் தலைமை அதிகாரி ஆவார்.

இலங்கையில் இருந்து கிடைக்கும் எமது தகவல்களின்படி, போர் நடைபெற்றபோது அரசு நடத்திய குண்டுவீச்சுக்களில் சுகாதாரப் பணியாளர்கள் பலர் இறந்துள்ளார்கள்.

தற்போது மூன்று மருத்துவர்களும் தொடர்புகள் ஏதும் இன்றி தடுத்துவைக்கப்பட்டிருப்பது மருத்துவ நடுநிலைத் தன்மையை மீறும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் காரணங்களால், இலங்கையில் நடந்திருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அனைத்துலக விசாரணைக் குழு ஒன்றை உருவாக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் நாம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.