Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடக விபச்சாரம் புரியும் இந்து ராமை தொடர்ந்து இன்னுமொருவரா...................தாய்மையின் பெயருக்கு களங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(சக்திஅம்மா என பெயர் கொண்ட ஆண் இன ஆன்மீகவாதி)

முகாம்களில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா?சக்திஅம்மா பதில்

இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, ஹெலிகாப்டரில் சென்று சக்தி அம்மா உதவி பொருட்களை வழங்கினார்.

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வேலூர் திரும்பிய சக்தி அம்மா நேற்றுமாலை நிருபர்களை சந்தித்தபோது, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தான் உதவி செய்தது பற்றியும், அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றியும் விளக்கிக் கூறினார்.

தமிழர் முகாமில் எத்தனை பேர் உள்ளனர். அவர்கள் என்ன நிலையில் உள்ளனர். உங்களிடம் என்ன கூறினார்கள்?

சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் நல்ல நிலையில்தான் உள்ளனர். இலங்கையில் அவர்கள் எங்கெங்கு வசித்தார்களோ அங்கே செல்ல விருப்பப்படுகிறார்கள்.

முகாம்களில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா?

நன்றாகவே இருக்கின்றன.

பிரபாகரன் உயிருடன் இருக்கிராறா?

தெரியவில்லை.

இலங்கை அதிபரை ஏன் சந்திக்கவில்லை?

அரசியல் பயணமாக நாங்கள் செல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய சென்றோம். செய்தோம், திரும்பினோம்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=13522

பின் குறிப்பு: உங்களுடைய நியாயமான ஆதங்கங்களை இவர்களுக்கு தெரிவியுங்கள். எங்களில் பலர் அம்மாவின் வழியில் செல்பவர்களாக இருக்கலாம். ஆகவே நீங்களும் எழுதுங்கள். உண்மை எதுவென்று அறிய. அம்மா அவர்கள் பல புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ள இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்பவர். ஆன்மீகவாதிகள் அரசியல்வாதிகள் ஆவது நன்மை தராது

தொடர்பு பட்ட இன்னுமொரு செய்தி

பாதிக்கப்பட்ட தமிழர்கள் முகாமில் சக்தி அம்மா

இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, ஹெலிகாப்டரில் சென்று சக்தி அம்மா உதவி பொருட்களை வழங்கினார். இவர் வேலூர் திருமலைக்கோடியில் உள்ள நாராயணிபீட சக்தி அம்மா ஆன்மிக பணியுடன் சமுதாய பணியையும் செய்து வருகிறார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சக்தி அம்மாவை தரிசனம் செய்ய வந்திருந்த சர்வதேச சேவை அமைப்பை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் மேட் என்பவரிடம் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருந்து மற்றும் அத்தியாவசியமான உதவிகளை செய்யுமாறு சக்தி அம்மா கோரினார்.

அதன்படி அமெரிக்காவில் இருந்து 5 டன் மருந்து பொருட்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் நாராயணி பீடம் மூலமாக 10 ஆயிரம் லுங்கிகள், சேலைகள் சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

அத்துடன் 30 டன் எடையுள்ள கோதுமை மாவு உள்பட உணவுப்பொருட்களும் இலங்கையிலேயே கொள்முதல் செய்து லாரிகள் மூலம் அங்குள்ள முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த உதவி பொருட்களை முகாம்களில் உள்ளவர்களுக்கு நேரடியாக வழங்க சக்தி அம்மாவுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியது.

அதன்பேரில் சக்தி அம்மாவுடன் நாராயணி பீட நிர்வாகிகள் கடந்த 30-ந் தேதி கொழும்பில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வவுனியா மாவட்டம் செட்டிக்குளத்தில் உள்ள முகாமிற்கு சென்றனர்.

பின்னர் முகாமில் இருந்தவர்களுக்கு சக்தி அம்மா, உதவிப்பொருட்களை வழங்கினார். தனது கையால் வழங்கிய உதவிப்பொருட்கள் போக மீதம் இருந்த பொருட்களை இலங்கை ரத்தினபுரா மாகாணத்தின் முதலமைச்சர் மஹிபாலா ஹீரத் மற்றும் சுகாதார செயலாளர் அர்தூலக் கந்திலியே ஆகியோரிடம் சக்தி அம்மா ஒப்படைத்தார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=13521

மீதி பொருட்கள் இரத்தினபுரிக்கு கொடுக்கபட்டது. அதாவது தமிழ் மக்கள் பெயரால் சேகரிக்கபடும் பொருட்கள் சிங்கள இனவாதிகளுக்கு வழங்கப்படும்.

http://www.narayanipeedam.org/

Edited by Mullaimainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.