Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஷமப்பிரசாரம்

Featured Replies

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மெதுவாக புலிகளுக்கு எதிரான விஷமப்பிரசாரம் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளது

....

களத்தில் நடந்தது என்ன ? கடைசிக்கட்ட போர் நேரடி சாட்சி... முகாமில் இருந்து தப்பியவர்களின் சாட்சிய என்ற பெயர்களில் .. பல கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

இவற்றின் நோக்கம் புலிகளின் மீது அவதூறு பரப்புவது , புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர், அவர்களெ மக்களின் அழிவுக்கு காரணம் என்ற எண்ணத்தை மக்களிடம் நிறுவுவதே..

என்றாவது ஒரு நாள் சிங்களன் செய்த கொடூர இன அழிப்பு வெளிப்படும் அப்போது அதற்கு காரணம் சிங்களன் அல்ல ,புலிகளே என்ற எண்ணத்தை மக்களிடம் இப்போதே விதைப்பதே இந்த விஷமக்கட்டுரைகளின் நோக்கம்.

புலிகளின் பலவீனங்களில் சில ... அவர்களின் பலவீனமான பரப்புரை, மறுப்புகள் வெளியிடாமை,

அவர்கள் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் பலமான மறுப்புகள் தெரிவிக்காதது, அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டது போன்ற தோற்றத்தை எதிரிகள் மக்களிடம் ஏற்படுத்த எளிதாக இருந்தன.

இப்போதும் அதே நிலை தொடர்கிறது...

களத்தில் இருந்து வந்தவர்கள் என்ற போர்வையில் மெதுவாக புலிகளை அனைத்து மக்கள் அவலங்களுக்கும் குற்றம் சுமத்தும் முயற்சியை யாரும் கண்டுகொள்ளவில்லை....

ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டிய கடமைகள்...

இத்தகையை விஷமப்பிரசாரங்களுக்கு பலமான மறுப்புகள் தெரிவிக்க வேண்டியது.... புலிகளுக்கு எதிராக பரப்புரை செய்து சிங்களன் செய்த இனப்படுகொலையை மறைக்க முனைவோர் எல்லோரும் , சிங்களன் கைக்கூலிகள் என்று நிறுவவேண்டும்.

அதற்கு வன்னி மக்கள் விடுவிக்கப்பட்டு , சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்... அப்போது தான் இந்த கள சாட்சிகளின் போலி முகங்கள் கிழியும்.

அப்படி சிங்களன் மீது தவறில்லை புலிகள் மீது தான் தவறு என்றால் ஏன் சிங்களன் , பன்னாட்டு அமைப்புகளை முகாம்களுக்குள் அனுமதிக்கவில்லை? முகாம்களில் இருந்து தப்பி தமிழகம் போய் பேட்டி கொடுப்பவர்கள் ,சிங்களன் கைக்கூலிகள் என்று நிறுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது...

இதற்கு ஈழத்தமிழர்கள், மக்களை மீட்டு ,சுதந்திரமாக போர்க்குற்றம் பற்றி விசாரிக்க விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது மிக அவசியம்....

இங்குள்ள மக்களில், புலிகளுக்கு ஆதரவாக இருந்த பலர், இத்தகைய கட்டுரைகளை ப்படித்து விட்டு.. புலிகள் மக்களை மனிதகேடயங்களாக பாவித்தது தவறு என என்னுடன் விவாதிக்க த்தொடங்கியுள்ளனர்.

எதிரி தெளிவாக காய் நகர்த்துகிறான் .....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மெதுவாக புலிகளுக்கு எதிரான விஷமப்பிரசாரம் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளது

....

-----

ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டிய கடமைகள்...

இத்தகையை விஷமப்பிரசாரங்களுக்கு பலமான மறுப்புகள் தெரிவிக்க வேண்டியது.... புலிகளுக்கு எதிராக பரப்புரை செய்து சிங்களன் செய்த இனப்படுகொலையை மறைக்க முனைவோர் எல்லோரும் , சிங்களன் கைக்கூலிகள் என்று நிறுவவேண்டும்.

அதற்கு வன்னி மக்கள் விடுவிக்கப்பட்டு , சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்... அப்போது தான் இந்த கள சாட்சிகளின் போலி முகங்கள் கிழியும்.

அப்படி சிங்களன் மீது தவறில்லை புலிகள் மீது தான் தவறு என்றால் ஏன் சிங்களன் , பன்னாட்டு அமைப்புகளை முகாம்களுக்குள் அனுமதிக்கவில்லை? முகாம்களில் இருந்து தப்பி தமிழகம் போய் பேட்டி கொடுப்பவர்கள் ,சிங்களன் கைக்கூலிகள் என்று நிறுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது...

இதற்கு ஈழத்தமிழர்கள், மக்களை மீட்டு ,சுதந்திரமாக போர்க்குற்றம் பற்றி விசாரிக்க விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது மிக அவசியம்....

இங்குள்ள மக்களில், புலிகளுக்கு ஆதரவாக இருந்த பலர், இத்தகைய கட்டுரைகளை ப்படித்து விட்டு.. புலிகள் மக்களை மனிதகேடயங்களாக பாவித்தது தவறு என என்னுடன் விவாதிக்க த்தொடங்கியுள்ளனர்.

எதிரி தெளிவாக காய் நகர்த்துகிறான் .....

வேலவன், உங்கள் ஆதங்கம் புரிகின்றது.

வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது , சர்வதேசத்தினால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை மக்கள் செறிவாக இருக்கும் பகுதிகளில் ஸ்ரீ லங்கா அரசு பாவித்ததற்கு அத்தாட்சியாக , ஐக்கிய நாடுகள் சபை செய்மதிப் படங்களை எடுத்து வைத்துக்கொண்டு கமுக்கமாக இருந்த போது ........ வெளியில் கொண்டு வந்தவர் ஒரு மேற்குலக ஆங்கில பத்திரிகையாளர் . அதன் பின்பே ஐக்கிய நாடுகள் சபை தனது படங்களை வெளியிட்டது . அதன் பின்பும் பான் கி மூன் என்பவர் ஸ்ரீலங்கா அரசை கண்டிக்காமல் ...... போர் நடந்த பகுதிக்கு விஜயம் செய்கின்றேன் என்று பம்மாத்து காட்டிப்போட்டு , கண்டிக்குப் போய் விருந்துண்டு மகிழ்ந்த ஐ.நா.வும் ,

உலகின் ஜனநாயகம் பேசும் பெரிய வல்லரசு நாடுகளும் , ஐரோப்பிய யூனியனும் தமிழர் மீது நடந்தது கொடூரமான தாக்குதல் என்று அறிந்தும் மௌனமாக இருக்கும் போது ......

யாருக்கு நியாயத்தை எடுத்து சொல்ல ?

உண்மையில் நித்திரையாக இருப்பவனை தட்டி எழுப்பலாம் .

ஆனால் நித்திரை போல் நடிப்பவனை எக்காலத்திலுல் தட்டி எழுப்பமுடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பை நீங்கள் ஊர்ப்புதினம் பகுதியில் பதிந்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

  • தொடங்கியவர்

வேலவன், உங்கள் ஆதங்கம் புரிகின்றது.

வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது , சர்வதேசத்தினால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை மக்கள் செறிவாக இருக்கும் பகுதிகளில் ஸ்ரீ லங்கா அரசு பாவித்ததற்கு அத்தாட்சியாக , ஐக்கிய நாடுகள் சபை செய்மதிப் படங்களை எடுத்து வைத்துக்கொண்டு கமுக்கமாக இருந்த போது ........ வெளியில் கொண்டு வந்தவர் ஒரு மேற்குலக ஆங்கில பத்திரிகையாளர் . அதன் பின்பே ஐக்கிய நாடுகள் சபை தனது படங்களை வெளியிட்டது . அதன் பின்பும் பான் கி மூன் என்பவர் ஸ்ரீலங்கா அரசை கண்டிக்காமல் ...... போர் நடந்த பகுதிக்கு விஜயம் செய்கின்றேன் என்று பம்மாத்து காட்டிப்போட்டு , கண்டிக்குப் போய் விருந்துண்டு மகிழ்ந்த ஐ.நா.வும் ,

உலகின் ஜனநாயகம் பேசும் பெரிய வல்லரசு நாடுகளும் , ஐரோப்பிய யூனியனும் தமிழர் மீது நடந்தது கொடூரமான தாக்குதல் என்று அறிந்தும் மௌனமாக இருக்கும் போது ......

யாருக்கு நியாயத்தை எடுத்து சொல்ல ?

உண்மையில் நித்திரையாக இருப்பவனை தட்டி எழுப்பலாம் .

ஆனால் நித்திரை போல் நடிப்பவனை எக்காலத்திலுல் தட்டி எழுப்பமுடியாது .

அதற்கு காரணம் நாம் தூங்குவதால் அவர்கள் தூங்குவது போல் நடிக்கின்றனர்...

நடிப்பவர்களை சும்மா நடிக்க விடக்கூடாது ..... சத்தம் எழுப்பவேண்டும் காதுக்குள் குச்சியை விட்டு குடைய வேண்டும்...

இம்சைபடுத்திக்கொண்டே இருந்தால் எழுவார்கள் வேறு வழியின்றி!

இந்த தலைப்பை நீங்கள் ஊர்ப்புதினம் பகுதியில் பதிந்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

மாற்றிவிட்டேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.