Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களுக்கு அமைதியே உடனடித் தேவை: அகதிகளுக்கான ஐ.நா. தூதரக அதிகாரி

Featured Replies

வன்னியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவை அமைதியே என்று அந்த முகாம்களில் பணியாற்றிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்போது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதரக கனேடிய சட்ட அதிகாரியாகப் பணியாற்றிவரும் டெனிசி ஒட்டிஸ் என்ற பெண்மணி, தூதரக வார ஏட்டுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

முகாம்களில் உள்ள மக்களின் நிலை மற்றும் சூழல் பற்றி அவர் விபரித்துள்ளார். அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் பணியாளர்கள் மத்தியில் பெரிதும் படிக்கப்படுவது இந்த வார ஏடு.

வன்னி அகதி முகாம்களில் பணியாற்றிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரக அவசர உதவிக் குழுவின் உறுப்பினராக இருந்த அவர் அண்மையிலேயே கனடா சென்றிருந்தார்.

அவரது நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விபரம் வருமாறு:

நாங்கள் மனித உரிமை ஆர்வலர்களாகவே பெரியளவில் கருதப்பட்டோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக காலை 8:00 மணிக்கு முன்னரும் மாலை 6:00 மணிக்குப் பின்னரும் வீதிகளில் இருப்பதற்கு எமக்கு அனுமதி கிடையாது.

பொதுவாகச் சொல்வதானால் நாம் அங்கு இருக்கும்போது மக்கள் மோசமாக நடத்தப்பட்டமையை பார்க்கவில்லை. ஆனாலும் அடிமட்ட நிலையில் அந்த மக்கள் முட்கம்பி வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார்கள். பொதுவாகச் சொன்னால் அங்கு நடமாடும் சுதந்திரம் இல்லை. ஆனால் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களுக்கான அடிப்படை விதி.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களுக்கான நியதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதன் முதல் விதியே அவர்களுடைய நடமாட்ட சுதந்திரம்தான்.

ஆழிப்பேரலை தாக்கியபோது உட்பட இலங்கையில் இதற்கு முன்னரும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

மக்களை அடைத்து வைத்திருப்பதற்கான முதன்மைக் காரணமாக அரசு கூறுவது பாதுகாப்பு. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அதனை ஏற்றுக்கொண்டுள்ளது என்றே நினைக்கிறேன். இருந்தாலும் இன்னும் அவர்கள் அடைத்தே வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களைச் சுற்றிலும் உள்ள பிரதேசம் படைமயப்பட்டுள்ளது. தொடக்கத்தில் படையினரும் இந்த முகாம்களில் மக்களுடன் சேர்ந்திருந்தார்கள். ஆனால் பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரிலேயே இந்த வெளியேற்றம் நடந்தது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அது மற்றொரு விதி. முகாம்கள் படைமயப்படுத்தப்படக்கூடாது.

எப்படி இருப்பினும் முகாம்களின் வெளிப்பகுதி பெரிதும் படைமயப்பட்டே உள்ளது. ஆனால் உள்ளே பொதுமக்கள் மட்டுமே இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். என்ன இருந்தாலும் அது விதிமுறைக்கு மாறானது.

முகாம்களில் உட்கட்டுமானம் தேவையான அளவுக்கு இல்லை. ஆனாலும் மக்கள் வசிப்பதற்கு தங்களால் முடிந்ததை அதிகாரிகள் செய்திருக்கிறார்கள்.

அவர்கள் முன்னர் வசித்த பகுதிகள் எல்லாமே கண்ணிவெடிகளால் சூழப்பட்டிருக்கின்றன என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் அவர்களை சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவதில் ஆபத்துக்கள் இருக்கவே செய்கின்றன. அதுவரைக்கும் அவர்கள் (அரசு) தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். நான் நினைக்கிறேன், அந்த மக்களுக்கு உணவு அளிப்பது குறித்தே அதிகாரிகள் அதிகம் சிந்திக்கிறார்கள் என்று. ஆனாலும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுதான் பிரச்சினையே.

பாகிஸ்தானில் மக்கள் தமது குடும்பத்தினருடன் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு செல்வதற்கு வசதி இன்றி இருந்தவர்களுக்கு முகாம் வசதிகள் செய்யப்பட்டன. ஆனால் அந்த மக்களுக்கு நடமாட்டச் சுதந்திரம் இருந்தது. அவர்கள் முகாம்களைவிட்டு வெளியேறிச் செல்வதற்கான சாத்தியங்களும் இருந்தன.

அமைதி அந்த மக்களுக்கு உடனடியாகத் தேவை. எல்லோரையும் போலவே தமிழர்களும் அமைதியுடன் வாழவே ஆசைப்படுகிறார்கள். தமது பிள்ளைகளை அமைதியாக வளர்க்கவே விரும்புகிறார்கள். போர் எப்போதுமே போர்தான். ஒரு கட்டத்தில் நீங்கள் அமைதிக்குத் திரும்பியாக வேண்டும். அதுதான் இப்போது அந்த மக்களில் பெரும்பான்மையானவர்களுக்குத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.