Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடரும் கடும் மழை: வவுனியா மெனிக் பாம் முகாம் மக்களின் அவலங்களைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை

Featured Replies

தொடரும் மழை காரணமாக வவுனியா மெனிக் பாம் முகாம்களில் சிறிலங்காப் படையினரால் பலவந்தமாக அடைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ள போதிலும், நிலைமைகளைச் சீராக்குவதற்கு அரசோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என தமிழ் அரசியல் வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இதனால் முகாம்களில் உள்ள சுமார் மூன்று லட்சம் மக்களும் பெரும் அவலத்தை எதிர்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள முகாம்களில் உள்ளவர்கள் பெரும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டிருக்கின்றனர்.

flood_20090816001.jpg

flood_20090816002.jpg

இவை தொடர்பாக அரசுக்கும் பல தரப்புக்களில் இருந்தும் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் அரசு மேற்கொள்ளவில்லை.

கொட்டும் மழையைத் தொடர்ந்து பெருக்கெடுத்துள்ள பெருவெள்ளம் மெனிக் பாமில் உள்ள 2, 3, மற்றும் 4 ஆவது பிரிவு முகாம்களுக்குள் நிரம்பியுள்ளதால் அந்த முகாம்களில் இருந்த சுமார் ஒரு லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறி வெற்று நிலப்பரப்பில் இருப்பதாகவும், சிலர் வெளியே இடவசதி இல்லாமையால் முகாம்களுக்குள்ளேயே தொடர்ந்தும் மூன்றாவது நாளாகவும் வெள்ளத்துக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெருவெள்ளம் வேகமாக அடித்துச் சென்றதால் முகாம்களில் உள்ளவர்களுக்காக என அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மலசலகூடங்கள் பலவும் சேதமடைந்துள்ளதுடன், அதற்குள் இருந்த கழிவுகள் வெள்ளத்துடன் மக்கள் வசிக்கும் கூடாரங்களுக்குள் புகுந்து இருப்பதாகவும் இதனால் பெரும் சுகாதாரக் கேடுகள் ஏற்படலாம் எனவும் மனிதநேய அமைப்புக்கள் பலவும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன், ஏற்கனவே போதாத நிலையில் இருந்த மலசலகூட வசதிகள் இதன் மூலம் முற்றாக இல்லாமல் போய் உள்ளது.

பெருவெள்ளத்தினால் உருவாகியிருக்கும் அவலநிலை, மக்களை வெளியே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு சிறிலங்காப் படையினர் அனுமதிக்காததது என்பன மக்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

flood_20090816003.jpg

flood_20090816004.jpg

கொட்டும் மழையில் நனைந்துகொண்டு, வெள்ளத்துக்குள் நிற்கும் அவர்கள் தமது கைக்குழந்தைகள், நோயாளர்களைப் பாதுகாப்பதற்கு தம்மை வெளியே செல்ல அனுமதிக்குமாறு விடுக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் படையினரின் பாதுகாப்பை உடைத்துக்கொண்டு வெளியேறுவதற்கு மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஆயுதம் தாங்கிய படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, மேலதிக தரைப்படையினரும், காவல்துறையினரும் கொண்டுவரப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றது. முகாம்களில் இருந்து தப்பிச் செல்வதற்கு யாராவது முனைந்தால் அவர்கள் சுடப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட முகாம்கள் தாழ்வான பகுதியில் இருப்பதாலும், முறையான வடிகால் திட்டங்கள் செய்யப்படாமையாலும் மழைக்காலத்தில் பெரும் அனர்த்தங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என மனிதாபிமான அமைப்புக்கள் பலவும் தொடர்ந்தும் எச்சரித்துவந்த போதிலும் அதனையிட்டு அரசு எந்தவிதமான கரிசனையும் காட்டாமையால்தான் தற்போது இந்த அவலநிலை உருவாகி இருப்பதாக தமிழ் வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன.

flood_20090816005.jpg

கழிவுகளை அகற்றும் வசதிகள் போதுமானதாக இல்லை என்பதுடன், இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள் கடும் மழைக்கு உடைந்து விழுந்துவிடக்கூடிய தன்மையைக் கொண்டவையாக இருப்பதாகவும் மனிதாபிமான நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜீவன் தியாகராஜா இரண்டு மாத காலத்துக்கு முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தார். இருந்தபோதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனையிட்டு எந்தவிதமான அக்கறையும் காட்டவில்லை.

தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக மிகவும் மோசமான நிலை உருவாகியிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டிருககும் அரச அதிகாரிகள், இவ்வாறு ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களில் சுமார் 1,000 பேர் மெனிக் பாம் முகாமில் உள்ள வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

சுமார் 1,000 பேர் முகாமுக்குள்ளேயே வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்த வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ள்ஸ், முகாமின் நான்காவது வலயத்திலேயே மோசமான நிலை காணப்படுவதாகவும், அங்கு வடிகால் அமைப்பு வேலைகள் குறிப்பிட்ட காலத்தில் பூர்த்தியடையவில்லை எனவும் தெரிவித்தார்.

"அதனால்தான் அந்தப் பகுதி முகாமில் உள்ளவர்கள் பெருமளவு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள். மழை தொடர்ந்தால் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனவும் வவுனியா அரச அதிபர் தெரிவித்தார்.

இவர்களுக்கு அரசு தொடர்ந்தும் சமைக்கப்பட்ட உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தொடர்ந்தும் வழங்கிவருகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

flood_20090816006.jpg

flood_20090816007.jpg

முகாம்களில் பாதிப்புக்குள்ளானவர்கள் இருத்துவதற்காக சில பாடசாலைகளை தாம் அடையாளம் கண்டிருப்பதாகவும் தெரிவித்த அரச அதிபர், ஆனால், முகாம் பகுதி சேறும் சகதியுமாகக் காணப்படுவதால் அங்குள்ள மக்களை வெளியேற்றுவதற்கு முடியாது இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலைமைகள் காரணமாக முகாமுக்கு குடிதண்ணீர் பெளசர்களைக் கூட அனுப்ப முடியாது இருப்பதாக மனிதாபிமான அமைப்புக்களின் பணியாளர்கள் பலரும் தெரிவிக்கின்றார்கள். குடிநீருக்குக் கூட பெரும் நெருக்கடி இதனால் உருவாகி இருக்கின்றது.

இதனைவிட முகாம்களில் உள்ள மக்களுக்கு பொதுவாகவே உணவு சமைக்கப்படுவதாகவும், இதற்காக வழங்கப்பட்ட உலர் உணவுகள் மழையில் நனைத்திருப்பதாலும், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் விறகு ஈரமாகி இருப்பதாலும் முகாம்களில் சமைப்பது சாத்தியமற்றதாகி இருப்பதால் பாரிய உணவு நெருக்கடியும் ஏற்பட்டிருக்கின்றது.

முகாம்களில் வழமையாக ஒரு நேர உணவே வழங்கப்படுவதாகவும், ஆனால், கடந்த மூன்று - நான்கு நாட்களாக அதனைக்கூட வழங்க முடியாதநிலை ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.