Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவர்கள் எதைக் கொடுப்பார்கள் ? நாம் பெற்றுக் கொள்ள?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் எதைக் கொடுப்பார்கள் ? நாம் பெற்றுக் கொள்ள? GTN ற்காக டி.அருள் எழிலன்:

இலங்கை அரசு இன்று பல் வேறு மட்டங்கள் ஆழ ஊடுறுவி தாக்குதல் நடத்துகிறது. தமிழகம், புலம்பெயர் நாடுகள் என பாசிச பயங்கரவாத அரசின் கொலைக்கரங்கள் கடல் தாண்டியும் நீளும் சூழலில் முகாம்களில் இருக்கும் மக்களைக் காட்டி உலகெங்கிலும் பிச்சை எடுக்கும் இந்த பிச்சைக்காரர், முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கவோ, கைது செய்யபப்ட்டிருப்பவர்கள் தொடர்பான வெளிப்படையான தன்மை கொண்டோ இயங்கத் தயாராக இல்லை.

13 ‐ வது திருத்தம் குறித்து சர்வக்கட்சிக்கூட்டம் இப்போது அதற்கும் மேலதிகமான தீர்வு ஆனால் அதற்கும் சர்வக்கட்சிக் கூட்டம் என்று ஏற்கனவே ஏமாந்த கூட்டம் ஒன்றைப் பற்றிய கவலை இல்லாமல் உலக நாடுகளை மட்டும் ஏமாற்ற இப்போதிந்த நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அம்மக்கள் எவ்வகையில் இந்தத் தீவில் இனி ஐக்கியமாக வாழ முடியும். பலவீனம்ப்பட்ட மக்களின் முடக்கப்பட்ட வாழ்வை ஒரு வாய்ப்பாக பயனப்டுத்திக் கொள்கிற ஏனைய இனங்கள் தமிழ் மக்களைக் கட்டிலும் தாங்கள் அரசியல் ரீதியாகவும் குடிமக்கள் ரீதியாகவும் வலுவுள்ளவர்களாக காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.

சமீபத்தில் ஒரு தன்னார்வக் குழுவைச் சார்ந்த கிழக்கு மாகாண நண்பர் ஒருவரைச் சந்தித்த போது அவர் இப்படிச் சொன்னார். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களைக் காட்டிலும் முஸ்லீம்கள் அதிகம் என்ற அந்த நண்பரும் இஸ்லாமிய இனத்தைச் சார்ந்தவரே. புலிகள் கடந்த காலங்களில் இஸ்லாமிய மக்களை துரத்தி விட்டதோடு இஸ்லாமிய தமிழர் பிளவு துவங்குகிறது. ஆனால் இந்தப் பிளவு எவ்வகையிலும் சரி செய்யப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது இலங்கை அரசு. புலிகளால் கடந்த காலங்களில் இஸ்லாமிய மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு தமிழர் அரசியலில் சில மட்டங்களில் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு இருந்து வந்ததையும் மறுக்க முடியாது.

ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் கிழக்கில் தனித்த அரசியல் சக்திகளாக உருப்பெற்ற இஸ்லாமிய மக்களளின் தலைவர்கள் அம்மக்களது மைனாரிட்டி உரிமை தொடர்பாகக் கூடப் பேசியதில்லை. மாறாக கிழக்கில் இருந்து உருவான முஸ்லீம் தலைமைகளோ சிங்கள இனவெறிப்பாசிஸ்டுகளின் அரசில் பங்கேற்று பதிவி சுகம் அனுபவித்துக் கொண்டனர்.

புலிகள் இப்போது இல்லை அவர்களை முற்று முழுதாக அழித்து விட்டதாக இலங்கை அரசு சொல்கிறது. மாறாக ஆயுதம் ஏந்தாத, நாளை ஆயுதம் ஏந்தும் புலிகளாக வன்னி மக்களைப் பார்க்கிறது. ஆனால் இது காலமும் வன்னிக்குள் பேசப்படாத, புறக்கணிக்கப்பட்ட, துரத்தப்பட்ட இஸ்லாமிய மக்கள் இன்று தமிழர் அரசியல் தரப்பில் உருவாகியுள்ள இடைவெளியை தமதாக்கும் முயர்ச்சியில் இருக்கிறார்கள். சமீபத்தில் யாழ் தேர்தலில் பெரும்பாலான தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்த நிலையில் இஸ்லாமிய வாக்கு வங்கி அங்கு செல்வாக்குச் செலுத்தியது. விளைவு 4 இஸ்லாமிய வேட்பாளர்கள் அங்கு தேர்வானார்கள். இது நல்ல விஷயம்தான் ஆனால் இஸ்லாமிய சகோதர்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காவும். அவர்களின் வாழ்வுரிமைக்காவும் தமிழ் மக்களோடு சேர்ந்து இலங்கை அரசிற்கு எதிராக அரசியல் இயக்கம் கட்ட வேண்டும். சிறுபான்மை அரசியல் அடையாள அழிப்பு என்பதற்கு முதலில் தமிழ் மக்கள் பலியானாலும் அடுத்த பலி இஸ்லாமிய மக்களே என்பதை சிறுபான்மை தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் உணரவேண்டும்.

தவிரவும் ஒரு பக்கம் இஸ்லாமிய அரசியல் அடையாளத்தை பயங்கரவாத இலங்கை அரசோடு இணைத்துப் பார்க்கிற சூழுலில் வன்னி மக்களின் முகாம்களுக்குள் இந்தியாவின் ஏராளமான இந்துத்துவ அமைப்புகள் ஊடுறுவியிருப்பதாகவும் தெரிகிறது. நிவாரணங்கள், அரசியல் உரிமைகள் என்றெல்லாம் பேசும் இவர்கள் இலங்கைப் பிரச்சனையை பௌத்தற்கர்ளுக்கும் இந்துக்களுக்குமான பிரச்சனையாக அதை மாற்றுகிறார்கள். பிரச்சனையை அவரவர் மத ரீதியாக அணுகுவது இலங்கையின் இனப்பிரச்சனையை தீர்க்க உதவாது என்கிற நிலையில் இன்றைய சிங்களப் பேரினவாதம் என்பது பௌத்த மதத்தோடு பின்னிப் பிணைந்து நிறுவனமயப்பட்டிருப்பதை தவிர்த்து விட்டும் இப்பிரச்சனையை அணுக இயலாது என்றே தோன்றுகிறது.

சிங்களப் பெரும்பான்மை வாதம் என்பது பௌத்த பெருமிதங்களால் ஆனது. இலங்கைத் தீவை காக்கப் பிறந்தவர்கள் சிங்களர்களாகவும், சிங்கள பேராண்மையை அழிக்க இந்தியாவின் துர்சக்திகளாக தமிழ் மக்களும் இருப்பதான ஒரு சிந்தனை மரபு சிங்கள மக்களிடையே இன்று வேரோடிப் போயிருக்கிறது. இந்த பெரும்பான்மைவாத நெருப்பு சிறுபான்மை இஸ்லாமிய மக்களை விட்டு வைக்கப் போவதில்லை என்பதை உணரவேண்டும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பேரினவாதம் மலையாளிகளுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் துவங்கி அது தமிழ் மக்களிடம் வந்து சேர்ந்ததை அவர்கள் மறந்து விடக் கூடாது. இன்று தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களின் சொத்துக்களும் இந்திய முதலாளிகளால் சூறையாடப்படுகின்றன.

அதே நேரம் புலிகளின் பெருமளவிலான சொத்துக்களும் நிதிகளும் தமிழ் மக்களின் சொத்துக்களே. அது புலத்தில் ஈழ மக்கள் இரத்தமும் குருதியும் சிந்தி உழைத்து சேர்த்தப் பணம். அந்தப் பணம் தாயக விடுதலை, ஆயுதப் போராட்டம் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் புலத்து மக்களால் புலிகளுக்கு வழங்கபப்ட்டது. அந்தப் பணத்தையோ சொத்துக்களையோ இலங்கை அரசு குறிவைப்பது என்பது. பிணத்தில் நெற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு ரூபாயை எடுக்க ஆசைபப்டும் ஒருவரின் ஆசையை ஒத்தது. அந்தப் பணத்திற்கான தேவை மக்களுக்கே உள்ளது. பெருமளவிலான ஊனமான எம் தமிழ் மக்களின் நிவாரணங்களுக்கு அவை எவ்வகையிலேனும் ஒப்படைக்கபப்ட வேண்டும். தவிறவும் வன்னி மக்களின் வாழ்வாதரங்களை மீட்டு இயல்பு நிலைக்கு அவர்கள் திரும்ப அப்பணம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே என் கருத்து.

மாறாக ஊனமான மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கி வைத்து விட்டு அன்றாடம் அவர்களை சித்திரவதை செய்யவும் உலக நாடுகளிடம் இவர்களைக் காட்டி கையேந்தவும் பயன்படுத்தி விட்டு நிரந்தரமாகவே அவர்களை வலுவிழந்தவர்களாக ஆக்க இலங்கை அரசு திட்டமிடுகிறது என்பது தெரிகிற சூழலில். இந்தியா இப்போது முகாம் வாசிகள் குறித்தோ, மறுவாழ்வு குறீத்தோ, 13‐வது சட்டத்திருத்தம் குறீத்தோ பேச மறுக்கிறது. 13‐வது சட்டத் திருத்தத்தின் கீழ வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது மட்டுமே தமிழர் தாயகத்தின் மிகக் குறைந்த உரிமையும் சிறந்த உரிமையாகவும் இருந்தது. ஆனால் அப்படியான இணைப்பின் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கான தாயக்த்தை தானே வகுத்துக் கொடுத்தது போலாகிவிடும் என்று அடாவடித்தனமாக அதை மறுக்கிற இலங்கை அரசு ஒரு பக்கம், இன்னொரு பக்கம் தன் சந்தை நலனுக்கு உகந்ததாக வடக்கு, கிழக்கு இணைப்பு இருந்து தமிழர் தரப்பை வலுப்படுத்துவதே தன் நலனுக்கு எதிராக அமைந்து விடக் கூடும் என்று இந்தியா கருதுகிறது.

ஆகவே அவர்கள் அங்கு மயான அமைதி நிலவுவதையே இந்தியா விரும்புகிறது. பிராந்திய அரசியல் வலிமையிலும் இராணுவ வலிமையிலுமே இந்தியா இலங்கை கையாண்டு விடலாம் என்று நம்புகிறது. எண்பதுகளில் இருந்த இந்தியாவின் நம்பிக்கைக்கும் இன்றைக்கு இருக்கும் இந்தியாவின் நம்பிக்கைக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருப்பதை அவதானிக்க முடிகிறது. அன்றைய சூழலில் இலங்கைக்குள் குழப்பம் நிலவுவதை இந்தியா விரும்பியது இப்போது ஒன்று பட்ட இலங்கைக்குள் சந்தையை மட்டுமே குறிவைக்கிறது. அதற்கு தமிழ் மக்கள் குறித்தோ இனப்பிரச்சனை குறித்தோ இந்தியாவுக்கு அக்கறை இல்லை. இந்தச் சந்தை நலன், வர்த்தக வெறி, லாபம் எல்லாமே பிராந்திய ஏகாதிபத்திய அரசியலில் ஒற்றை நோக்கமாக இருக்கிறது.

இப்படியான சூழலில் ஈழம் சாத்தியமே இல்லையா? என்றால் சரியாகச் சொன்னால் இலங்கைக்குள் சிங்களர்களோடு தமிழ் மக்கள் சேர்ந்து வாழும் சாத்தியங்கள் இல்லை என்று சொல்லலாம். நீங்கள் கேட்பது இங்கு கிடைக்காது நாங்கள் கொடுப்பதை பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் பேரினவாதி ராஜபக்ச. நாமோ ஒடுக்கும் தேசீய இனத்தைச் சார்ந்த மக்களின் தேவைகளை எந்த ஒடுக்கிற இனம் கொடுத்தது கேட்டதெல்லாம் கிடைக்கும் என்றால் போராட்டங்களே அவசியம் இல்லையே?

ஆனால் இலங்கைக்குள் நிலவும் சுழுல் மீண்டும் மீண்டும் ஒன்றை நமக்கு உணர்த்துகிறது தமிழ் மக்களுக்கு இருப்பது சில தேர்வுகள்தான் ஒன்றிலோ அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அல்லது தங்களின் நிலங்களைக் கூட சிங்களர்வர்களிடம் கொடுத்து விட்டு எவ்வித உரிமைகளுமற்ற அடிமைகளாக வாழ வேண்டும். அல்லது சிங்கள அடையாளத்தோடு ஒன்று கலக்க வேண்டும். இந்த மூன்றில் எதாவது ஒன்றூ மட்டுமே அவர்கள் கொடுக்க விரும்பும் தீர்வு.

இதனை தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ள மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தயார் படுத்தப்படுவதற்கான கருத்துக்களை புலம்பெயர் தமிழர்கள் சிலரே புலத்திலும் இந்தியாவிலும் செய்கிறார்கள். அவர்கள்தான் முதலில் புலிப்பாசிசம் என்றார்கள். புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயனப்டுத்தினார்கள் என்கிறார்கள். பெருந்தொகையான மக்களை புலிகள் கொன்று குவித்தார்கள் என்கிறார்கள். மறக்காமல் ஈழம் சாத்தியமில்லை எனவும் கூறுகிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் பேச மறுக்கிற, அல்லது புலி எதிர்ப்பு கோஷயங்களினூடாக மௌனமாகிற ஒன்று இலங்கை அரசின் பயங்கரவாதப் பாசிசம்.

ஒன்றை சத்தமாக பேசுபவர்கள் மௌ;ள எல்லா நடவடிக்கைகளையும் கைவிடக் கோருகிறார்கள். இது தமிழ் மக்களுக்கு எழுந்துள்ள அச்சுறுத்தலான காலம். கூட்டாக இதை எதிர்கொள்வதன் மூலமே இலங்கை அரசை மட்டுப்படுத்த முடியும். ஒடுக்குமுறைகளுக்கு அப்பாலான நீதிக்காக போராட வேண்டிய தருணத்தில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதை புலத்தில் உள்ள தமிழர்கள் புரிய வேண்டும். என்கிற நிலையில் இப்போதைக்கு சிறுபான்மை மக்களுக்கு இலங்கையில் நேர்ந்துள்ள கடும் அச்சுறுத்தல்களை எல்லாம் கடந்து அவர்கள் எதையும் கொடுக்கப் போவதும் இல்லை, தமிழ் மக்கள் எதையும் பெற்றுக் கொள்ளப் போவதும் இல்லை. இலங்கையின் இனவெறிப் பாசிசம் இன்று நமக்கு ஒன்றே ஒன்றை உணர்த்துகிறது. அது இலங்கைத் தீவில் சிங்களர்களோடு தமிழ் மக்கள் சேர்ந்து வாழ முடியாது என்பதைத்தான்.

updated - 2009-08-20மூலம் - GTN ற்காக டி.அருள் எழிலன்

நன்றி - குளோபல் தமிழ் செய்தி

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.