Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் இலங்கைக்கு இந்தியா உதவியது எப்படி ? அம்பலப்படுத்துகிறது புத்தகம்

Featured Replies

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கைக்கு இந்தியா எப்படியெல்லாம் மறைமுகமாக உதவியது என்பதை அம்பலப்படுத்தும் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

"ஸ்ரீலங்கா - போரிலிருந்து அமைதிக்கு" ("Sri Lanka - From War to Peace") என்ற புத்தகம் ஒன்றை நிதின் கோகலே என்பவர் எழுதியுள்ளார்.

அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கைக்கு இந்தியா எப்படியெல்லாம் ரகசியமாக உதவியது என்பது விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய கடற்படை அளித்த முக்கியமான புலனாய்வு தகவல் காரணமாகவே, புலிகளின் ஆயுத கப்பல்கள் நிற்கும் இடம்பற்றிய தகவல்கள் இலங்கை கடற்படைக்கு தெரிய வந்து, 12 க்கும் அதிகமான ஆயுத கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் நிதின் அதில் கூறியுள்ளார்.

இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட எந்த ஒரு இராணுவ உதவிகளையும் அளிக்கவில்லை என்று மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மறுத்துவந்தபோதிலும், 2006 ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே எம்ஐ - 17 ரகத்தைச் சேர்ந்த 5 ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா அளித்தது.

ஆனால் அந்த ஹெலிகாப்டர்களுக்கு, இலங்கை விமானப்படை வண்ணத்தை பூசி பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் இலங்கை விமானப்படைக்கு இந்தியா விதித்திருந்ததாகவும், அப்போது அரசுக்கு ஆதரவளித்த முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் அந்த புத்தகத்தில் கோகலே எழுதியுள்ளார்.

அதிலும் இலங்கை இராணுவத்திற்கு இந்திய கடற்படை அளித்த உதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.குறிப்பாக 2002 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படைக்கு, இந்திய கடலோர காவல் படை 'சுகன்யா' என்ற ஆழமற்ற கடலில் பயணிக்கக்கூடிய ரோந்து கப்பல்களை வழங்கியது.இவை இலங்கை விமானப்படைக்கு மிகுந்த உதவியாக இருந்துள்ளன.

இலங்கை இராணுவத்தினரின் ஊடுருவும் படையினர் விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டபோது, அவர்களை இந்த கப்பல்களை பயன்படுத்திதான் இலங்கை விமானப்படையினர் காப்பாற்றியதாகவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதிகளில் நடைபெற்ற சண்டையின்போது காயமடைந்து சிக்கி தவித்த இலங்கை படையினர், இதில் ஏற்றப்பட்டுதான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார் கோகலே.

அத்துடன் விடுதலைப்புலிகளின் மிதவை ஆயுத இருப்பு கப்பல்களின் இடத்தை கண்டுபிடித்து, அது குறித்த தகவலை இலங்கை கடற்படைக்கு இந்திய கடற்படைதான் தெரிவித்ததாகவும், அவ்வாறு கிடைத்த தகவல் காரணமாகவே புலிகளின் 10 மிதக்கும் ஆயுத கப்பல்களை அழிக்கமுடிந்ததாகவும் இலங்கை கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் வாசந்தா கரன்னகோட தெரிவித்திருந்ததையும் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கோகலே.

மேலும் கடந்த 2002 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்திய மற்றும் இலங்கை கடற்படையினரிடையே காணப்பட்ட அபரிதமான ஒத்துழைப்பால்தான், புலிகளை போரில் தோற்கடிக்க முடிந்ததாக இரு நாட்டு கடற்படை வட்டாரங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்த புத்தகத்தில் கோகலே மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.parantan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.