Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எரித்திரியாவில் சிறீலங்காத் தூதரகம் ஒன்றை நிறுவத் தீர்மானம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புச் செய்தியாளர் மயூரன் 24/08/2009, 14:56

எரித்திரியாவில் சிறீலங்காத் தூதரகம் ஒன்றை நிறுவத் தீர்மானம்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பை துடைத்தழிப்பதற்கு எரித்திரியாவில் தூதரகம் ஒன்றை சிறீலங்கா அரசு நிறுவ உள்ளது எனத் தெரியவருகிறது.

எரித்திரியா உட்பட சில நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் செல்வராசா பத்மநாதன் வழங்கியுள்ளார்.

எரித்திரியா சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களை இடம்பெறுவதாகவும் இந்த நிலையில் தூதரகம் ஒன்றை அங்கு அமைக்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

பதிவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலைப்பின்னலை சிதறடிக்கும் நோக்கத்துடன் எரித்திரியாவில் தூதரகம் ஒன்றை தொடங்குவதற்கு சிறிலங்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் செயலாளர் நாயகம் செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்ட பின்னரும் எரித்திரியாவில் புலிகளின் நடவடிக்கைகள் செயல்திறனுடன் இருப்பதை அடுத்து அரசு இந்த முயற்சியில் இருப்பதாக வெளிவிவகாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதியோப்பியாவில் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பு 1993 ஆம் ஆண்டில் எரித்திரியாவுக்கு தமது நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டது என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

சிறிலங்காப் படைத்துறையினரால் மலேசியாவில் கடத்தப்பட்டு சிறிலங்காவுக்கு பலவந்தமாகக் கொண்டுவரப்பட்ட செல்வராசா பத்மநாதன், விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலைப்பின்னல் தொடர்பாக வழங்கிய தகவல்களை அடுத்தே அரசின் இந்த நகர்வு மேற்கொள்ளப்பபட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

கப்பல் போக்குவரத்துக்கான முக்கிய இடமாக எரித்திரியா அண்மைக் காலங்களில் பாரியளவில் வளர்ச்சி அடைந்திருந்தது. அங்கு முறைசாரா ஆயுத விற்பனைத் தரகர்களில் முக்கியமானவர்களின் புகலிடமாகவும் அது மாறியிருந்தது. தமது ஆயுதக் கொள்வனவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காகவே புலிகளும் தமது நடவடிக்கைகளை அங்கு மாற்றிக்கொண்டு விரிவுபடுத்தினார்கள் என அரச அதிகாரிகள் கூறுகின்றனர்.

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் அமெரிக்க அனைத்துலக உறவுகள் குழு விடுத்த அறிக்கையில் எரித்திரிய அரசு விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவிகளை வழங்கி வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எரித்திரியாவுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்கள் கடந்த பல வருடங்களாகவே வெளியாகி வந்துள்ளன.

எரித்திரியாவின் கடல் பகுதியில் புலிகள் அமைப்பின் கப்பல்கள் தரித்து நிற்பதாகவும், அங்குள்ள ஆயுதக் குழுக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்து வருவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், எதிரித்திரிய நாட்டுத் தலைவருக்கு 2006 ஆம் ஆண்டில் நேரடியாக தொலைநகல் மூலம் செய்தி ஒன்றை அனுப்பி வைத்தார் என்றும் கூடக் கூறப்படுகின்றது.

புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 25, ஆகஸ்ட் 2009 (22:38 IST)

விடுதலைப்புலிகளின் தொடர்புகளை துண்டிக்க எரித்திரியாவில் இலங்கை தூதரகம்

விடுதலைப் புலிகளின் செயலாளர் செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்ட பின்னரும் எரித்திரியாவில் புலிகளின் நடவடிக்கைகள் செயல்திறனுடன் இருப்பதை அடுத்து இலங்கை அரசு அதிரடி முயற்சியில் இறங்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்புகளை துண்டிக்கும் நோக்கத்துடன் எரித்திரியாவில் தூதரகம் ஒன்றை தொடங்குவதற்கு இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று வெளிவிவகாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதியோப்பியாவில் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பு 1993 ஆம் ஆண்டில் எரித்திரியாவுக்கு தமது நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டது என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

செல்வராசா பத்மநாதன், விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்புகள் தொடர்பாக வழங்கிய தகவல்களை வைத்தே அரசின் இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் அமெரிக்க அனைத்துலக உறவுகள் குழு விடுத்த அறிக்கையில் எரித்திரிய அரசு விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவிகளை வழங்கி வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எரித்திரியாவுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்கள் கடந்த பல வருடங்களாகவே வெளியாகி வந்துள்ளன.

எரித்திரியாவின் கடல் பகுதியில் புலிகள் அமைப்பின் கப்பல்கள் தரித்து நிற்பதாகவும், அங்குள்ள ஆயுதக் குழுக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், எதிரித்திரிய நாட்டுத் தலைவருக்கு 2006 ஆம் ஆண்டில் நேரடியாக தொலைநகல் மூலம் செய்தி ஒன்றை அனுப்பி வைத்தார் என்றும் கூடக் கூறப்படுகின்றது.

இவற்றையடுத்துதான் இலங்கை அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நக்கீரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.