Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா முகாம்களில் உள்ள புலிகளின் உறுப்பினர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தில் கடந்த 25ம் திகதி இரவு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும், விடுதலைப் புலிகளின் இரண்டு உறுப்பினர்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் வவுனியாவிலுள்ள முகாமொன்றில் அகதிகளாக இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் கடந்த 17ம் திகதி பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்ட பின்னரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்களை விசாரணை செய்வதற்காக கொண்டுசெல்வதாக பாதுகாப்புத் தரப்பினர் உறவினர்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னர், அவர்களின் உறவினர்கள் தமது இரண்டு உறவினர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக முகாம்களில் நிவாரண சேவைகளை வழங்கி வரும் செடெக் என்ற அரசசார்ப்பற்ற நிறுவனத்தின் ஊழியர்களிடம் முறையிட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பினர் தமது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும் அதில் பலன் எதுவும் ஏற்படவில்லை. செடெக் நிறுவனத்தில் உள்ள இலங்கைப் பிரதானியான டேமியன் பெரேரா என்ற கத்தோலிக்க மதகுரு மாலை வேளைகளில் ஜனாதிபதியின் நண்பர் சமுகத்துடன் விருந்துகளில் கலந்துகொள்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த இருவரும் விடுதலைப் புலிகள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளில் மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பயிற்சி கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.ஜாமால்டீன் கொலையுடன் இவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளமை குறித்து கண்டறிந்துள்ளனர்.

காவல்துறை அத்தியட்சகர் கடந்த ஏப்ரல் 5ம் திகதி கல்முனை மருதமுனைப் பகுதியில் பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இந்த நிலையில், அதிரடிப்படையினரால் கந்தபோடி மற்றும் சீலன் ஆகிய இரண்டு விடுதலைப் புலிகள் உறுப்பினர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கந்தபோடியின் மனைவி ஒரு சிங்களப் பெண் எனவும் அவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையிலேயே கந்தபோடி வவுனியா முகாமொன்றில் மறைந்திருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரி ஜமால்டீன் கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் முஸ்லிம் பிரஜையொருவரும், மேலும் இரண்டு விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1...13775&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் ஜனவரி மாதத்தில் படமாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தபோதும் அதை இத்தனை மாதங்கள் தாமதித்து ஒளிபரப்பப்படுவதென்பது நம்பமுடியாத ஒன்று.

அக்காட்சிகள் அனைத்தும் ஈழமண்ணில் தற்போது இன்றைய பொழுதில் நடந்து அரங்கேறும் காட்சிகள் தான் என்பது எனது ஊகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.