Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏதிலி முகாம்கள் தொடர்பாக, அரசு முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்க முயற்சி: த. தே. கூட்டமைப்பு பா.உ. அரியநேத்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதிலி முகாம்கள் தொடர்பாக, அரசு முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்க முயற்சி: த. தே. கூட்டமைப்பு பா.உ. அரியநேத்திரன்

ஏதிலி முகாம்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றன என அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாப்பா ஊடகவியலாளர் மாநாட்டில் கூறுவது, முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் கதையாகவே அமையும் என மட்டு. மாவட்ட த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் பிரியதர்சன யாப்பா, நிவாரணக் கிராமங்கள், இடம்பெயர் மக்களின் முகாம்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள் என கூறியிருந்தமை தொடர்பாக கருத்துக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் மேலும் தெரிவித்ததாவது:-

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள 3 லட்சம் மக்கள் தங்கியுள்ள முகாம்களை நேரில் சென்று பார்வையிடவும் நிவாரணக் கிராமங்களை பார்வையிடவும் அரசாங்கம் அனுமதிக்காது எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றன என அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாப்பா ஊடகவியலாளர் மாநாட்டில் கூறுவது, முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் கதையாகவே அமைந்துள்ளது என்றார்.

கடந்த 3 மாதங்களாக வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு நேரில் செல்வதற்கு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்ட போதும் அரசாங்கம் அதற்கு அனுமதிக்கவில்லை. குறிப்பாக த.தே. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில் போர் இடம்பெற்று அங்கிருந்து வவுனியாவில் மக்கள் இடம்பெயர ஆரம்பித்து கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் இன்று வரையும் சுமார் 6 மாதங்களாக இது போன்ற முயற்சிகள் எடுத்தபோதும் அரசாங்கம் அதற்குஎ அனுமதிக்கவில்லை.

பாதுகாப்பைக் காரணம் காட்டி பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என கோரியபோதும் அதற்கான அனுமதி கேட்டு உரியமுறையில் காண்பித்த போதும் அவைகள் நிராகரிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற அமர்வுகளின் போது பல தடவைகள் த.தே. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியும் இதுவரை இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.

அத்துடன் வவுனியாவில் தங்கியிருக்கும் எமது த.தே. கூட்டமைப்பு உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் ஆராயும் பல்வேறு கூட்டங்கள் வவுனியா கச்சேரியில் நடைபெற்றபோதும் அவர்களை அழைக்கவில்லை.

ஆனால் அரசாங்கம் வெளிநாட்டுப் பிரமுகர்களையும், விரும்பிய சில ஊடகவியலாளர்களையும், தென்பகுதியைச் சேர்ந்த தமக்குப் பிடித்தவர்களையும் அழைத்துச் சென்று ஏற்கனவே தயார்படுத்திய முகாம்களுக்கு மாத்திரம் அழைத்துச் சென்று கிளிப்பிள்ளை கதைகளைக் காண்பிப்பதால் மட்டும் அங்குள்ள உண்மை நிலைமைகளை அறியமுடியாது.

வெறுமனே எதிர்க்கட்சிகள் பொய்கூறுகிறார்கள் என்பதை ஊடக மாநாட்டில் மட்டும் தெரிவித்து தமது பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகிச் செல்ல முடியாது. ஜனநாயக நாடு எனக் கூறிக்கொண்டு எதிர்க்கட்சியினரையும், ஊடகவியலாளர்களையும் செல்லவிடாமல் தடுப்பதென்பது ஜனநாயகமாக இருக்கமுடியாது.

த.தே. கூட்டமைப்பு தொடர்ந்தும் இடம்பெயர்ந்த மக்களை நேரில் பார்வையிடவும், அந்த மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும் இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

முடிந்தால் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களை நிவாரணக் கிராமங்களுக்கும் இடம்பெயர் முகாம்களுக்கும் அழைத்துச் சென்று உண்மை நிலைமையைத் தெளிவுபடுத்துவாரா?

http://www.meenagam.org/?p=9085

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.