Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதி வரிச் சலுகையை சிறிலங்கா இழக்கும்: அடுத்த மாதம் இறுதியில் முடிவு

Featured Replies

ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் பெற்றுவரும் வரிச் சலுகையை சிறிலங்கா இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக ஒன்றியம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை நிறுத்தப்பட்டால் சிறிலங்காவிற்கு ஆண்டுக்கு 150 மில்லியன் டொலர் வருமான இழப்பு ஏற்படும். ஒன்றியத்தின் இறுதி முடிவு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை எதிர்த்து மேன்முறையீடு எதுவும் செய்யமுடியாது.

ஒரு வாரத்துக்கு முன்னர் ஒன்றியம் அனுப்பிவைத்த தொடக்க அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான கடந்த 25 ஆண்டு காலப் போரின்போது திணிக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகள் குறித்து தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சின் செயலாளர் எஸ்.றனுகே தெரிவித்தார்.

ஜிபிஎஸ் எனப்படும் வரிச் சலுகையைப் பெறுவதற்குத் தேவையான அளவிற்கு மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே எச்சரித்து இருந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான போரின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து வெளியான அறிக்கைகளின் அடிப்படையில் அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

"அந்த அறிக்கை எமக்கு மிகவும் பிரதிகூலமானது. எனவே வரிச்சலுகை கிடைப்பது கடினம். அறிக்கை சாதகமானதாக இருந்தால் நாங்கள் தொடர்ந்தும் நம்பிக்கை வைத்திருக்க முடியும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை எமக்குச் சாதகமாக இல்லை" என்றார் றனுகே.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணையாளர்கள் சிறிலங்காவிற்கு வந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைக்க முடியாது என கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதத்திலேயே அரசு தெரிவித்துவிட்டது.

கடந்த ஆண்டில் மட்டும் ஐரோப்பிய சந்தைகளுக்கு 3.47 பில்லியன் டொலர் பெறுமதியான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நாட்டின் அந்நிய செலாவணி வருகையில் மிக முக்கியமான இடத்தை இது வகித்து வருகின்றது.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் உழைத்து அனுப்பும் 3 பில்லியன் டொலர் மற்றும் தேயிலை ஏற்றுமதியால் கிடைக்கும் 1.2 பில்லியன் டொலர் என்பவற்றுக்கு அடுத்து ஆயத்த ஆடை ஏற்றுமதியால் கிடைக்கும் அந்நியச் செலாவணியே அதிகம்.

வரிச் சலுகை இரத்தாகும் எனத் தெரிவிக்கப்படுவது குறித்து கருத்துக் கூற சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் பேர்னாட் சாவேஜ் மறுத்துவிட்டார். எனினும் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக மட்டும் அவர் உறுதிப்படுத்தினார்.

"எல்லா எதிர்வினைகளையும் குறிப்பாக சிறிலங்கா அரசின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னர் அறிக்கை மிகக் குறுகிய காலத்திற்குள் இறுதி வடிவத்தைப் பெறும். அதன் பின்னர் அதிகாரிகளுக்கும் அது கிடைக்கும்" என்றார் பேர்னாட் சாவேஜ்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு அடுத்த மாதம் வெளியாகி அது பாதகமாக அமைந்தாலும், அதன் பின்னர் 6 மாதங்களுக்கு 40 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தகத்தை வரிச் சலுகையுடன் மேற்கொள்வதற்கான அனுமதி கிடைக்கும் என சாவேஜ் கூறினார்.

வரிச் சலுகை இரத்தானால் சிறிலங்காவில் மிகப் பெரியளவில் வேலை இழப்புக்கள் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் உள்ளவர்கள் உழைத்து அனுப்பும் 3 பில்லியன் டொலர் மற்றும் தேயிலை ஏற்றுமதியால் கிடைக்கும் 1.2 பில்லியன் டொலர் என்பவற்றுக்கு அடுத்து ஆயத்த ஆடை ஏற்றுமதியால் கிடைக்கும் அந்நியச் செலாவணியே அதிகம்.

வெளினாடுகளில் இருந்து பணம் அனுப்புபவர்களில் அதிகளவு தமிழர்களும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளினாடுகளில் இருந்து பணம் அனுப்புபவர்களில் அதிகளவு தமிழர்களும் இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து பணம், சிறிலங்கா உற்பத்தியூடான பணம் எல்லாம் எமது தலைகளில்தானே குண்டுகளாக வீந்தன. இன்னும் அழிவு தொடர்கிறது. எம்மவர்கள் திருந்த வாய்ப்பில்லையென்பதை தமிழ்க்கடைகளை அவதானிக்கும்போது தெரிகிறது. அங்கு... லீலா, ரபீனா, நிரு, கிங்ஸ், நரேஸ் இப்படிப் பல பெயர்களில் சிங்களவரது முகவராகத் தமிழர்களே இருந்து பணத்தை கொட்டுகிறார்கள். எமது உறவுகளின் குருதியினது வாடைவீசும் சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிக்கவே தமிழன் தயாராகவில்லை. பிறகு எப்படி?

ஐரோப்பிய ஒன்றியத்தினது முடிவை இறுக்கும் விதமாக, இந்த வரிச் சலுகைக்குத் தகுதியற்ற நாடு என்று பரப்புரை எதையாவது இங்குள்ள மக்களமைப்புகள் த.க.க, இ.அ, பு.எ.ஒ, ஆலயங்கள், மன்றங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்றன முன்னெடுக்க முனையாதிருப்பதன் காரணம் என்னவோ? யாராவது சொல்லுவீர்களா? அல்லது இவர்களும் சீஸனல் பிஸ்னஸ் மாதிரியான அமைப்புகள்தானா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.