Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலச்சுவடு இதழுக்கு பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலச்சுவடு இதழில் (ஆகஸ்ட்) வந்த 'வன்னிக் களமுனை' பற்றிய கட்டுரைக்கு

'பரணியும்' நண்பர்களும் எழுதிய பதில் இணைத்துள்ளேன்.இது காலச்சுவடு செப்டெம்பர்

இதழுக்கானது.

கலச்சுவடு ஆசிரியஆகஸ்ட் 2009 இதழில் வெளிவந்த "வன்னியில் என்ன நடந்ததது? களத்திலிருந்து ஓர் அனுபவப்பதிவு" கட்டுரைக்கான ஒரு சிறிய எதிர்வினை...

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழத்தமிழினத்தின் உரிமைப்போராட்டமும் அவர்களின் எதிர்காலமும் மோசமான வரலாற்று கால கட்டத்திற்குள் பிரவேசித்திருப்பது ஒன்றும் ரகசியமானதல்ல. வெளிப்படையானது. எல்லாக் கணிப்புக்களும் மதிப்பீடுகளும் கனவுகளும் கலைந்து போனது மட்டுமல்ல யூகித்திருக்கவே முடியாத கொடுரங்களுடன் மரணஓலங்களும் கதறல்களுமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட காட்சிப்பதிவிலிருந்து இன்னும் முழுமையாக ஒரு ஈழத்தமிழனும் மீண்டுவிடவில்லை. முழுமையாக மீள முடியுமா என்பதும் தெரியவில்லை. என்றென்றைக்கும் மீளவே முடியாத கொடுங்கனவாக ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் மனஅடுக்குகளை இக்காட்சிப்பதிவுகள் நிறைத்தபடியே இருக்கும்..

இந்தப் பின்புலத்திலிருந்துதான் ஈழவிடுதலை குறித்த அடுத்த கட்ட அரசியலை வளர்த்துச் செல்ல முடியும.; உண்மையிலேயே கடந்த கால நிலைப்பாடுகள் அது தொடர்பான அரசியல் நடவடிக்கைகள் அதன் விளைவான சரி தவறுகள் சார்ந்து சுயவிமர்சனமும் மீள்பார்வையும் இங்கு அவசியமாகிறது. முள்ளிவாய்க்காலிலிருந்து பீறிட்ட குருதி இன்னும் காய்ந்து விடவில்லை. அதன் மணம் இன்னும் நாசியை அடைத்தபடியே இருக்கிறது. இந்த நிலையில் சுயபிரக்ஞையுடன் கடந்தகாலத்தை உடனடியாக மறுஆய்வு செய்வதென்பதும் கடினமானது. இதற்கு ஒரு காலநீட்சி தேவை. அந்த இடைப்பட்ட காலமே ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த பிரக்ஞைபூர்வமான தெளிவான மறுவாசிப்பை எமக்கு தரும். ஈழத்தழிழ்ச்சூழலுக்கு அப்பால் மேற்படி கருத்தியல் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்காதென்பதும் எமக்கு தெரியும்.

இந்த அடிப்டையிலேயே பொறுப்பான ஊடகங்களாகவும் ஊடகவியலாளர்களாகவும் ஈழத்தமிழ்ச்சூழலில் பலர் ஒரு "மௌனத்தை" கடைப்பிடிக்கிறார்கள். இந்த "மௌனம்" எமக்கு தேவையானதாகவிருக்கிறது. இதற்காக எடுக்கப்படும் மாற்று அரசியல் நடவடிக்கைகளை நாம் புறக்கணிக்கவுமில்லை விமர்சிக்கவுமில்லை. இந்த "உடனடி" நடவடிக்கைகள் இன்னுமொரு மனிதப் பேரவலத்திற்கும் அரசியல் வறுமைக்கும் ஈழத்தமிழினத்தை இட்டுச்செல்லக்கூடாது என்பதே நமது கவலை.

இந்தப் பின்புலத்திலிருந்துதான் ஆகஸ்ட் 2009 இதழில் வெளிவந்த "வன்னியில் என்ன நடந்ததது? களத்திலிருந்து ஓர் அனுபவப்பதிவு" கட்டுரையை நாம் பார்க்கிறோம். வரிக்கு வரி அந்தக்கட்டுரைக்கு எதிராக எம்மால் எதிர்வினையாற்ற முடியும். ஏனெனில் அதற்குரிய எல்லா சாத்தியங்களையும் அக் கட்டுரை தன்னகத்தே கொண்டுள்ளது. புலிகளுக்கு எல்லோரும் போட்டு பார்த்து களைத்துப்போன பாசிச முகமூடியை மிகச் கச்சிதமாக பொருந்தும்படி மிகக் கவனமாகத் திட்டமிட்டு எழுதப்பட்ட ஒரு கட்டுரை இது. அனுபவம் என்ற போர்வையில் ஆழ்மன குரோதமும் தனிமனித வெறுப்பும் ஒரு இனத்திற்காக 30 வருடங்களுக்கு மேலாக போராடிய ஒரு அமைப்பின் மீதான வசைபாடல்களாகவும் அவதூறுகளாகவும் வெளித்தள்ளப்பட்டிருப்பதை மிகச் சுலபமாகவே இனங்காணக்கூடியதாகவிருக்கிற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரணி அண்ணாவுக்கும் அவரின் நண்பர்களுக்கும் நன்றிகள். எங்கே எந்த ஒரு எதிர்வினையும் எழுதப்படாமலேயே

வன்னியில் நடந்தது என்ன? கட்டுரை பதிவாகி விடுமோ என்ற பயம் நீங்கியது.பின் நவீனத்துவம் என்ற மூடுகைக்குள்

ஒரு தேசிய இனத்தின் மூன்று தசாப்த நம்பிக்கைகள் மற்றும் அவா என்பன கவனிக்கப்பட இல்லையோ என்ற

ஆதங்கம் தீர்ந்தது.

இனி அரசியல் எழுதும் அல்லது எழுதப்போகும் எவரும் இதைப் படித்துப் பின் எழுதினால் மிகநன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.