Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ப் பெண் விசா இன்றி லண்டன் சென்ற விவகாரம்: கட்டுநாயக்கா வானூர்த்தி நிலைய அதிகாரி இடமாற்றம்

Featured Replies

சிறிலங்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் விசா அனுமதிப் பத்திரம் இன்றி, பிரித்தானிய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் லண்டனுக்கு அனுப்பப்ட்டது தொடர்பாக நாட்டின் குடியேற்றத்துறை உயர்மட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கட்டுநாயக்க பயணிகள் வானூர்த்தி நிலையத்தில் பணியாற்றிய குடியகல்வு - குடிவரவு அதிகாரி ஒருவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முறையான விசா இல்லாமல் பயணி மேற்கொண்டு பயணம் செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் எமது அதிகாரி தவறு செய்துவிட்டார் என குடியகல்வு - குடிவரவுத்துறை கட்டுப்பாட்டாளர் பி.அபயகோன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நேரடி உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுகின்றது.

40 வயதான அங்கயற்கண்ணி கிருஷ்ணபிள்ளை என்ற பெண் விசா அனுமதி இன்றி லண்டனுக்குப் பயணமாவதற்கு கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகள் உதவினார்கள் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக அண்மையில் தூதுவர் பீற்றர் ஹேய்ஸ் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு அமைச்சர் ரோகித போகல்லாகமவால் விசாரிக்கப்பட்டிருந்தார்.

பின்னர், அது பற்றி கருத்துத் தெரிவித்த தூதரகப் பேச்சாளர் நடேசா எப்பாசிங்க, குறிப்பிட்ட பெண்ணுக்கு பிரித்தானிய சட்ட திட்டங்களின்படி விசா வழங்குவதற்கான நடைமுறைகள் ஏதும் இல்லாத காரணத்தாலேயே அவருக்கு விசா வழங்கப்படவில்லை என விளக்கமளித்திருந்தார்.

பிரித்தானியாவில் அகதிநிலை கோரி அங்கயற்கண்ணி விடுத்திருந்த விண்ணப்பம் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்த அவர், பிரித்தானிய அரசின் செலவில் லண்டனுக்குத் திரும்ப அழைக்கப்பட்டிருந்தார் எனவும் எப்பாசிங்க தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த விளக்கம் குடியகல்வு - குடிவரவு கட்டுப்பாட்டாளர் பி.அபயக்கோனுக்கு திருப்தியளிப்பதாக இல்லை. எப்படி இருந்தாலும் பிரித்தானிய தூதரகம் அது பற்றித் தனக்கு அறியத் தந்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

"நாம் பின்பற்றிவரும் குடியேற்ற விதிகளின்படி முறையான விசா அனுமதிப் பத்திரம் உள்ள ஒருவர் அல்லது, ஒரு பயணி எந்த நாட்டுக்குப் பயணமாகிறாரோ அந்த நாட்டில் அவர் இறங்கும் போது விசா வழங்கப்படும் என்பது தெரிந்திருந்தால் மட்டுமே குடியகல்வு அதிகாரிகளைப் பயணிகள் கடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். வானூர்தி நிறுவனத்தின் கவனத்திற்காக வழங்கப்பட்ட கடிதம் ஒன்றுடன் பயணி ஒருவர் பணிக்கும் நடைமுறை எதுவும் வழக்கத்தில் இல்லை" என்றார் அபயகோன்.

முன்னதாக, சம்பவம் இடம்பெற்றபோது அங்கிருந்த குடியகல்வு அதிகாரி இந்த விடயம் குறித்து தனது மேலதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அபயகோன் அதனை மறுத்தார். குறித்த அதிகாரி அவரது மேலதிகாரியிடமோ அல்லது தன்னிடமோ இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு ஏன் பிரித்தானிய தூதரகம் அறிவிக்கவில்லை என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக வெளிவிவகாரத்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது. "அது ஒரு அடிப்படை தேவை அல்லது கட்டாயமாகச் செய்ய வேண்டிய நடைமுறை" என அமைச்சு தெரிவித்தது.

தேசிய புலனாய்வு சேவையினரால் அங்கயற்கண்ணி அவரது பயணத்திற்கு முன்பாக விசாரணை செய்யப்பட்டிருந்தார் என பிரித்தானிய தூதரக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த கருத்துக் குறித்து கோபமடைந்த தூதரக அதிகாரிகள், "ஆம், நாம் அந்தப் பயணியை விசாரணை செய்தோம். அத்தகைய சந்தேகத்திற்கிடமான சூழலில் அப்படிச் செய்ய வேண்டியது எமது கடமை. எந்த ஒரு ஆட்களை கடத்தும் நபரும் அரசியல் அடைக்கலம் கோருபவரும் போதைப் பொருள் கடத்துபவரும் பயங்கரவாதியும் இவ்வாறு வானூர்த்தி நிலையத்திற்கு கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்த பின்னர் விசா விலக்குக்கு கோர முடியும். அவர்களை நாம் எப்படி நம்பமுடியும்?" என்றனர் அவர்கள்.

வெளிவிவகார அமைச்சுக்கோ அல்லது குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கோ அறிவிக்கப்படாத நிலையில் இந்தப் பிரச்சினை சிக்கலானதுதான் எனத் தெரிவித்தனர் அதிகாரிகள்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.