Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளிடம் இருந்து பணம் பெற்றேனா? சுப்ரமணியசாமிக்கு விஜயகாந்த் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளிடம் இருந்து பணம் பெற்றேனா? சுப்ரமணியசாமிக்கு விஜயகாந்த் கண்டனம்

ஈழத்தமிழர்களுக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வருவதாகவும், அவர்களிடம் இருந்து தாம் எதையும் பெற்றதில்லை என்றும் தமிழக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகள் பட்டியலில் விஜயகாந்த் பெயரையும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழின படுகொலையை நிகழ்த்தியதால் உலக நீதிமன்றத்தின் முன்பு இலங்கை அரசு போர் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. உட்பட பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த அரசின் சார்பில் தகவல்கள் பெறும் சுப்ரமணிய சாமியின் நிலையை கண்டு பரிதாபப்பட வேண்டியிருக்கிறது. ராஜீவ்காந்தி கொலை பற்றிய விசாரணையில் தமது பெயர் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டாலே சுப்ரமணிய சாமிக்கு போதுமானது.

அரசியலில் இருப்பதை காட்டிக்கொள்ள சுப்ரமணிய சாமி வீண் விளம்பரம் தேட வேண்டாம் என்றும் விஜயகாந்த் மேலும் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

‌சி‌ங்கள அர‌சி‌ன் கை‌க்கூ‌லி சு‌ப்‌பிரம‌ணியசா‌மி- விஜயகாந்த் சாட‌ல்

''சிங்கள இனவெறி அரசின் சார்பில் தகவல்களை தர முன்வந்துள்ள சுப்பிரமணியசாமியை சிங்கள அரசின் கைக்கூலி என்றுதான் உலகம் அவரை தூற்றுமே என்று நினைக்கும் பொழுது அவர் நிலையை கண்டு பரிதாபப்படுகிறேன்'' எ‌ன்று தே.மு.‌தி.க. தலைவ‌ர் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரமுகர்களுக்கு விடுதலைப்புலிகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விவரங்களை சிங்கள அரசு தன்னிடம் கொடுத்துள்ளது என்றும், அந்த பட்டியலில் என்னுடைய பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார்.

யாரைப் பற்றியாவது ஏதாவது சொல்லி தானும் அரசியலில் இருப்பதாக மக்களிடம் காட்டிக்கொள்வதற்காக வீணான விளம்பரங்களைத் தேடி அவர் அறிக்கை விடுவார் என்பதால் நான் அதைப்பற்றி பொருட்படுத்தாமல் இருந்தேன். இருப்பினும், என்னுடைய நலம் நாடும் நண்பர்கள் சிலர் மக்களுக்கு இதை விளக்க வேண்டும் என்று கூறியதால் நான் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

சுப்பிரமணியசாமி கூறியுள்ளதை போல நான் கனடா நாட்டிற்கு சென்ற பொழுதோ அல்லது தமிழ்நாட்டில் இருந்த பொழுதோ விடுதலைப்புலி இயக்கத்திடம் எந்த பணத்தையும் பெறவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னல்படும் ஈழத் தமிழர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை அவ்வப்பொழுது செய்துள்ளேனே தவிர அவர்களிடம் இருந்து நான் எதையும் பெற்றதில்லை.

பணம் வாங்கிய பிறகுதான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தேன் என்று குற்றச்சா‌ற்று கூறும் சுப்பிரமணியசாமிக்கு நான் கூற விரும்புவது, 18 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்த என்னுடைய மூத்த மகனுக்கு பிரபாகரன் என்ற பெயர் சூட்டியுள்ளதை மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழினப் படுகொலை நடத்தியதால், உலக நீதிமன்றத்தின் முன்பு போர்க்குற்றவாளியாக சிங்கள அரசு நிறுத்தப்பட வேண்டும் என்று உலகத்தமிழ் இயக்கங்கள் மட்டும் இல்லாமல் ஐ.நா சபை உள்பட அனைத்து மனிதாபிமான இயக்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த சூழ்நிலையில் சிங்கள இனவெறி அரசின் சார்பில் தகவல்களை தர முன்வந்துள்ள சுப்பிரமணியசாமியை சிங்கள அரசின் கைக்கூலி என்றுதான் உலகம் அவரை தூற்றுமே என்று நினைக்கும் பொழுது அவர் நிலையை கண்டு பரிதாபப்படுகிறேன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையின் பின்னணி பற்றிய விசாரணையில் பல முக்கிய தலைகள் உருளும் என்று தெரிகிறது. அதில் சுப்பிரமணிய சாமியின் பெயர் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டால் அவருக்கு அதுவே போதுமானது.

என்னை விமர்சிப்பதுதான் அரசியல் என்று எழுபது ஆண்டுகால அரசியல்வாதியே எண்ணுகிற போது அரசியலில் முகவரி தேடும் சுப்பிரமணியசாமி அறிக்கை விடுவதில் ஆச்சரியம் இல்லை எ‌ன்று விஜயகாந்த் கூறியு‌ள்ளா‌ர்.

- http://tamil.webdunia.com/newsworld/news/t...090910001_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.