Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'போர்க் கைதிகள் முகாம்கள்' என்ற நவநீதம்பிள்ளையின் கருத்தை நிராகரிக்கும் சிறிலங்கா: அவை நலன்புரி கிராமங்களாம்

Featured Replies

இடம்பெயர்ந்த மக்கள் 'போர்க் கைதிகள் முகாம்களில்' வைக்கப்பட்டுள்ளார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் தூதுவர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருப்பதை "உண்மைக்குப் புறம்பான கருத்து" என சிறிலங்கா அரசு திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றது.

ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளை தெரிவித்திருப்பது உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற அரசின் கருத்துக்கு முரணாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தூதுவர் அந்த முகாம்களை போர்க் கைதிகள் வைக்கப்பட்டுள்ள முகாம்கள் என்று குறிப்பிட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஐ.நா. வின் 12 ஆவது மனித உரிமைகள் அமர்வு நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்கள் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் தூதுவர் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

"இந்த நிலையங்களுக்கு அதிக எண்ணிக்கையான மக்கள் வருகை தந்தமை அரசு மற்றும் பராமரிப்பு தொடர்பான அரசின் பங்காளிகளின் ஆற்றலுக்கு நெருக்கடி ஏற்பட்டிருந்தமை உண்மையாகும். ஆனால் சில வாரங்களில் இந்த நிலைமைகள் வழமையான நிலைக்குத் திரும்பியது" எனத் தெரிவித்த அமைச்சர், "இந்த மக்களுக்கு இடவசதி, பராமரிப்பை போதியளவில் மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது" எனவும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு விடயம் கரிசனைக்கு உரியதாக இருந்ததாகவும், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலர் இடம்பெயர்ந்த மக்களுடன் ஊடுருவியது தொடர்பாக அரசுக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டதுடன், அந்த விடயம் குறிப்பிடத்தக்களவு அச்சுறுத்தலுக்குரியது எனவும் தெரிவித்தார்.

மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக திரிவுபடுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது எனக் குறிப்பிட்ட அமைச்சர், போலியான ஒளிநாடா ஒன்றை பல முன்னணி அனைத்துலக நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன. தமிழர்களுக்கு சிறிலங்காப் படை சட்ட விசாரணைகளுக்குப் புறம்பான மரண தண்டனை வழங்குவதாக அந்த ஒளிநாடாவில் காண்பிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இந்த ஒளிநாடா தொடர்பாக தனித்தனியாக நான்கு விசாரணைகளை நாம் நடத்தினோம். அந்த ஒளிநாடா போலியானது என சந்தேகத்துக்கு இடமின்றி விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

மீள்குடியேற்றத் திட்டம் தொடர்பாகக் குறிப்பிட்ட அமைச்சர், கண்ணிவெடிகளை அகற்றும் பணி பூர்த்தியடைந்தால் மட்டுமே மீள்குடியேற்றத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய முடியும்.

எதிர்வரும் வாரங்களில் இத்திட்டத்தில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பது குறித்து அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.