Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் முடிந்த யுத்தம் வணங்கா மண்ணில் தொடங்குகிறது..?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பதாண்டுகால தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை, எல்லாவகை நியாயங்களுக்கும் அப்பால் நின்று, தனியொரு இயக்கத்தை அழிப்பதாகப் பிரச்சாரப்படுத்தி, மே மாத நடுப்பகுதியில் வன்னி மண்ணில் முடித்தது சிறிலங்கா அரசு. மூன்றான்டு காலப் போர்திட்டடம், அதற்கும் மேலான செயற்திட்டம், ஆதரவான பல திட்டம், என்பவற்றுடன் அன்டைநாடுகள் அனைத்துடனும் கைகோர்த்து நின்று, சொந்த நாட்டு மக்களின் சுய உரிமையை, வாழ்வுரிமையை, போரியல் நீதிகள், புறவியல் நீதிகள், என அனைத்தையும் அலட்சியம் செய்து, அராஜகப் போராகவே நடத்தி வெற்றிகண்டது.

வெற்றியின் பின்னால் வீழ்த்தப்பட்டனர் புலிகள் என அறிவித்து வெற்றி நாதம் பாடியவர்கள், இப்போ அங்கொன்று இங்கொன்றாக புலி உயிர்ப்புச் செய்கின்றார்கள். புலியெதிர்ப்புக்கும், புலிஉயிர்ப்புக்கும், காரணங்கள் என்னவென்பதும் எல்லோர்க்கும் தெரிந்த பரகசியம்தான். ஆனாலும் அதனை எதிர்த்துக் குரல் தரவேண்டிய எல்லாவிடத்திலும் மெளனம் மொழியாவதுதான் வேதனை.

வன்னியில் யுத்தம் நிறைவு பெற்றதும் வடக்கில் வசந்தம் வந்துவிடும், வந்துவிட்டது என்பது போன்றுதான் பிரச்சாரங்கள் இருந்தன. ஆனால் மூன்று மாதங்கள் முழுதாக முடிந்து விட்ட இன்றளவும் எல்லாம் இழுபறியில்தான் போய்க்கொண்டிருக்கின்றன. பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும் பார்க்க, பிரச்சனைகளைப் பேசும் சக்திகளைத் தீர்த்து வைப்பதிலேயே அரசால் அக்கறை காட்டப்பட்ட வருகிறது.

தமிழர்களை உறவென்றும், தமிழ்மொழியில் உரையென்றும், தமிழ்மக்களின் மனங்களை வெல்வேன் என வேசங்கட்டிய ஜனாதிபதிக்கு அவரது சொந்தங்கள் வடிவமைத்த காட்சியமைப்பு வேறாகி, வேசமும் காட்சியும் பிசுபிசுத்துப் போகிறது.

மக்களுக்கும், தங்களுக்கும் இடையில், புலிகள் இல்லையென்றால், பெரும் பாசம் பொங்கும் நேசம் நிகழும் எனப் பறைசாற்றிய, ஈழப்பெயருடைய எல்லாக் கட்சிகளும், இறுதிச் சரண் மகிந்த பொற் பாதங்களே எனப் பஜனை பாடுகின்றன.

உலகத் தமிழனினத் தலைமைப் பெயரை ஒருபோதும் இழக்க விரும்பாத ஆறுகோடி தமிழகத் தலைமை, காலத்துக்குக் காலம் அல்லறும் தமிழர்களுக்காக கடிதம் எழுதி, இலக்கியப்பணி ஆற்றி இரக்கம் கொள்கிறது. அடுத்த தலைமைக்கு ஆர்வங்கொள்ளும் ஏனைய தமிழகக் கட்சிகள் தூய தமிழ்த்தலைமையைத் தூண்டிலிட்டுத் தேடுகின்றன.

உலகநாடுகளெல்லாம் எழுதி வைத்த நிகழ்ச்சி நிரலுக்கேற்ப எதுவித சலனமுமின்றி எல்லாவற்றையும் பார்த்தபடி கடந்து செல்கிறன. வன்னியில் நடந்தது என்ன என்பது தெரியும் எனச் சொல்லும் ஐ.நா சபையின் அசை நூல்கள் இழுக்கப்படாமையால், ஈழத் தமிழர் விவகாரத்தில் இதுவும் ஏனோ தானோவெனப் பயனிக்கிறது.

இறுதியுத்த காலப்பகுதியில், இலட்சக் கணக்கில் எரிமலையென வெகுண்டெழுந்த புலம்பெயர் தமிழர்கள், நீர்க்குமிழிகளாய் நீர்த்துப் போகின்றார்கள்.இந்த நிலையில் இவர்களையெல்லாம் நம்பி முட்கம்பி வேலிகளின் பின்னே மூன்று இலட்சம் தமிழர்களின் பரிதாப வாழ்வு...

இப்படியான நிலையில்தான் வன்னிமண்ணில் முடித்த யுத்தத்தை வணங்கா மண்ணில் தொடங்கியுள்ளது இலங்கை அரசு. வணங்காமண். வன்னிமண்ணில் யுத்தம் உச்சம் பெற்றிருந்த போதினில், போருக்குள் சிக்குண்ட மக்களுக்கான உணவு வழங்கலை அரசு தடைசெய்தபோது, புலம்பெயர் தமிழர்கள் அதனை உலகுக்கு வெளிப்படுத்தும் முகமாகவும், பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு உதவும் பொருட்டும், உணவுப்பொருட்களைப் புலம்பெயர் தேசத்தில் சேகரித்து, கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர். அப்படி அனுப்பி வைக்கபட்ட கப்பலுக்குச் சூட்டப்பட்ட சிறப்புப் பெயர் வணங்கா மண் என்பதும் தெரிந்ததே

இந்தச் சிறப்புப் பெயரும், அந்தப் பெயரின் பின்னாலான செயற்திட்டமும், புலம் பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தமிழர்களை முழுமையாக பிரதிநிதிதுத்துவ படுத்தாவிடினும், புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தமிழர்களின் அடையாளப்படுத்தலாகவே அதை, இலங்கை அரசு பார்க்கிறது எனலாம். அதனாலேயே அனுப்பப்பட்ட கப்பல் இலங்கைக் கரையை மூன்று மாதங்களுக்கு முன்னமே சென்றடைந்த போதும், இழுபறிகள் பலவற்றுக்குப்பின் இந்தியக் கரையில் பொருட்கள் இறக்கப்பட்டு, மீண்டும் இலங்கைக் கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும், எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டதோ அந்த மக்களுக்கு அவை போகாது கிடக்கின்றன.

இது ஒரு உதவிப்பணி என்பது எல்லாவகையான சாட்சியங்களுடனும் நிரூபிக்கபட்ட பின்னும், அது உரிய மக்களுக்கு கிடைக்காதிருப்பது என்பது இலங்கை அரசின் திட்டமிட்ட ஒரு புறக்கணிப்பு என்றில்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்.?

புலம்பெயர்தேசத்தில் இருந்து முகாம் மக்களுக்கான உதவி கோரும் இலங்கை அரசு, அதே மக்களின் பெயரால் அனுப்பிவைக்கப்பட்ட மனிதாபிமானப் பணிகளை மட்டும் கிடைக்காது, இழுத்தடிப்புச் செய்வதற்கு வேறென்ன அடையாளப்படுத்தலும், அதற்கான காரணங்களும் இருக்க முடியும். அதுதான் வன்னியில் முடிந்த யுத்தத்தை வணங்கா மண்ணில் தொடங்குகிறது என்று சொல்கின்றோம்.

இன்னும் சொல்வோம்...

- நாகன்

(இந்தக் கட்டுரைத் தொடர் 4தமிழ்மீடியாவுக்காக எழுதப்படுகிறது. இதனைத் தங்கள் தளங்களில் பிரசுரிக்க விரும்புவோர் 4தமிழ்மீடியாவில் இருந்து பெறப்பட்டதைத் தெரியப்படுத்திப் பிரசுரிக்க வேண்டகின்றோம். - 4Tamilmedia Team)

Edited by forlov

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.