Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறிக்கப்படுகிறது வன்னி மண்! பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? : ஈழநாடு (பாரிஸ்)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறிக்கப்படுகிறது வன்னி மண்! பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? : ஈழநாடு (பாரிஸ்)

சிங்கள அரசின் கொடூர யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வன்னி மக்கள் திட்டமிட்டு அவர்கள் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். வன்னி மண் சிங்கள தேசத்தினால் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளதை நாம் மறந்துவிட முடியாது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் தனது இன்றைய கட்டுரையில் தெரிவித்துள்ளது.

அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது:-

வன்னி மக்களைச் சிறுகச் சிறுக முற்றாக அழித்தெழிக்கும் சிங்கள அரசின் திட்டத்திற்கு, மேற்குலக நாடுகளும் பல மனித உரிமைகள் அமைப்புக்களும் தெரிவித்துவரும் கண்டனங்களை சிங்கள அரசு செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. இந்த நாடுகளின், அமைப்புக்களின் அழுத்தங்களைச் சமாளித்தவாறே தனது கொடூரங்களை நிறைவேற்றி வருகின்றது.

வன்னி வதை முகாம்களுக்குள் வைத்திருந்த மூன்று இலட்சம் மக்களில் முப்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது, என்பதே இதுவரையில் தெரியப்படுத்தப்படவில்லை. அது குறித்து யாரும் அலட்டிக் கொள்வதாகவும் தெரியவில்லை. இதுவரை தெரிய வந்த கணக்குப்படி 5,000 ற்கும் குறைவானவர்களாலேயே இராணுவத்தினருக்கும், ஒட்டுக் குழுவினருக்கும் இலஞ்சம் வழங்கித் தப்பிச் செல்ல முடிந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் முகாம்களுக்குத் திரும்பி அழைத்து வரப்படுவதில்லை. ஏற்கனவே இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் என்று சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட பத்தாயிரம் என்ற கணக்கு தற்போது பதின்மூவாயிரமாக அதிகரித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்த மூவாயிரம் விடுதலைப் புலிகளையும், முகாமிலிருந்து தப்பிச் சென்ற சுமார் ஐயாயிரம் தமிழர்களையும் சேர்த்தாலும் முகாமில் இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் 22,000 பேர் இலங்கையின் பல்வேறு சித்திரவதைக் கூடங்களுக்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இலங்கை அரசின் உத்தரவின்பேரில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அண்மையில் பிரித்தானிய ‘சனல் 4′ தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட படுகொலைக் காட்சிகளில் சிங்கள தேசத்தின் ஒட்டு மொத்த காட்டுமிராண்டித்தனமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வதை முகாம்களுக்குள் தடுத்து வைத்திருக்கும் தமிழர்களை விடுவித்து அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்ற பெரும்பாலான சர்வதேச நாடுகளின் அழுத்தங்களைச் சமாளிக்க சிங்கள தேசம் மேலும் பல தடுப்பு முகாம்களை உருவாக்கி வருகின்றது. வவுனியா முகாம்களில் இருந்து விடுவிக்கிறோம் என்ற விளம்பரத்தோடு, அங்கிருந்த மக்கள் வடக்கிற்கும், கிழக்கிற்கும் அழைத்துச் செல்லப்பட்டு, ‘இடைத்தங்கல் முகாம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்ட பல்வேறு தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு வருகின்றார்கள். சிலர் அங்கிருந்து அழைத்துச் சென்று அவர்களுக்குப் பரிச்சயம் அல்லாத அரச ஒட்டுக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுப்பகுதியில் மக்களால் கைவிடப்பட்ட வீடுகளில் கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எமது மக்களை மட்டுமல்ல… அவர்களது மண்ணை மட்டுமல்ல… எமது தேசத்தை மீட்கும் போராட்டத்திலும் நாம் தொடர்ந்து செல்வோம்! எமது மக்களையும்இ எமது மண்ணையும்இ எமது தேசியத்தையும்இ எமது தேசியத் தலைவரை நேசிக்கும் தமிழர்களேஇ களம் நோக்கி வாருங்கள்! கைகோர்த்துப் போராடுவோம்!!

வன்னியை தவிர மற்ற எல்லா மாவட்ட மண்களும் பறிபோகாமல் இருக்கின்றதா? சிங்கள குடியேற்றங்கள் சிங்களமயமாதல் போன்றவை தவிர்க்க முடியாதவை. இதை யாரும் எதுவும் செய்ய முடியாது. பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். தென்னிலங்கையில் தமிழர் லட்சக்கணக்கில் குடியேறி வீடுகள் வாங்கி வாழும் போது சிங்கள மண் பறிபோகின்றது என்று சிங்களவர்கள் கத்தினார்களா? இலங்கைத் தீவில் எல்லா இடங்களிலும் தமிழர் பரந்து வாழ்கின்றனர். என்னும் சொல்லப்போனால் வடக்கை விட தெற்கில் தான் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர். அதே போல் சிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் இலங்கையில் எங்குவேண்டுமானாலும் வாழலாம். எல்லா இனம்களும் சேர்ந்து இலங்கையர் என்று வாழ்வதே ஆரோக்கியமானது. இல்லை தேசியவாதத்தை மீள புலத்தில் இருந்து தூக்கிப்பிடிப்பதும் தமிழகத்தில் இருந்து ஐந்தாம் கட்ட ஈழப்போருக்கு நாட்குறிப்பதும் எஞ்சிய தமிழர்களை ஒழித்துக்கட்டவே வழிவகுக்கும். தாயகத்தில் வாழும் மக்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக எந்த வகையில் போராடுகின்றார்களோ அந்த வழிக்கு மட்டும் ஆதரவு கொடுங்கள். இப்போதைக்கு முடிந்தால் வடகிழக்கு மக்களின் மனிதஉரிமைகள் காப்பாற்றப் பட குரல் கொடுங்கள் இல்லையேல் மூடிக்கொண்டு இருங்கள். இனி தமிழகத்தில் பல குரல்கள் இலங்கைத் தமிழர்களுக்கான கரிசனையாக வெளிப்படலாம். அவைகள் இந்திய அதிகாரவர்க்கம் இலங்கைக்குள் மூக்கை நுளைப்பதற்கான வழியாக இருக்குமே தவிர தமிழரின் நலன் குறித்ததாக இருக்க மாட்டாது. புலம்பெயர் தமிழர்களும் சரி தமிழக தமிழர்களும் சரி இலங்கையில் தமிழர்களுக்கான தேசியம் தன்னாட்சி உரிமை போன்றவை தொடர்பாக கதைப்பது சிங்களப்பேரினவாதத்தை வழிநடத்தி எஞ்சிய தமிழர்களை ஒழிக்க வழி வகுக்கும். இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் எவ்வகையாக போராடுகின்றார்களோ அவற்றுக்கு ஆதரவு கொடுப்பது என்பது வேறு அவர்கள் இப்படித்தான் போராட வேண்டும் என்று வரையறுப்பது வேறு. உங்கள் விருப்பங்களை தாயக மக்கள் பின்தொடரவேண்டிய அவசியமோ தேவையோ இல்லை. எமக்கு வேண்டுமானால் அவர்கள் பாதையை பின்தொடரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.