Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம்.......

Featured Replies

(காண்டம் பற்றிய உங்கள் கருத்து.... தொடர்ச்சி.....)

பட்டிமன்றம்.......

தலைப்பு : காண்டம் -; நம்பலாம்? நம்பமுடியாது?

தமிழ் சிறி மற்றும் விடிவெள்ளி ஆகியோர் காண்டம் சரியானதே என்ற அணியில் வாதிடுவதற்காக இணைந்துள்ளார்கள்........

(காண்டம் என்பது மைன்ட் ரீடிங்க் தான் என்றும் அதனை நம்பமுடியாது என்றும்) எதிரணியில் பலர் இணைந்துள்ளீர்கள்......

இதுவரை எந்த முடிவும் இ;ல்லாமல் நான் நடுவில் நிற்பதனால் தற்காலிக நடுவராக நடுவில் நிற்கின்றேன்...

பார்வையாளராக இதுவரை 46789 பேர் கலந்திருக்கின்றார்கள்.......

பார்வையாளர்கள் அதிகளவாக இருப்தனால் இந்த திரியை மீண்டும் பற்ற வைத்து பார்வையாளர்களை விவாத மழையில் நனைக்கலாம் என்று நினைக்கின்றோம்....இறுதியில் எல்லோருக்கும் தெளிவு பிறந்தால் நன்றி....

போட்டி விதிமுறைகள்.....

இந்த விவாதம் நகைச்சுவைகள் கலந்திருந்தாலும் தமிழ் மக்களிடத்திலிருக்கும் காண்டம் பற்றிய தெளிவின்மையை நீக்குவதற்கும் இதுவரை எதையுமே ஆராயாமல் அடிமையாகிப் போன நம் இன்த்திற்கு இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்கள் பயனுள்ளதாகவும் ஆராய்ந்த பின்னர் ஏற்றுக்கொண்டு நல்ல ஒரு, கூடநம்பிப்கைகள் அற்ற சமுதாயத்திற்கு வழி சமைக்க கூடிய வகையில் உங்களது வாதங்கள் இருக்க வேண்டும்.....

1.இப்போட்டியில் தற்போதைக்கு தமிழ் சிறியும் விடி வெள்ளியும் காண்டம் சரியானதே என்று வாதிட்டுள்ளார்கள்.... ஆனால் விவாதங்களில் ஏற்படும் ஆரோக்கியமான தெளிவுகளினு+டு எவரும் தாங்கள் சரியென்று கருதும் பக்கத்தில் இணையலாம்....( அதாவது கட்சி தாவலாம்...)

2.இதில் பலரும் எதிரணியில் உள்ளார்கள்......ஆனால் பலரது கருத்துக்கள் வாதங்கள் எழுந்தமானமாக உள்ளது.....நீங்களும் உங்கள் கருத்தை உறுதியாக வாதிடுங்கள்....(இங்கும் கட்சி தாவலாம்)

வரும் வார இறுதி நாளட்களில் தீர்ப்பு வெளியிடப்படலாம்...இது பலரது கருத்துக்களை உள்வாங்கியும் அதிகளவானவர்களின் கருத்து (தெளிவான) ஒருமிப்புகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ளப்படும்......

இதோ...தமிழ் சிறியும் விடிவெள்ளியும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு ஆரம்பித்து வைக்கின்றார்கள்.....

தமிழ்சிறி :நானும் 1995 ம் ஆண்டில் காண்டம் வாசித்தேன். அதில் சொல்லப்பட்டவை எனக்கே வியப்பை தருகின்றது. நான் எனது நண்பரிடம் கொடுத்து விட்டது எனது கைவிரல் அடையாளம் தான். காண்டம் வாசிப்பவரோ என் பெயர், என் பெற்றோர் சகோதரர்கள் பெயர் என அப்படியே கூறியது கண்டு நான் மிரண்டு போனேன். ஏனெனில் நடந்தவற்றை அப்படியே சொல்லி இனி அதன் பின் நடக்கவிருப்பவைகளையும் அதில் சொல்லப்படிருந்தது. நானும் பொறுமையாய் அப்படியே பதின்நான்கு வருடங்கள் பொறுத்திருந்தேன். அதில் சொல்லப்பட்டவை 90 வீதம் அப்படியே நடந்தது. இதில் குறிப்பிட்டு இங்கு சொல்லகூடியது ஒன்றைமட்டும் சொல்கிறேன். 1995 இல் எனக்கு கணனி என்றால் என்ன என்றே தெரியாது. நான் அதை தொட்டு கூட பார்த்திருக்கவில்லை சூரியகதிர் நடவடிக்கையில் அடிபட்டு தப்பி கொழும்பு வந்த காலம் அது அப்போ வாசிக்கபட்ட எனது காண்டத்தில் நான் ஒரு சிறந்த கணனி வல்லுனராக இருபேன் என்று கூறப்பட்டிருந்தது. நான் அப்போது வாய்விட்டு சிரித்தேன். நான் அதனை நம்பவில்லை. ஏன் எனில் நான் அந்த நேரத்தில் க.பொ.த சாதாரணதரத்தில் கணிதபாடத்தில் சித்தியடையவில்லை. நான் எப்படி பெரிய படிப்புகள் எல்லாம் படிப்பது என்று என் மனதுக்குளேயே சிரித்துகொண்டேன். காலங்கள் விரைவாக ஓடியது ஆனால் இன்று அதில் சொல்லப்பட்டவாறு தகவல் தொழிநுட்பதுறையில் ஒரு மூலையில் நானும் நாள்தோறும் குப்பை கொட்டுகின்றேன். என்ன செய்வது நம்பித்தான் ஆகவேண்டும். அடுத்தது என் வாழ்க்கை சம்பந்தபட்டது அதில் சொல்லப்பட்டவாறே அப்படியே ஒன்று கூட பிழைக்காமல் அப்படியே நடந்தது தான் எனக்கு இன்றும் ஆச்ச்சரியத்தை தருகின்றது.

விடிவெள்ளி : நீங்கள் றோட்டிலை நிக்கிற கண்ட , கிண்ட அரைகுறையளிட்டை காண்டம் வாசிச்சு ஏமாந்து போட்டு ..... குத்துது , குடையுது என்றால் என்ன செய்வது.

எனக்கு தெரிந்தவர் மூலம் நான் இந்தியாவில் உள்ள திருச்சியில் காண்டம் வாசிக்க சொல்லி , அவர் கேட்ட ஒரேயொரு அடையாளத்தை மட்டும் கொடுத்தேன்.

அதிலும் காண்டம் வாசிப்பவரிடம் , எனக்கு தெரிந்தவர் நேரடியாக செல்லவில்லை மூன்றாமவரே சென்றார்.

அதாவது ....... அந்த மூன்றாம் நபருக்கு என்னைப் பற்றிய ஒரு விபரமும் தெரியாது.

அதில் காண்டம் வாசிப்பவர் என்னைப்பற்றி இதுவரை நடந்தவை , நடந்து கொண்டிருப்பவை பற்றி எழுதியுள்ளதை பார்த்த போது நானே ஆச்சரியப் பட்டுப் போனேன்.

எல்லாவிடயங்களும் அச்செட்டாக ஒத்துப்போனது.

எங்கே ஆரம்பியுங்கள் உங்கள் கருத்துக்களை....புதியவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்......

Edited by Nalim

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.