Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆறு மாதம் தள்ளிப்போகிறது 9வது உலகத் தமிழ் மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மாதம் தள்ளிப்போகிறது 9வது உலகத் தமிழ் மாநாடு

செப்டம்பர் 30,2009,00:00 IST

சென்னை :போதுமான கால அவகாசம் எடுத்துக் கொண்டு, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும், வெளிநாட்டு தமிழ் ஆய்வாளர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவும் வசதியாக, கோவையில் நடக்கவுள்ள ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை, 2010ம் ஆண்டு ஜூன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ நடத்த, முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், நிதிஅமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, உலகத் தமிழ் ஆராய்ச்சி கழக துணைத் தலைவர் குழந்தைசாமி, தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன், ஐம்பெருங்குழு உறுப்பினர்கள் அவ்வை நடராஜன், மணவை முஸ்தபா, வைரமுத்து, ராஜேஸ்வரி, கனிமொழி, எண்பேராய உறுப்பினர்களில் நன்னன், அப்துல் ரகுமான், சிலம்பொலி செல்லப்பன், வேழவேந்தன், சாலமன் பாப்பையா, ரவிக்குமார், சிறப்பு அழைப்பாளர்கள் கோதண்டராமன், அறவாணன், ஐராவதம் மகாதேவன், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழக பொருளாளர் முத்துக்குமாரசாமி, ஒருங்கிணைப்பாளர் சுப்பராயலு கலந்து கொண்டனர்.உலகத் தமிழ் ஆராய்ச்சி கழக துணைத் தலைவர் குழந்தைசாமி வரவேற்றார். 14 ஆண்டுநடக்காமல் இருந்த உலகத் தமிழ் மாநாட்டை, தற்போது நடத்த முன்வந்த முதல்வர் கருணாநிதிக்கு தமிழறிஞர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்த அறிவிக்கப்பட்டதில் இருந்து உலகளவில் பேராசிரியர்களும், தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர். எனினும், ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்கவும், பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளவும் கூடுதல் கால அவகாசம் கிடைத்தால், வெளிநாட்டு தமிழறிஞர்கள் பலர் பங்கேற்க வாய்ப்பு கிட்டும்; மாநாடு மேலும் சிறப்புறும் என கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே, போதிய கால அவகாசம் எடுத்துக் கொண்டு, ஆய்வுக் கட்டுரை உருவாக்கி அளிக்கவும், வெளிநாட்டில் உள்ள தமிழ் ஆய்வாளர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவும் வசதியாக, தற்போது 2010ம் ஆண்டு ஜனவரியில் நடத்த இருந்த ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, 2010ம் ஆண்டு ஜூன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத் திலோ நடைபெற தேவைப்படும் நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் என கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப் பட்டது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி .........தினமலர்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது மே 18 திகதியாம்

அது மே 18 திகதியாம்

கருநாநிதியை சந்தித்தவை ஒருத்தரும் உலகத்தமிழர் மாதிரி தெரியல்ல. எல்லாம் தமிழக தமிழர் தான். பிறகேன் உலகதமிழர். அவன்ரை கட்டுரை.

கருநாநிதி பல எதிர்ப்பின் காரணமாகதான் பின்போட்டுள்ளார்.........இவ்வளவு நாளும் எழுதாத ஆய்வுக்கட்டுரையை ஆறு மாதத்துக்குள்ள எழுத போயினமே.

எல்லாம் இப்படிதான் ,பதவி இருந்தா ஜால்ரா போடுவினம்

  • கருத்துக்கள உறவுகள்

கருநாநிதி பல எதிர்ப்பின் காரணமாகதான் பின்போட்டுள்ளார்.........

தள்ளிப்போடப்படும் இந்த ஆறு மாதத்திற்குள் ஏதாவது மாற்றங்கள் வராதாவென்ற தமிழுணர்வாளர்களின் விருப்பமாகக் கூட இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.