Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாறை த.ம.வித்தியாலய கட்டிடம் உடைக்கப்படுகிறது தடுக்க திராணியற்று இருக்கும் மாகாண சபை

Featured Replies

அம்பாறை த.ம.வித்தியாலய கட்டிடம் உடைக்கப்படுகிறது தடுக்க திராணியற்று இருக்கும் மாகாண சபை

காணியினை அபகரிக்கும் நோக்கிலும்,தமிழ் பாடசாலையினை அகற்றும் நோக்கிலும் ,அம்பாறை தமிழ் மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடங்கள் சிங்கள ஆசிரியர் ஒருவரால் கட்டம் கட்டமாக உடைக்கப்பட்டு வருகின்றன. இதனை பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பயன் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பாடசாலை சிங்கள வலயத்திற்குள் இருப்பதனாலேயே இந்த நிலை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மாகாண கல்வி அமைச்சுக்கும் தெரிவிக்கபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. கல்வி செயற்பாடுகள் யாவும் மாகாண சபை நிர்வாகத்திற்குள் இருப்பதனால் ஏன் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனவும் கேள்வி எழுப்ப படுகின்றது. தேசிய பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து செயற்பாடுகளும் மாகாண சபை கல்வி அமைச்சுக்குள்ளேயே வருகின்றமை சுட்டிகாட்டதக்கது.

குறித்த பாடசாலையில் தற்போது 25 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 6 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இவ்வித்தியாலய வகுப்பறையில் ஒரு பகுதி அப்பிரதேசத்திலுள்ள சாரணர் ஆசிரியர் ஒருவரால் கனரக இயந்திரங்களைக் கொண்டு உடைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

நன்றி ஈழநாதம்

http://www.eelanatham.net/news/important

Edited by உமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வாறு தான் எமது தாய்நிலம் சிறிது சிறிதாக துண்டாடப்பட்டது.

இதை எவ்வாறு தடுக்க முடியும்? இதனைப்பற்றி தமிழ்க்கூட்டமைப்பினரிற்கு தெரியப்படுத்தமுடியாதா?

இதுதான் கிழக்கின் வசந்தம்.......

அம்பாறை த.ம.வித்தியாலய வகுப்பறை கட்டிடங்கள் உடைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்- இரா.துரைரத்தினம்!

அம்பாறை தமிழ் மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடங்கள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் மாகாண ஆளுனரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வித்தியாலய வகுப்பறையில் ஒரு பகுதி அப்பிரதேசத்திலுள்ள சாரணர் ஆசிரியர் ஒருவரால் கனரக இயந்திரங்களைக் கொண்டு உடைக்கப்படுவதாக அவர் ஆளுனரிடம் இன்று தொலைபேசி ஊடாகவும்இஎழுத்து மூலமும் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அம்பாறை கல்வி வலயத்திலுள்ள இவ்வித்தியாலயத்தில் தற்போது 25 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 6 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

இப் பிரதேசத்தைச் சேர்ந்த சாரணர் ஆசிரியரான அனுர சாந்த என்பவர் கனரக இயந்திரங்களைக் கொண்டு சில கட்டிடங்களை உடைப்பதாக அறிகின்றேன்.

கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இவ்வித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்த மாணவர்கள் தற்போது வேறு பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனர்.

தற்சமயம் இப்பிரதேசத்தில் நல்ல சூழ்நிலை உருவாகி வருவதால் மேற்படி வித்தியாலயத்தை மீண்டும் அதிக மாணவர்களுடன் செயற்படுத்தக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக வித்தியாலயத்தை அல்லது அதன் ஒரு பகுதியை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இது தொடர்பாக மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்காவைத் தொடர்பு கொள்ள முயன்ற போதிலும் அவரது தொடர்பு கிடைக்கவில்லை என இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இது தொடர்பாக, தான் மாகாண முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதையடுத்து அதனை உடனடியாக நிறுத்துவது குறித்த உத்தரவை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிறப்பித்துள்ளதாக மற்றுமொரு மாகாண சபை உறுப்பினரான சோமசுந்தரம் புஸ்பராஜா கூறுகின்றார். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.