Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உனக்காகச் செத்த மடையர்களை இன்னுமொருமுறை போட்டுத் தள்ளவேணும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப்பாத்திட்டு சண்டைக்கு றெடியா யாரும் வரவேண்டாம். கீழேயுள்ள கவிதையை மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அததனை இங்கு பதிவிடுகிறேன்.

இழு தேரை ! இறுகப்பிடி வடக்கயிற்றை…!

சமீபத்தில் இங்கிலாந்து நடந்த ஒரு தேர் உற்சவத்தில் 20.000 பேர் கலந்துகொண்டதாக வந்த செய்திக்கு, அங்கு வாழும் கவிஞர் இளம்பறவை எழுதி அனுப்பியுள்ள கவிதை.

இழு தேரை..

இறுகப்பிடி வடக்கயிற்றை.

பக்கத்துச் சுரிதார் பார்வைபட

இன்னும் செய்! பார்த்து இளி!!

முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன்

உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும்

காயவில்லை…பரவாயில்லை..புலத்த

ு தெருக்களில் தேர் இழு!

உன் தாயை தந்தையை உறவுகளை காப்பாற்றாமல்

கைவிட்டது சர்வதேசத்து குரங்குகள் மட்டுமல்ல..- உன்

அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்…

ஆற்றாது அழுதுதொழுத கண்ணீரை தேற்றாமல்விட்ட

தெய்வங்ளை தேரில் வைத்திழுத்து களிப்படை.!

இழடா தேரை..இறுக்கிக்கட்டு கச்சையை-கவனம்

அவிழ்ந்து விடும். சங்கிலிதெரியும் நெஞ்சை நிமிர்த்து..-வழியில்

சிங்களவன் வந்தால் தலையை குனி.-அவன்

துப்பினாலும் துப்புவான்…

உன் பக்கத்துவளவில் வந்திறங்கிச்

சிங்களவன் பந்தல்நாட்டுகிறான்- அதனாலென்ன

நீ இங்கு தேருக்குவரும் பெருமக்களுக்கு

பந்தலிட்டு மோர் ஊற்றி உவகையுறு!

உன் பரம்பரைப10மியை லாலாதேசத்து

குரங்குகள் தலைமுறை கூறுபோடுது- பார்த்துக்கொண்டே

நீ இங்கு வெள்ளையனின் வீதியிலே தேர்இழுத்து

வேர்க்க வியர்க்க அன்னதானம் போடுகிறாய்.

நல்ல களப்பணிதான்.போ இன்னும் செய்.

உனக்காகச் செத்த மடையர்களை இன்னுமொருமுறை

போட்டுத் தள்ளவேணும்.- உன்னைப்போல்

மக்கள் விரும்பி செய்யும் இக்களபணியை எப்படி நாம் தடை செய்வது?

மக்கள் பணியே மகேசன் பணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதையின் சில வரிகள் தவறுதலாக விடுபட்டுப் போயுள்ளன.முழுக் கவிதையும் இதோ.!!

தேரை இழு.! இறுகப்பிடி வடக்கயிற்றை..!!!

___________________________________________________

இழு தேரை..

இறுகப்பிடி வடக்கயிற்றை.

பக்கத்துச் சுரிதார் பார்வைபட

இன்னும் செய்! பார்த்து இளி!!

முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன்

உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும்

காயவில்லை...பரவாயில்லை..புலத்த

ு தெருக்களில் தேர் இழு!

உன் தாயை தந்தையை உறவுகளை காப்பாற்றாமல்

கைவிட்டது சர்வதேசத்து குரங்குகள் மட்டுமல்ல..- உன்

அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்...

ஆற்றாது அழுதுதொழுத கண்ணீரை தேற்றாமல்விட்ட

தெய்வங்ளை தேரில் வைத்திழுத்து களிப்படை.!

இழடா தேரை..இறுக்கிக்கட்டு கச்சையை-கவனம்

அவிழ்ந்து விடும். சங்கிலிதெரியும் நெஞ்சை நிமிர்த்து..-வழியில்

சிங்களவன் வந்தால் தலையை குனி.-அவன்

துப்பினாலும் துப்புவான்...

உன் பக்கத்துவளவில் வந்திறங்கிச்

சிங்களவன் பந்தல்நாட்டுகிறான்- அதனாலென்ன

நீ இங்கு தேருக்குவரும் பெருமக்களுக்கு

பந்தலிட்டு மோர் ஊற்றி உவகையுறு!

உன் பரம்பரைப+மியை லாலாதேசத்து

குரங்குகள் தலைமுறை கூறுபோடுது- பார்த்துக்கொண்டே

நீ இங்கு வெள்ளையனின் வீதியிலே தேர்இழுத்து

வேர்க்க வியர்க்க அன்னதானம் போடுகிறாய்.

நல்ல களப்பணிதான்.போ இன்னும் செய்.

உனக்காகச் செத்த மடையர்களை இன்னுமொருமுறை

போட்டுத் தள்ளவேணும்.- உன்னைப்போல்

தேர்இழுக்கத் தெரியாமல்

பேரினத்து படைகளுடன் சமராடிப் போய்

இறந்ததற்காய்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வல்வைக்கடல். இதுவரையும் தான் எனத மெயிலில் வந்திருந்தது. அனுப்பியவர் சிலவேளை சிலவரிகளை தவறவிட்டுவிட்டார் போல.

மக்கள் விரும்பி செய்யும் இக்களபணியை எப்படி நாம் தடை செய்வது?

மக்கள் பணியே மகேசன் பணி

அதுதானே மக்கள் பணி மகேசன் பணி :)

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ..ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கு கவிதை. ஆனால் இதுவரை கவனிக்கவில்லை. மெயிலில் தான் வாசிப்பதை மற்றவர்களுடன் பகிரும் தோழன் கண்ணில் இது இப்போதுதான் எட்டியிருக்குப்போல.

தலைப்பையும் தனக்குப் பிடித்தமாதிரி தேர்ந்தானோ தெரியவில்லை.

நன்றி காந்தன் ஞாபகப்படுத்தியமைக்கு.

வல்வைக் கடல் வணக்கம்,

நீங்களும் கவிஞர் இளம்பறவை என்பவரும் ஒருவரா என்பதனை அறியத் தருவீர்களா?

------------------

ராசராசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராசராசன் 'அன்பே சிவம்' ஆயுதம் வேண்டாம். ஏற்கனவே கவிதை இடப்பட்டது தெரியாது. இதை அனுப்பிய கனடிய நண்பர் பொருள் தலைப்பில் நான் போட்ட தலைப்பைத்தான் போட்டுள்ளார். அதுதான் அவருக்கும் அனுப்பப்பட்ட அஞ்சலின் தலைப்பாக இருந்ததது. இதில் எந்த இலக்கியக்குற்றமும் செய்யவில்லை.

தலைப்பைப் பாத்திட்டு இது நான் ஏதோ வில்லங்கக்கவிதை போட்டுதாக உங்கள் போல் அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடிவரும் சிலருக்காக முன்கூட்டிய பாதுகாப்பாக போட்டேனே தவிர வேறெந்த முன்நோக்கமும் இல்லை.

வல்வைக்கடல்தான் அக்கவிதையின் சொந்தக்காரர் என்பது எனக்கும் தெரியாது ஏனெனில் ஏற்கனவே பதியப்பட்டதை நான் கவனிக்கேல்லை.

வல்வைக்கடல் உங்கள் கவிதையை மற்றவருடன் பகிர வேண்டுமென்ற நோக்கில் தான் நண்பர் அனுப்பிய தலைப்புடன் உங்கள் கவிதையை இஙகு பதிவிட்டேன். இதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் இருந்தால் தெரிவியுங்கள்.

இராசராசன் குட்டிக்கரணக்கதையை ஏற்கனவே இளங்கவியின் கவிதையிலும் கேட்டாச்சு.

அன்பே சிவம் வேலாயுதமும் வேண்டாம் சூலாயுதமும் வேண்டாம் நாத்திகன் ஒருவரின் முத்துப் போன்ற கருத்தைத்தான் ஞாபகப்படுத்தியபடி விதண்டாவாதத்தை தவிர்க்கிறேன்.

இக்கவிதையை எழுதியவர் தனது ஆட்சேபம் ஏதாவது தனது கவிதைய தவறாகப்பயன்படுத்தப்பட்டதாக

வணக்கம் சாந்தி,

குட்டிக் கரணம் என்ற வார்த்தயினை பயன்படுத்தியமைக்கு மன்னிப்புக் கோருகின்றேன். இளங்கவியின் கவிதை சம்பவம் எனக்குத் தெரியாது. சாந்தி நீங்கள் ஒரு நல்ல கவிதாயினி என்பதில் எனக்கு முரண்பாடு இல்லை. ஆனால் இப் பதிவில் நீங்கள் இட்ட முன்னிணைப்பு எனக்கு விசனத்தை ஏற்படுத்தியது. மீண்டும் மன்னிப்புக் கோருகின்றேன்.

ராசராசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி,

குட்டிக் கரணம் என்ற வார்த்தயினை பயன்படுத்தியமைக்கு மன்னிப்புக் கோருகின்றேன். இளங்கவியின் கவிதை சம்பவம் எனக்குத் தெரியாது. சாந்தி நீங்கள் ஒரு நல்ல கவிதாயினி என்பதில் எனக்கு முரண்பாடு இல்லை. ஆனால் இப் பதிவில் நீங்கள் இட்ட முன்னிணைப்பு எனக்கு விசனத்தை ஏற்படுத்தியது. மீண்டும் மன்னிப்புக் கோருகின்றேன்.

ராசராசன்

வணக்கம் இராசராசன்,

எனது எழுத்து உங்களை கலவரப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

இங்கு வருகின்ற எல்லா விடயங்களையும் எல்லாரும் வாசிப்பதில்லை. நானும் அந்த வகைதான். மற்றும் எல்லா இணையங்களிலும் வரும் யாவையும் யாவரும் வாசிப்பதில்லை. நான் பார்க்கும் விடயங்களை எனது நண்பர்கள் வட்டத்துக்கு அனுப்புவதுண்டு அதுபோல அவர்களும் எனக்கு மின்னஞ்சலில் அனுப்புவதுண்டு. எனக்கு பிடித்த சிலவற்றை இணைப்பதும் வளமை. அதுபோலத்தான் இக்கவிதையும். பிடித்தது இணைத்தேன்.

இதேபோல முன்னொரு தரம் இக்களத்தில் கவிதைகளை பதிவிடும் றவி இந்திரன் அவர்களது கவிதையொன்று ஏற்கனவே யாழில் இருந்திருக்கிறது. அதனை நான் கவனிக்கவில்ஐல. மின்னஞ்சலில் உலாவி எனக்கும் அது வந்திருந்தது. அக்கவிதை பிடித்திருந்தது. அதனை ஒலிப்பதிவு செய்து போட்டேன் கவிதைக்குச் சொந்தக்காரர் அல்லது அவரது நண்பர்கள் இருந்தால் அவரது பெயரை தரும்படி. ஆனால் அது றவி இந்திரன் எழுதியதென எனக்குத் தெரியாது. பின்னர் அவரது சகோதரியே மின்னஞ்சலில் விபரம் தந்தார்: அதன் பின் அவரது பெயர் இணைக்கப்பட்டது. அதுபோலத்தான் இதுவும். மற்றபடி எந்த உள்நோக்கமோ எதுவுமே இல்லை. முன்னிணைப்பு அனுப்பியவரின் தேர்வென்று அவர் அஞ்சலிட்டுள்ளார்.

தங்கள் புரிதலுக்கு நன்றிகள்.

கருத்துக்களால் கருத்தை வெல்வோம் முரண்பாடுகளையும் தீர்த்து.

நன்றி.

Edited by shanthy

கருத்துக்களால் கருத்தை வெல்வோம் முரண்பாடுகளையும் தீர்த்து.

நன்றி.

நல்ல விடையம் சாந்தி அக்கா

கருத்துக்கள் ஒன்றோடு ஒன்று

மோதும் போது

நல்ல கருத்துக்களும் தெளிவும் பிறக்கும்.

கவிதையை எழுதிய அன்பருக்கும் இங்கு இணைத்த சாந்தி அவர்களுக்கும் நன்றிகள்.

ஆனால் செத்த அந்த மடையர்கள்தான் வந்து போட்டுத்தள்ள வேண்டும்.

பிணந்தின்னும் மனிதர்களின் வாடை அந்த தெய்வங்கள் மீது படவேண்டாம்.

வியாபாரிகள் விற்பனை செய்ய ஆயிரம் வழி வைத்திருப்பார்கள்.

போராட்டம் தோற்றாலும் அந்த வியாபரிகள் என்றும் தோற்பதில்லை.

சற்று சாய்ந்த தலைகள் ஏதாவது புதுப்புது திட்டங்களுடன் நிமிர்த்தி கொள்வார்கள்.

சொறிந்த கைகள் சும்மா இருக்காது. இவர்களுக்கு இலட்சியங்கள் இல்லாவிட்டாலும்

இலட்சங்கள் முக்கியம். எமது புலம்பெயர் பணியாளர்கள் விழித்தெழுவார்கள்

இப்போ அவர்களால் கொத்துரொட்டிகள்தான் விற்க்க முடிகின்றது.

வருவோம் காசு சேர்க்க தயாராக இருங்கள். :):rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா,

இணைப்புக்கு நன்றிகளை முதல் வைக்கின்றேன்

இந்த கவிதையை எழுதியவரிடம் சில கேள்விகள்,

ஆனால், இது கவிதையா? வாடா போடா என ஒருமையில் அழைத்து ஒரு இனத்தின் வழிபாட்டு முறையை கேவலப்படுத்துவது ஒரு கவிதையா? புதுக்கவிதை என்பதற்காக எந்தவிதமான நியதிகளும் இன்றி எழுத முடியுமா என தெரியவில்லை.. இந்த கவிதையை எழுதியவரின் கருத்துகள் சரியாக இருக்கலாம். எம் மக்களின் ஒரு பகுதி ஒரு வேளை உணவைக்கூட சுதந்திரமாக உண்ண முடியாமல் இருக்கையில் எமக்கிந்த தேரிழுப்பு அவசியாமா என சமூக பிரக்ஞையுடன் கேட்பது சரியானதே. ஆனால், அதனை கேட்கும் முறையும் அதற்கான மொழியும் இருக்கின்றது. அத்துடன், பிறந்த நாள் விழாவில் இருந்து பூப்புனித விழா வரைக்கும் இன்றும் கொண்டாடப்படும் சூழலில், வெறும் தேரிழுப்பு மட்டும் தவறாக போய்விடுமா?

இப்படியான செயல்கள் இன்று மட்டுமா நடக்கின்றது...? முதலாம், இரண்டாம், மூன்றாம் ஈழப் போர்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் அபலைகளாக அலைந்து திரிகையிலும் இப்படி நடந்தனதானே? கொழும்பில் பால் குடம் தூக்கி ஊர்வலம் போவதில் இருந்து, லண்டனில் கல்யாண விழா வரைக்கும் நடந்ததுதானே? அப்போது எங்கே போய்விட்டது இந்தக்கேள்விகள். தலைவர் இருக்கின்றார், அவர் பார்த்துக் கொள்வார் என்று இருந்து விட்டீர்களா?

அன்றும் மக்களின் அவலம் பற்றிய அக்கறை இன்றித்தான் இருந்தோம், இன்றும் அப்படியே இருக்கின்றோம். அப்போது தலைவர் இருக்கின்றார், அவர் பார்த்துக்கொள்வார் என்று களியாடினோம். இன்று தலைவரும் இல்லைதானே இனி என்னத்துக்கு அக்கறையென்று களியாடுகின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.