Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமாவளவா நீயுமா இப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசிய தமிழக எம்பிக்கள் குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.

முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.

மாலையில், வவுனியாவில் உள்ள மனிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.

பின்னர் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில், ஹெலிகாப்டர் மூலம் நோர்வூட் மைதானத்தில் தமிழக குழுவினர் வந்து இறங்கினார்கள். பின்னர் அங்கிருந்து ஹட்டன் நோக்கி வாகனத்தில் பயணம் செய்தனர்.

திங்கள்கிழமை காலை 10.45 மணிக்கு ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.

தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜபக்சவுடன் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று திமுக கூட்டணி எம்பிக்கள் அந்நாட்டு ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசினார்கள்.

தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள் ராஜபக்சவிடம் வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது இலங்ûகை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.

இதன்பொழுது மு.க.கனிமொழி, தொல்.திருமாவளவன், ரி.ஆர்.பாலு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது. இதேயிடத்தில் பசில் ராஜபக்சவை ரி.ஆர்.பாலு ஆரத்தழுவிக்கொண்டார்.

நன்றி thedipaar.com

படங்களைப் பார்வையிட http://www.thedipaar.com/news/news.php?id=10003

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசிய தமிழக எம்பிக்கள் குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.

முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.

மாலையில், வவுனியாவில் உள்ள மனிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.

பின்னர் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில், ஹெலிகாப்டர் மூலம் நோர்வூட் மைதானத்தில் தமிழக குழுவினர் வந்து இறங்கினார்கள். பின்னர் அங்கிருந்து ஹட்டன் நோக்கி வாகனத்தில் பயணம் செய்தனர்.

திங்கள்கிழமை காலை 10.45 மணிக்கு ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.

தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜபக்சவுடன் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று திமுக கூட்டணி எம்பிக்கள் அந்நாட்டு ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசினார்கள்.

தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள் ராஜபக்சவிடம் வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது இலங்ûகை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.

இதன்பொழுது மு.க.கனிமொழி, தொல்.திருமாவளவன், ரி.ஆர்.பாலு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது. இதேயிடத்தில் பசில் ராஜபக்சவை ரி.ஆர்.பாலு ஆரத்தழுவிக்கொண்டார்.

நன்றி thedipaar.com

படங்களைப் பார்வையிட http://www.thedipaar.com/news/news.php?id=10003

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டில் பிரிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும் புலம் பெயர்வாழ் தமிழர்களும் ஒன்று பட்டு கூட்டு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கினால் மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும் என்று இலங்கை வந்துள்ள தமிழக பாராளுமன்ற குழுவின் உறுப்பினரும் விடுதலைச் சிறுதைகள் அணியின் தலைவருமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தம்மை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கதறி அழுது கண்ணீர் மல்கி எம்மிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர்.

இலங்கை விஜயம் தொடர்பாகவும் அகதிமுகாம்களில் மக்களின் உண்மை நிலை குறித்தும் விளக்கி தமிழக முதலமைச்சரின் ஊடாக இந்திய மத்திய அரசுக்க அறிக்கையினை சமர்ப்பிப்போம். இதனை விட விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தனியான அறிக்யொன்றினையும் நான் சமர்ப்பிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.