Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண் துடைப்புப் பயணம்: குமுதம்

Featured Replies

இந்த வாரக் குமுதம் இதழிலி இருந்து

இலங்கை அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் உண்மை நிலையைக் கண்டறியும் தமிழக எம்.பி.க்களின் பயணத்தைப் பற்றி ஈழத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்? இலங்கையில் உள்ள பத்திரிகையாளர்கள், மாணவர்கள் சிலருடன் பேசினோம். `வெள்ளை வேன்' அச்சுறுத்தல் இன்னும் தொடர்வதால், முதலில் பேசத் தயங்கியவர்கள், தங்கள் பெயரை வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசினார்கள்.

"தமிழக எம்.பி.க்கள் வரவால் ஒரு மாற்றம் ஏற்படும்; முகாம்கள் பற்றி அரசாங்கம் கூறும் தகவல் சரியா என்பதைக் கண்டறிந்து உண்மைகளை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருந்தது.

ஆனால், வழக்கப்படியே அரசாங்கம் அழைத்துச் சென்று காண்பித்த முகாம்களுக்குதான் தமிழக எம்.பி.க்கள் சென்றார்கள். அவர்கள் முகாம்களுக்குச் சென்றபோது, அவர்களுடன் பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இலங்கை அமைச்சர் ஆறுமுகத் தொண்டைமானும் சில இலங்கை அரசு அதிகாரிகளும் மட்டுமே உடன் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் தமிழகக் குழுவினருடன் அகதிகள் எப்படி சுதந்திரமாக பேசியிருக்க முடியும்'' என்கிறார் இலங்கையின்புகழ்பெற்ற ஓர் ஆங்கிலப் பத்திரிகையாளர்.

இந்தப் பயணத்தில் கனிமொழி மீதும் திருமாவளவன் மீதும்தான் ஈழத் தமிழர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், "எங்கள் பயணத்தில் நாங்கள் கண்டதை அறிக்கையாக இந்திய அரசாங்கத்திடம் சமர்ப்பிப்போம்'' என்பதுடன் கனிமொழி முடித்துக்கொண்டது அம்மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. திருமாவளவன், யாழ்ப்பாண மக்களைச் சந்திப்பதற்கு இலங்கை இராணுவத்தினரிடம் அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு ராணுவத்தினர் மறுத்துவிட்டனராம்

முதல்நாள் யாழ்ப்பாணத்துக்கு தமிழக எம்.பி.க்கள் குழு சென்றபோது மங்கள வாத்தியம், பொன்னாடை, மலர்மாலை, பாடல், நினைவுப் பரிசு என தடபுடலாக வரவேற்பு வழங்கப்பட்டிருக்கிறது. மக்கள் மிகுந்த துயரத்தில் இருக்கும் நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த வரவேற்பை கனிமொழியும் திருமாவளவனும் விரும்பவில்லை எனச் சொல்லப்படுகிறது. இலங்கைப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படையான ஈ.பி.டி.பி. குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாதான் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அதன்பிறகு யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் தமிழக எம்.பி.க்கள் மக்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"நாங்கள் அனுபவித்த துன்பங்கள் எல்லாம் போதும். இழப்புகளை இனிமேலும் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எங்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வைப் பெற்றுத் தந்து நிம்மதியாக வாழ உதவுங்கள். அபிவிருத்திப் பணிகளை விட முதலில் எங்கள் மக்களை கொடூரமான அகதி முகாம்களில் இருந்து மீள்குடியமர்த்த ஏற்பாடு செய்யுங்கள்'' என அப்போது மக்கள் கண்ணீர் மல்கியவாறு கதறியிருக்கிறார்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர், "ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி இலங்கையில் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இன்னும் எத்தனை மக்கள் கொல்லப்படப்போகிறார்கள்'' எனக் கோபமாக கேள்வியெழுப்ப, தமிழக எம்.பி.க்களிடையே மௌனம்.

இந்தச் சந்திப்பில் டி.ஆர்.பாலுவின் நடவடிக்கைகள் யாழ்ப்பாண மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. "எங்கள் கஷ்டகாலத்திலும் ஒரு கஷ்டகாலம் தமிழகக் குழுவிற்கு டி.ஆர்.பாலு தலைமை ஏற்றிருந்தது. அவர் யாழ் பொது நூலகச் சந்திப்பில் யாரையும் சரியாக பேச அனுமதிக்கவில்லை. ஒரு சிலர் கூறிய கருத்துக்களையும் செவிமடுக்கவில்லை. கனிமொழியையும் திருமாவளவனையும் கூட அவர் பேசவிடவில்லை. அடுத்த நாள் யாழ்ப்பாண பத்திரிகைகளில் டி.ஆர்.பாலு பற்றி கடுமையான விமர்சனங்கள் வெளியாகியிருந்தது. `இராவணன் காலத்தில் இலங்கைக்கு அனுமன் வந்ததுண்டு. ஆனால் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்த தமிழக எம்.பி.க்கள் குழுவுக்கு சனீஸ்வரன் தலைமை ஏற்று வந்ததென்பதை யாழ் பொதுநூலகத்திற்கு சென்ற பின்பே தெரிய வந்தது' என கடுமையாக தலையங்கம் எழுதியிருந்தது யாழ்வலம்புரி நாளிதழ்'' என்கிறார் ஒரு யாழ் பல்கலைக்கழக மாணவர்.

``இந்தக் குழுவில் எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சுதந்திரக் கண்காணிப்பாளர்கள் என்று எவரும் இல்லை. தன் உள்நாட்டு இராமேஸ்வரம் மீனவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பெற்றுக்கொடுக்கமுடியாத தமிழக அரசா, எங்களைக் காப்பாற்றப் போகிறது?

வெளிநாட்டுப் பிரதிநிதிகள், உள்நாட்டுப் பத்திரிகையாளர்கள் என எவரையும் அகதி முகாம்களுக்குள் அனுமதிக்காத ராஜபக்ஷே அரசாங்கம், இந்திய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதிப்பதனூடாக இந்தியாவைத் திருப்திப்படுத்துகின்றது. இவர்கள் செல்வார்கள், பார்ப்பார்கள், அழுவார்கள், வாக்குறுதிகளை வழங்குவார்கள், இலங்கை அரசியல்வாதிகளுடன் கதைப்பார்கள், திரும்பி வந்து கலைஞரின் வெற்றி என்று பிதற்றுவார்கள், அறிக்கை சமர்ப்பிப்பார்கள், ஒன்றுமே செய்யமாட்டார்கள். இதுதான் நிஐம். ஈழத்தமிழனின் இரத்தத்தையும் சதையையும் இவர்களது அரசியலுக்காக அடகுவைக்கும் அநியாயம்தான் அரங்கேறப்போகிறது'' எனக் கொதித்துப் போய் பேசினார் இன்னொரு யாழ் பல்கலை மாணவர்.

ஆக, ஈழ மக்கள் சொல்வதைப் பார்க்கும்போது இது கண்ணீர் துடைப்புப் பயணமாக இல்லாமல், கண் துடைப்புப் பயணமாக அமைந்திருக்கிறது என்பது புரிகிறது.

- தளவாய் சுந்தரம்

===================

நன்றி குமுதம்:

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.