Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்கள் எல்லாவித சவால்களையும் எதிர்கொண்டு வல்லமை உள்ளவர்களாகத் திகழ வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை

மாணவர்கள் பரீட்சையில் தோல்வியடைந்திருந்தால் அவற்றை மீள்பரிசீல னைக்கு உட்படுத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும். எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொண்டு தமது இலக்கை அடையும் வல்லமையுள்ளவர்களாக எமது மாணவர்கள் திகழவேண்டும். இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்தில் நிகழாத வகையில் விழிப்புடன் நடந்து கொள்ளுமாறு ஆசிரிய சமூகத்திடம் வேண்டுகிறோம்.

மாணவர்களின் மனங்களையும் நிலை மைகளையும் புரிந்துகொண்டு செயற்பவதுடன் அவர்களது பலன்களையும் பல வீனங்களையும் கண்டறிந்து அவற்றுக் குரிய வகையில் கல்வியை வழங்க வேண்டும். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் விக்னராஜா கௌரிபாலனின் மறைவு குறித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எமது மருத்துவபீட மாணவர் கௌரி பாலனின் தற்கொலை எமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் வறுமைப்பட்டஇ வன்னியில் நிகழ்ந்த கொடுமையான போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தஇ தந்தையை இழந்த இவர் குடும்பப் பொறுப்பும் உறவு நெருக்கமும் உடைய மாணவர். இவர் தற்கொலை செய்து கொள்ளுகிற நிலைக்கு சென்றிருப்பது மாணவர் மத்தியில் கடுமையான பதற்றத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வெற்றியைப் பெறுவதற்காக மாணவர்கள் துணிச்சலாகச் செயற்பட்டு எந்த சவால்களுக்கும் முகம் கொடுத்து தமது கல்வியைத் தொடர வேண்டும் என நாம் அனைத்து மாணவர்களையும் வலியு றுத்தி நிற்கின்றோம். இனிவரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் அனைவரும் இணைந்து செயற் பட வேண்டும் என்பதை மிக அவசியமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்பிற்குரிய எமது மாணவர்களே உங்களை உங்கள் பெற்றோர்கள் பல் வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து எதிர்கால வாழ்விற்கான நம்பிக்கையை யும் கனவையும் சுமந்து அனுப்பி வைக்கிறார்கள். தயவுசெய்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சோகத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதை உங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். கௌரி பாலனின் குடும்பம் எவ்வளவு துன்பத்தில் மூழ்கியுள்ளது என்பதை சொற்களால் குறிப்பிட்டு விடமுடியாது. உங்களது உரிமைகளையும்இ நியாயப்பாடுகளையும் நீங்களே வென்றெடுக்க வேண்டும். மிகவும் துணிச் சலாக அவற்றை எதிர்கொள்வது என்பதே உங்களது ஆளுமையும் பொறுப்புமாகும்.

பாரிய நெருக்கடிகளையும் அவலத்தையும் எதிர்கொண்டிருந்த எமது சமூகத்தில் நாம் நம்பிக்கை தரும் விதமாக வாழவும் கற்கவும் வேண்டியுள்ளது. பல்வேறு யுத்த அழிவுகளினால்இஇழப்புகளின் பிறகு எஞ்சியிருக்கின்ற நாம் எமது சமூகத்தை நம்பிக்கை தரும் விதமாக புத்துயிர் ஊட்டிய வழியில் கொண்டு செல்ல வேண்டும். வாழ்வுரிமைக்காக உயிர்களைச் தியாகம் செய்த எமது மாணவ சமூகத்தில் கௌரி பாலன் தனது உயிரையும் வாழ்வையும் கல்விக்காக தியாகம் செய்துள்ளார். மாணவர்கள் நிதனமாகவும் கவனமாகவும் கற்று உரிய இலக்குகளை அடைய வேண்டும். மாணவர்களது கல்வி நிலையை அறிந்து அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்து கிற வகையில் ஆசிரியர்களின் வாண்மை விருத்தி அமைய வேண்டும். மாணவர்களின் நிலை அறிந்து கல்வியை உரிய வழியில் வழங்குவதே உண்மையான ஆசிரியத்துவம் ஆகும். அதிகாரப் போக்குடன் நடப்பதும் தனிப்பட்ட காரணங்களுக்காக மாணவர்களை பழிவாங்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் இவ்வாறான துயரங்களை ஏற்படுத்தி விடுகின்றன. கல்வியில் குறைவான நிலையில் உள்ள மாணவர்களை அடுத்த கட்டத்துக்கு வெற்றிகரமாக நகர்த்தி நம்பிக்கை ஊட்டும் விதமாக நடந்து கொள்வது இவ்வாற சம்பவங்களை தவிர்க்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

கௌரிபாலன் ஒட்டுமொத்தமாக எமது மாணவர்களது கல்விக்காகவே தனது உயிரை தியாகம் செய்துள்ளார். அவருக்கு நாம் கொடுக்கும் அஞ்சலி என்பதும் மரியாதை என்பதும் இனி வரும் காலத்தில் இவ்வாறன சம்பவங்கள் இடம்பெறமால் செயற்படவேண்டிய பாரிய கடமையை உறுதியுடன் அனைவரும் இணைந்து பொறுப் பெடுத்துக்கொள்வதேயாகும் என்று உள்ளது.

வருடல்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.