Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு நடந்த கொடுமை சொல்லிலடங்கா. கறுப்பு யூலையில் நடந்தது மிகப்பெரிய அநியாயம்.- DR. ஜெயலத் ஜெயவர்த்தன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவிற்கு வருகை தந்திருக்கும் ஐக்கியதேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் DR.ஜெயலத் ஜெயவர்த்தன அவர்களை சந்தித்து இன்றைய அரசியல் நிலை பற்றியும், இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அவரின் நிலைப்பாடு பற்றியும் சிறு நேர்காணல் ஒன்றினை வருடல் இணையம் சார்பாக மேற்கொண்டிருந்தோம். 01-11-2009 அன்று வடமேற்கு லண்டன் பகுதியில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று மேற்கொண்ட இந்த நேர்காணலில் அவர் பலதரப்பட்ட தனது தரப்பு மற்றும் ஐக்கியதேசியக் கட்சியின் சார்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

பலதரப்பட்ட எமது கேழ்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காது தனது தரப்பு தகவல்களையும் நியாயங்களையும் வெளிப்படுத்தும் முகமாக பதிலளித்ததையே காணக்கூடியதாக இருந்தது.

இராஜதந்திர ரீதியில் நகர்ந்து நசுக்கப்பட்டுள்ள தமிழர்களின் விடுதலையை அதே இராஜதந்திரத்தினூடாக வென்றெடுக்கவேண்டிய காலத்தில் தமிழர்களாகிய நாம் இன்று உள்ளதால் அதற்கமைவாகவே இந்த நேர்கணலும் இடம்பெற்றுள்ளது என்பதை தெருவித்துக்கொள்கிறோம்.

அந்த நேர்காணலினை இங்கே தருகிறோம்.

கேள்வி: அரசியலில் சமாதன முன்னெடுப்புகளில் ஈடுபட்டவர் நீங்கள். விடுதலைப் புலிகளை தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியுள்ளீர்கள். ஆனால் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் எனக்கூறி ஒருதலைப் பட்சமாக மகிந்த அரசு சமாதானப்பேச்சை முறித்துக்கொண்டு விடுதலைப்புலிகளை தாக்குவதாகக் கூறிக்கொண்டு ஒட்டுமொத்த மக்கள் மீதும், மக்கள் வாழ்விடங்கள் மீதும் மிக உக்கிரமான தாக்குதலை நடாத்தியபோது எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த கொடூர தாக்குதலினால் பல ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டு பாரிய மனித அவலமும் இனப்படுகொலையும் நடந்துள்ளநிலையில் நீங்கள் அதை தடுப்பதற்காக எதுவிதமுயற்சியும் எடுக்கவில்லையே? ஏன்?

பதில்: உங்கள் மூலம் உங்கள் மக்களை சந்திக்கக் கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி. 2002-2004 வடக்கு புனர்வாழ்வு மந்திரியாக இருந்தேன். அப்போது மருந்து வசதிகள் இல்லாத சூழ்நிலையில் மருந்து, மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றை கடத்தி பலருக்கு மரத்தின் கீழேயே பிரசவம் பார்த்துள்ளேன். இதனால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் சந்திரிக்கா அரசினால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இப்போதும் ஜெனீவா சென்று ஐ.நா அமைப்பின் மேலதிகாரிகளுடன் இடம்பெயர்ந்து முள்வெலிகளுக்குள் உள்ள மக்களை விடுவித்து அவர்கள் புனர்வாழ்விற்கு உதவுமாறு கோரிவருகிறேன். மாறாக முகாமினை விருத்தி செய்து நிரந்தரமுகாமாக்க வேண்டாமென்றும் கோரியுள்ளேன். இங்கு பிரித்தானியாவிலும் கோர்டன் பிறவுண், லியன் ப்பொக்ஸ் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் போன்றவற்றின் அதிகாரிகளிடமும் முகாம் நிலமை பற்றி விளக்கி வருகிறேன். பாதுகாப்புக் காரணங்களை காரணம் காட்டி அரசு என்னை வவுனியா செல்லவிடாது தவிர்த்துவருகிறார்கள். முகாமிலுள்ளோரின் விபரங்களை பிரசுரிக்குமாறும் காணாமல் போன 13,000 பேர் பற்றிய விளக்கத்தையும், கைதாகி தடுப்புமுகாம்களிலுள்ள 15,000 விடுதலைப் புலிகளை சட்டப்படி சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அரசிற்கு அழுத்தம் கொடுப்பதோடு உயர் நீதிமன்றத்திற்கும் முறையீடு செய்துள்ளேன். இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவவெற்றி நிரந்தரமல்ல. அரசியற் தீர்வே நிரந்தரம் என முளங்கி அதற்காகப் பாடுபடுகிறேன். எனது அரசியல் வலர்ச்சி தடைப்படினும் மக்களுக்காகவும், தமிழ் எம்.பி களுக்காகவும் என்றும் குரல் கொடுப்பேன்.

கேள்வி: விடுதலைப் புலிகளை இராணுவரீதியாக வெற்றி கொண்டதாக கூறும் அரசு வெள்ளைக் கொடியோடு சரணடைய சென்ற நடேசன், புலித்தேவன் போன்றோரை சுட்டுக் கொன்றது உட்பட போரியல் சட்ட மீறல்களை புரிந்துள்ளது. இதற்கு நீங்கள் எப்போதாவது உங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளீர்களா?

பதில்: இன மத மொழி கடந்து மனித உரிமைக்கான தீவிர செயற்பாட்டாளர் என்ற முறையில் ஆட்கடத்தல், படுகொலைகள் போன்ற பல மனித உரிமை மீறல்களை யார் செய்யினும் (அரசோ அலது விடுதலைப் புலிகளோ) கண்டித்துள்ளேன். கண்டிக்கிறேன். தொடர்ந்தும் கண்டிப்பேன்.

கேள்வி: போர்க்குற்றங்கள் புரிந்த சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து தேர்தல் களம் இறங்கவுள்ளதாக வரும் செய்திபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: சரத் பொன்சேகாவிற்காக நான் பதிலளிக்க முடியாது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக பதிலளிப்பதானால் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பயங்கரவாதத்திற்கு எதிரான அமைதி விரும்பும் அரசியல் கட்சி. அதிலும் எனக்கு எதிரான இனத்துவசம் பிடித்தோர் உள்ளனர். எனது நிலைப் பாட்டில் நான் அவரை ஏற்கமாட்டேன்.

கேள்வி: போர்க்குற்றம் புரிந்தோரை நீதிக்கு முன் நிறுத்தும் நிறுவனங்களுக்கு உங்கள் ஆதரவு உண்டா?

பதில்: மனித உரிமை தீவிர செயற்பாட்டாளர் என்ற முறையில் ஜனாதிபதியின் மனித உரிமை மீறல்கள் மற்றும் இலங்கையில் ஊடகவியலாளர் நிலை பற்றியும் ஐ.நா சபை மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் சர்வதேச அமைப்புக்களுக்கு எனது கருத்தினை விளக்கிக் கூறியுள்ளேன். தொடர்ந்தும் செயற்படுவேன்.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்தும் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணைக்கு குரல் கொடுப்பீர்களா?

பதில்: எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து என்று அறிந்தும் இலங்கையை விட்டு வெளிநாடு செல்லாது எதிர்க் கட்சியில் இருப்பினும், அரசில் இருப்பினும் தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுப்பேன்.

கேள்வி: பாரிய இனப்படுகொலைகளின் பின்னும் தொடர்ந்து தமிழ்மக்கள் வதை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு வதைக்கப்படுவது தமிழர்களுக்கு ஜனநாயக முறையில் இலங்கையில் வாழ்வில்லை என்பதையே உணர்த்துகிறது. இதனால் தமிழீழம் தான் எமது நிரந்தர முடிவு என்பதை தமிழர்களாகிய நாம் உணர்கிறோம். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: பெரும்பாலானோர் தமிழர்களாயினும், சிங்களவர்களாயினும் இனத்துவேசம் பிடித்தவர்கள் இல்லை. நான் தமிழர்களுக்கு குரல் கொடுத்தும் கிறிஸ்தவனாக இருந்தும் என்னை தேர்வு செய்யும் என் தொகுதி மக்கள் சிங்கள பெளத்த மக்களே. தமிழர்களுக்கு நடந்த கொடுமை சொல்லிலடங்கா. கறுப்பு யூலையில் நடந்தது மிகப்பெரிய அநியாயம். ஆனால் அந்த நேரத்தில் ததமிழர்களை ஆதரித்து காப்பாற்றியவர்களும் சிங்களவர்கள் தான். அரசியல் வாதிகள் இனத்துவேசம் உள்ளவர்கள். பெரும்பாலான மக்கள் அப்படியல்ல. நாம் கடந்த காலத்தில் நில்லாது மிகவும் கஸ்டப்பட்டு நம்பிக்கை வைத்து தமிழ், சிங்கள இனங்கள் சேர்ந்து வாழ்வேண்டும். தமிழருக்கு முழு உரிமைகள் கொடுப்பதன் மூலம் சேர்ந்து வாழலாம். ஐக்கிய தேசியக் கட்சியும் பல பிழைகளை விட்டுள்ளது. அனைவரும் திருந்தி இலங்கையில் சமாதானமாக எமது அடுத்த தலமுறையை வாழச்செய்ய வேண்டும்.

கேள்வி: தமிழர்கள் சிங்களவர்களைப்போல் இனத்துவேசம் பிடித்தவர்கள் அல்ல. ஆனால் பல ஆண்டுகாலமாக தமிழர்கள் பல பாதிப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இன்னிலையிலேயே தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ் முடியாது. அதனால் தமிழீழம் ஒன்றே அமைதி தரும். சிங்களவர்களும் தமிழர்களும் நல்ல அயல்நாட்டவர்களாக வாழ்முடியும். என்பதே தமிழர்களின் இன்றைய கருத்தாக இருக்கிறது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: தமிழர்களுக்கு பல கொடுமைகள் நடந்ததை மறுக்கவில்லை. அதேவேளை விடுதலைப்புலிகளால் சிங்களவர்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டது. இவைகளை மறுக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது. மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற முறையில் இவற்றைக் கண்டிக்கின்றேன். இப்படியே எவ்வளவுகாலம் போராடுவோம்? எம் அடுத்த தலமுறைக்கு நாம் அமைதியை கொடுப்போமா? இக் கேள்விகளுக்கு பதிலாகவே என் மனம் அமைதியை இணைத்து உரிமையுடன் வாழும் வாழ்வை நாடிகிறது.

கேள்வி: இன்றைய சூழ்நிலையில் இப்பொழுது உடன் செய்ய வேண்டியது என்ன?

பதில்: ஐ.டி.பி காம்ப் களை மூடி அவர்களை அவர்களின் வீட்டிற்கு அனுப்பவேண்டும்.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த வேளையிலேயே இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பூர்வீக வாழ்வாதார நிலங்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டு வடக்கும் கிழக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டது. ஆனால் தற்போதய மகிந்த அரசு அதனை முற்றாக நிராகரித்ததோடு உயர் நீதிமன்றின் ஒத்துழைப்போடு சட்டரீதியாக பிரித்தும் உள்ளது. இந்த நிலையில் எந்த அடிப்படையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்லாம் என்று கூறுகிறீர்கள்?

பதில்: உயர் நீதிமன்ற தீர்ப்பே முடிவானது. இலங்கையில் வாக்கெடுப்பதன் மூலம் மக்கள் விரும்பும் தீர்வை கொடுக்கலாம். ஆனால் எனக்கு ஒற்றுமையாக வாழமுடியும் என்ற நம்பிக்கை உண்டு.

கேள்வி: இலங்கை தொடர்பான உங்களின் பார்வை என்ன?

பதில்: இலங்கைப் பிரஜைகள் அனைவரும் ஒற்றுமையாக சம உரிமையுடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே எனது கனவு.

வருடல்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழர்களுக்கு நடந்த கொடுமை சொல்லிலடங்கா. கறுப்பு யூலையில் நடந்தது மிகப்பெரிய அநியாயம்.- DR. ஜெயலத் ஜெயவர்த்தன
அந்தநேரம் பதவியில இருந்தது யாரெண்டுகேக்கத்துப்பில்ல இதெல்லாம் ஒரு தலைப்பு இதெல்லாம் ஒரு செய்தி. <_<

Edited by Mathivathanang

அந்தநேரம் பதவியில இருந்தது யாரெண்டுகேக்கத்துப்பில்ல இதெல்லாம் ஒரு தலைப்பு இதெல்லாம் ஒரு செய்தி. <_<

ஆடு நனையுதாம் ஒநாய் அழுவுதாம்! உவைக்கும் மகிந்தருக்கும் ஒரு ஒரு வித்தியாசம்! மகிந்தா தமிழ் பேசி தமிழரை கொல்லுறார். மற்றைவை சிங்களத்திலை பேசி தமிழரை கொண்டினம். அவ்வளவு தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.