Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசரகாலச் சட்டத்தை உடன் நீக்கக் கோருகிறது தமிழ்க் கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகாலச் சட்டத்தை உடன் நீக்கக் கோருகிறது தமிழ்க் கூட்டமைப்பு

2009-11-07 05:37:33

மீளக்குடியமர்வை துரிதப்படுத்தவும் வலியுறுத்து..

நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டமையால் இனியாவது அவசரகாலச் சட்டத்தை நீக்கி ஜனநாயகம் மலர அரசு இடமளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தது. வவுனியாவிலுள்ள அகதிகளை விரைவாக மீளக்குடியமர்த்துவதுடன் அவர்களுக்கான சுதந்திரத்தை வழங்கவேண்டும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோதே அவர் மேலும் தெரி வித்தவை வருமாறு:

அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். அகதிகளில் ஒரு லட்சம் பேர் அல்லது அதற்கு அதிகமானவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இப்போது இரண்டு லட்சம் அல்லது அதற்குக் குறைவான மக்கள் முகாம்களில் உள்ளனர். அவர்கள் தமது விருப்பத்திற்கு மாறாகவே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிருகங்கள்போல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதியான எம்மை அம்முகாம்களுக்குச் செல்ல அனுமதி மறுப்பது எப்படி? இது ஒரு ஜனநாயக அரசு அல்ல. இதைச் சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த அகதி முகாம்களில் பல குறைபாடுகள் உள்ளன. உணவு,மருந்து, நீர் போன்றவற்றுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. மக்கள் கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.வெளிநாட்டு உதவிகள் உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நிலைமை உடன் முடிவுக்கு வரவேண்டும். இந்த மக்களுக்கு உதவும் வகையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நிதியுதவி வழங்கத்தயாராகவுள்ளன. அந்த உதவிகள் நல்லமுறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

அகதி முகாம்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் செல்வதை அரசு தடுக்கக்கூடாது. மக்கள் பிரதிநிதிகளான எம்மையும் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசு நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டுகின்றோம்.கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இப்பணி உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும். எஞ்சியுள்ள அகதிகளை உடன் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இனியும் அந்த மக்கள் தடுத்து வைக்கப்பட முடியாது. இந்நாட்டில் உள்ள ஏனைய மக்கள் அனுபவிக்கின்ற உரிமைகள் அனைத்தையும் அந்த அகதிகளும் அனுபவிக்க வேண்டும். இந்த மக்களை விடுவிக்குமாறு இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கின்றன. அவர்களை மீளக்குடியமர்த்த அந்நாடுகள் உதவத் தயாராக இருக்கின்றன. இந்நாடுகளின் கோரிக்கைகளையும் அரசு செவிமடுக்க வேண்டும். தற்போது யுத்தம் முடிந்துவிட்டது. இனியாவது அரசு அவசரகாலச் சட்டத்தை நீக்கி நாட்டில் ஜனநாயகம் மலர இடமளிக்க வேண்டும் என்றார்.

http://www.uthayan.com/Welcome/full.php?id=1582&Uthayan1257613220

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.