Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் 700 பேர் மாயம் : குமரி மீனவ குடும்பங்கள் பரிதவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் சுற்றுப்பபகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று திரும்பாததால் மீனவர் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். மாயமாகிப்போன மீனவர்களை கண்டுபிடிக்க கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளனர்

மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி கன்னியாகுமரி மாவட்டம். இவர்களின் பிரதான வாழ்வின் ஆதாரம் மீன் பிடி தொழிலை நம்பியே உள்ளது. வழக்கமாக மீன் பிடிக்க செல்பவர்கள் ஒன்று அல்லது கூடிப்போனால் 2 வாரத்திற்குள் வீடு திரும்புவர் . கடந்த 2 மற்றும் 3 ம் தேதிகளில் குளச்சல் அதனையொட்டிய சுற்றுப்புற மீனவர்கள் சுமார் 80 படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. இவர்கள் வருகையை எதிர்நோக்கி இருந்த மீனவர் குடும்பத்தினர் காலம் தாழ்த்திட்டதால் பெரும் கவலை அடைந்தனர். பல்வேறு குடும்பத்தினர் கடற்கரை பகுதிகளில் கூட்டம் , கூட்டமாக கூடினர். மீனவ சங்க பிரதிநிதிகள் , மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர்.

பியான் புயலில் சிக்கினார்களா : கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருந்தது. குறைந்த காற்றழுத்த மண்டலம் பலமடைந்து தீவிர காற்றழுத்த மண்டலமாக உருமாறி பியான் புயலாக மாறியது. மீனவர்கள் புயல் அறிகுறிக்கு முன்னர் மீன் பிடிக்க சென்றதால் இடையில் இவர்கள் இந்த புயல் காற்றில் சிக்கியிருக்கக்கூடுமோ என அஞ்சப்படுகிறது. குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அரபிக்கடலுக்குத்தான் இந்த மீனவர்கள் மீன் பிடிக்க சென்றிருப்பார்கள் என கூறப்படுகிறது.

17 தமிழக மீனவர்கள் மீட்பு : மீனவர்கள் வராததால் மத்திய , மாநில அரசுகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட வேண்டும் என இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து கடலோர காவல் படையினர் தேடும் பணிக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில் மகாராஷ்ட்டிரா கடற்கரை அருகே 17 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கேரள, கர்நாடக கடற்கரைக்கு மீன்பிடிக்க சென்றதாகவும், அவர்களில் பலர் தொலைபேசி மூலம் தங்களது குடும்பத்தினரை தொடர்புகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காணமல் போன எஞ்சிய மீனவர்கள் எங்கேனும் கரை ஒதுங்கினார்களா அல்லது நடுக்கடலில் தத்தளிக்கின்றனரா என்று தேடும்பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீனவர்களை பற்றி தகவல் அறிய குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

thanks thedipaar.com

படங்களைப் பார்வையிட‌ http://www.thedipaar.com/news/news.php?id=10420

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் 700 பேர் மாயம் : குமரி மீனவ குடும்பங்கள் பரிதவிப்பு

சோகமான செய்தி.

ஈழத்தமிழனுக்கும் , தமிழ்நாட்டு தமிழனுக்கும் என்ன நடந்தாலும் கேட்க யாருமில்லையே ......

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.