Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மொழி மாநாட்டின் சின்னம் தமிழினத்திற்கே ஒரு அவமானம்

Featured Replies

சமீபத்தில் தமிழக அரசு சர்வதேச செம்மொழி மாநாடு என்று ஒன்றை நடத்த போவதாக அறிவித்தது. முதலில் செம்மொழி என்ற பெருமை மட்டும் தான் புதிதாக ஏற்பட்டது, அதாவது நோயுற்ற பாட்டிக்கு மருந்திட வழியின்றி புத்தாடை உடுத்தியிருக்கிறார்கள். சுதந்திரமான ஒரு ஆராய்வை தடைசெய்து இனி எந்த ஒரு புதிய தமிழாய்விற்கும் அனுமதி என்னும் லைசென்சு முறையை வழங்கி இருக்கிறார்கள் இதுதான் உண்மை.

முதலில் உலக தமிழ் மாநாடு, பலரின் எதிர்ப்பு வந்ததும், ஆலோசனை என்ற பெயரில் நாட்கள் தள்ளிவைக்கபட்டது, அதன் பிறகு திடுதிப்பென்று சர்வதேச செம்மொழி மாநாடு.......... பெயர் கண்டுபிடிப்பதற்கெண்றே தமிழக அமைச்சில் ஒரு துறை இயங்கிவருகிறது போலும், இதில் சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் ஆலோசனை குழுவில் நியமித்தல் மீண்டும் வாழ்க வேந்தே வாழ்க வாழ்க என்ற கலாச்சாரத்திற்கு கொண்டு வருகிறது.

ஆம் மீண்டும் அதைவிட பழமையான கலாச்சாரத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது, செம்மொழி தமிழ் மாநாடு

மாநாட்டிற்கு வெளியிட்ட லோகோவில் ஹரப்பா மொஹங்சாதோரா திராவிட கலாச்சார சின்னங்கள் முதன்மையாக பொறிக்கபட்டு இருக்கின்றது. இதற்கு காரணம் என்னவென்றால் தமிழ் பழமையானது அதற்கு தான் என்ற பதில் வருகிறது. இன்று ஹரப்பா மெஹந்சாதோரா இருக்கும் இடங்களில் தமிழர்கள் வாழ்கிறார்களா என்பது இங்கு முதல் கேள்வி? சில வருடங்களுக்கு முன்பு கந்தகாரில் உள்ள மசூதிகளில் தமிழில் ஆண்கள் பெண்கள், கை கழுவுமிடம், அமருமிடம் என எழுதி இருந்ததை டிஸ்கவரி சேனலில் காட்டினார்கள். அது பிரிட்டீஸார்காலத்தில் வியாரத்திற்காக சென்ற மதுரை தோல்வியாபாரிகளுக்காக எழுதியதாக இருக்கலாம், ஆனால் தமிழ் என்ற ஒரு அடையாளமாவது அங்கு இருக்கிறது, இல்லையென்றால் அங்கு தமிழ்பேசத்தான் படுகிறதா?

சோழன் கண்ட கடாரம், ஏனாம், மாஹே, மற்றும் கிழக்கு கடற்கரை நாடுகளில் இன்றும் தமிழினத்தின் எச்சங்கள் இருக்கிறது, அவற்றை கொண்டு வரமறந்து விட்டது செம்மொழி மாநாட்டு குழுவினர்.

இந்த சின்னங்கள் எல்லாம் பொரும்பாலும் பவுத்த நெறிகளை குறிப்பது. அப்படி என்றால் தமிழரின் மதம் பவுத்தமா இலங்கை மாலத்தீவு, தெனாப்பிரிக்கா, மடாகஸ்கர், இந்தோனேசியா, ஜவா, சுமத்திரா, பபுவா நியூ கினியா, போன்ற நாடுகளில் தமிழர்களின் எச்சங்கள் உள்ளது, புலம் பெயர்ந்த நாடுகளில்(ஐரோப்பா, கனடா, ) தமிழர்களின் எல்லைகள் விரிந்து இருக்கிறது இவற்றை கணக்கில் கொள்ளாமல் எதை மையமாக கொண்டு நூற்றாண்டு காலமாக தமிழரிடையே பிரிவை கொண்டு இருந்த சின்னங்களை அடையாளமாக பொறித்து சுனாமி எழுந்த பின்னனியில் அடங்கி இருக்கும் வள்ளுவனை சித்தரித்து தமிழினத்தை அவமான படுத்தியது போலத்தான் இந்த சின்னம் இருக்கிறதே ஒழிய இந்த சின்னத்தை இன்றைய தலைமுறை தமிழன் கண்டால் திருவள்ளுவரை தவிர மற்றவை எல்லாம் என்ன என்று கேட்கும் நிலையில் தான் இருக்கிறான். பழமையான் மொழி என்றபெருமைதான் ஆனால் அந்த மொழிக்கு எந்த வகையில் இன்றை அரசு மரியாதை தந்திருக்கிறது. தமிழனம் தெற்கில் எரிந்து கொண்டு இருக்கும் போது தமிழுக்கு மாநாடு கொண்டாடும் அரசு அந்த மாநாட்டிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு அடையாளத்தை கொடுத்து நீ இன்னும் ஆதிதிராவிடன் உன்னை ஆள்பவனுக்கு நீ அடிமைபடு உன்னால் ஆத்திக்க சக்திகளுக்கு முன்பு நீ இறுதிவரை அடிமையாக இரு(சுனாமி பின்னனியில் வள்ளுவன்) எல்லாம் கொடுத்துவிட்டு கொசுறு போல் பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகம். அதாவது படத்தில் இருக்கும் பௌத்த சின்னங்களையும் இந்த வாசகத்தையும் பார்க்கும் போது வள்ளுவம் காப்பி அடித்தான் என்பது போல் இருக்கிறது.

தமிழினம் சித்திரவதை பட்டுகொண்டு இருக்கும் போது சர்வதேச செம்மொழி தமிழ் மாநாடு,

இந்த மாநாடு நடக்கும் இடத்தை வைத்தே சொல்லி விடலாம் இது தி மு க கழகத்தை கோவையில் வலுப்படுத்த நடக்கும் மாநாடே அன்றி வேறு தமிழினத்திற்கோ (தமிழிற்கோ எந்த ஒரு நன்மையும் இல்லை) உண்டென்றால் வாழ்க வாழ்க கூறும் கூட்டதிற்கும் பிரிவினை தீயில் குளிர்காயும் கூட்டத்திற்கு உண்மையிலேயே நன்மைதான்.

பலர் இந்த விடயத்தில் மௌனம் சாதிக்கின்றனர், ஒருவேளை அவர்களும் வாழ்கவெந்தே என்ற கோசத்தில் அடங்கி விட்டார்களோ அல்லது நமக்கேதற்கு என ஒதுங்கிவிட்டார்களோ?

இந்த இரண்டை செய்தாலும் அவர்கள் தமிழுக்கு(தமிழினத்திற்கு வேண்டாம்) செய்த பெரிய துரோகம் எனப்படும்.

post-7167-1259227174367.jpg

post-7167-12592275480999_thumb.jpg

அவர் மாநாட்டு சின்னத்தில தன்ரை படத்தை போடாமல் திருவள்ளுவர் படத்தையாவது போட்டாரே. அதை நினைச்சு சந்தோசப்படுங்கோ

முதலில் உலக தமிழ் மாநாடு, பலரின் எதிர்ப்பு வந்ததும், ஆலோசனை என்ற பெயரில் நாட்கள் தள்ளிவைக்கபட்டது, அதன் பிறகு திடுதிப்பென்று சர்வதேச செம்மொழி மாநாடு..........

"ஒரு செய்தி"யை எழுதும் போது உண்மைகளை எழுதுவதே ஊடகங்களின் கடமை. அதை விடுத்து அடுத்தவர்களை முட்டாளாக்க பொய்களை எழுதுவதில் என்ன பயன்??

உலகத் தமிழாராச்சி மாநாட்டை தமிழக அரசு முதலில் 2010 ம் ஆண்டு தை மாதத்தில் நடாத்த இருப்பதாக அறிவித்தது. அப்போது சிவத்தம்பி உட்பட பலர் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லையென்றே தமது கருத்துகளை முன் வைத்தார்கள். அதன் பின் தமிழக அரசு மாநாட்டை 2010 ம் ஆண்டு ஆனி மாதத்தில் நடாத்துவதாக அறிவித்தது.

உலகத் தமிழாராச்சி மாநாட்டை நடாத்துவதற்குரிய ஒழுங்குகளை அதற்குரிய குழுவினரே மேற்கொள்வர். அந்தக் குழு தமிழக அரசிற்கு மாநாட்டை 2010 ம் ஆண்டு நடாத்துவதற்கு போதிய அவகாசமில்லை, எனவே 2011 ம் ஆண்டு வேண்டுமானால் நடாத்தலாம் என்ற கருத்தை தெரிவித்திருந்தது. 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் வருவதால் இரண்டையும் ஒரே ஆணடில் நடாத்துவது தமிழக அரசால் முடியாத நிலை. அதனால் தமிழக அரசு செம்மொழி மாநாடாக மாற்றி தற்போது அறிவித்தது. இந்த மாநாட்டை நடாத்துவதற்கு உலகத் தமிழாராச்சி மாநாட்டுக் குழுவினரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமுமில்லை.

:lol: எல்லாவற்றிற்கும் மேலாக செம்மொழி மாநாட்டை புறக்கணிக்குமாறு கூச்சல் போட்டவர்கள், பின்பு ஏன் தற்போது மாநாட்டிற்காக வெளியிட்ட லோகோவை எண்ணி மூக்கைச் சிந்துகின்றார்கள்?? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.