Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிதைந்து போன தமிழரின் பேரம் பேசும் பலம்-ஹரிகரன்

Featured Replies

ஜனாதிபதித் தேர்தல் தமிழன் பேரம் பேசும் பலத்தைப் பரிசோதித்துக் கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பு என்றே அரசியல் ஆய்வாளர்களால் கருதப்பட்டு வந்தது.

விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பிறகு தமிழன் பேரம் பேசும் பலம் இல்லாது போய் விட்டதாக புளொட் தலைவர் சித்தார்த்தன் பேட்டியொன்றில் கூறியிருந்தார். விடுதலைப் புலிகள் ஆயுத பலத்தின் மூலம் உருவாக்கி வைத்திருந்த பேரம் பேசும் பலம் ள்ளிவாய்க்கால் இறுதிச் சமருக்குப் பிறகு முற்றாகவே இல்லாது போய் விட்டது. இந்தக் கட்டத்தில் தமிழன் பேரம் பேசும் பலத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பல்வேறுபட்ட முயற்சிகள் நடப்பதாகச் செய்திகள் வந்தன. சூரிச்சில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் மூன்று நாட்கள் சந்தித்துப் பேசி இனப்பிரச்சினைத் தீர்வு பற்றிய பொது நிலைப்பாடு ஒன்றுக்கு வர முயன்றனர்.

கடைசியில் அவர்கள் கூட்டறிக்கையைக் கூட விட முடியாத நிலையில் முடிந்து போனது. அடுத்து தமிழ்க்கட்சிகளிடையே பொது இணக்கப்பாட்டை உருவாக்கும் முயற்சிகள் நடந்தன.

முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதில் முன்னின்றன. இவையெல்லாம் தமிழன் பேரம் பேசும் பலத்தை அதிகத்துக் கொள்வதற்கான முயற்சிகளே.

இனிமேல் தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது. கூட்டாகச் சேர்ந்து தமிழன் பலத்தை வெளிப்படுத்தினால் தான் எதையாவது பெறலாம் அடிப்படை நோக்கில் உருவானதே இந்தச் சிந்தனை.

இதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகள் அனைத்தும் பாழாகி விட்டன என்பதையே இப்போதைய அரசியல் நிலைப்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.

தமிழ் பேசும் கட்சிகள் என்று ஜனாதிபதித் தேர்தலை முன்னிறுத்தி எந்த அரசியல் பேரத்துக்கும் முயற்சிக்கவில்லை என்றே சொல்லலாம். தாம் முன்னர் வகித்து வந்த நிலையில் இருந்து அணி மாறுவதற்கு எந்தவொரு தமிழ் பேசும் அரசியல் கட்சியுமே இதுவரை முயற்சிக்கவில்லை.

தமிழ்க் கட்சிகளின் நிலை குறித்து ஆழமாகப் பார்ப்பது அவசியம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் பற்றி இதுவரை எந்த முடிவையும் அறிவிக்காத இரண்டு தமிழ்க் கட்சிகளில் மிகவும் முக்கியமானது.

தமிழ்மக்களின் வாக்கு வங்கியை அதிகம் கொண்டிருக்கும் கட்சியும் இதுவே. விடுதலைப் புலிகளை ஏகப் பிரதிநிதிகளாகவும், அவர்களின் அரசியல் கொள்கை வகுப்புக்கேற்பவும், விருப்பு வெறுப்புகளுக்கேற்பவும் அரசியல் நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் அழிவுக்குப் பிறகு பல கட்டங்களில் முடிவுகளை எடுக்க முடியாது தடுமாறியதை அவதானிக்கலாம்.

அதேவேளை சரியான திசையில் அரசியல் நகர்வில் இறங்குவது பற்றிய தெளிவின்மையும் கூட்டமைப்புக்குள் காணப்படுகிறது.

சரத் பொன்சேகா மஹிந்த ராஜபக்ஷ இவர்களில் யாரைத் தெவு செய்யலாம் என்று ஆலோசனை செய்யும் கட்டத்துக்குச் செல்லவே கூட்டமைப்பு விரும்பவில்லை போலும்.

அது அவர்களின் கொள்கைக்கு முரணாக இருக்கலாம். இந்தக் கட்டத்தில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில் கூட்டமைப்பு இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எதுவாயினும் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் குழுக் கூட்டதிலேயே முடிவு செய்யப் போகிறது.

இந்த நிலையில் கூட்டமைப்பு எந்தவொரு பிரதான வேட்பாளடம் பேரம் பேசுதலை விரும்பவும் இல்லை அதற்கு அணுகவும் இல்லை.

இரா.சம்பந்தனை அலரி மாளிகைக்கு அழைத்து மஹிந்த ராஜபக்ஷ பேசிய போதும் பேரம் பேசல் நடந்ததாகத் தெயவில்லை.

அதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் ஈ.பி.டி.பி. மற்றும் புளொட், ஈ..பி.ஆர்.எல்.எவ்.பத்மநாபா அணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகளும் மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் உள்ளன.

இந்தக் கட்சிகளில் எதுவுமே நிபந்தனையுடனான ஆதரவைக் கொடுக்கவில்லை. எந்தப் பேரம் பேசலிலும் ஈடுபடவும் இல்லை.

ஈ.பி.டி.பி. மட்டும் 13ஆவது திருத்தம் பற்றிப் பேசப் போவதாகக் கூறியது.

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணி ஆகிய கட்சிகள் தமக்கு மஹிந்தவே சிறந்த தெரிவாக இருப்பதாகக் கூறியுள்ளன.

ஜனாதிபதி மஹிந்தவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெவித்திருக்கிறார் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவர் சந்திரகாந்தன்.

மலையகக் கட்சிகளைப் பொறுத்தவரையில் இதொகாவும் மலையக மக்கள் முன்னணியும் பேரம் பேசச் செல்லாமலே மஹிந்தவுக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றன.

ஏன் என்ற கேள்விக்கே இடமில்லாத வகையில் தான் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தலை அணுகியிருக்கின்றன.

மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் ன்னணி மட்டுமே சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுப்பது வரலாற்றுக் கட்டாயம் என்று எதிரணிப் பக்கம் போயிருக்கிறது.

அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தன்பக்கம் இழுப்பதற்கு நியாயங்களை சொல்லியிருக்கிறது. மொத்தத்தில் ஜனாதிபதித் தேர்தலை தமிழ்க் கட்சிகள் சரி வரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலை பேரம் பேசும் பலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான தளமாகப் பயன்படுத்த எண்ணவேயில்லை.

அதற்கான எந்த முயற்சியிலும் இறங்காமல் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு கொடுப்பதில் தான் பெரும்பாலான கட்சிகள் ஈடுபட்டிருந்தன. பேரம்பேசும் முயற்சி என்பது ஒரு இணக்கத்தில் தான் முடிய வேண்டும் என்றில்லை. பேரம் பேசச் சென்றால், மஹிந்தவையோ சரத் பொன்சேகாவையோ ஆதத்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அதற்கான ஒரு அடித்தளத்தையாவது இதில் போட்டிருக்கலாம் அது தான் முக்கியமானது.

இந்த வெறுமை நிலையானது, பேரம் பேசும் சக்தியை தமிழர் தரப்பில் உருவாக்கிக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பெரிதும் பாதித்துள்ளது.

அத்துடன் பிரிந்து நிற்கும் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே குடைக்குள் வரப் போவதில்லை என்பதை தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கு எடுத்துக் காட்டி விட்டன.

இதுவே தமிழர் பிரச்சினைத் தீர்வு பற்றி அவர்கள் கருத்தில் எடுக்காமல் போவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

புலிகள் தமிழ்க் கட்சிகளை அரவணைக்கவில்லை அவற்றை அழிப்பதிலேயே குறியாக இருந்ததாகக் குற்றம்சாட்டிய கட்சிகளே இன்று தமிழன் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக ஒரே கோட்டுக்கு வரத் தயங்குகின்றன.

தமிழன் பேரம் பேசும் பலம் நிமிர்த்த முடியாதளவுக்குச் சிதைந்து போயிருப்பதற்கு இதைவிட வேறெந்தச் சாட்சியும் தேவையில்லை.

புலிகளுக்குப் பிறகு தமிழருக்கு பேரம் பேசும் பலம் வந்து விடக் கூடாது என்று கருதும் தரப்பினருக்கு இது இனிப்பான செய்தியாகவே இருக்கும்.

அதேவேளை, அவர்களின் வாய்க்கு இனிப்பாக இருக்க வேண்டும் என்பதை விரும்பும் தமிழ் கட்சிகள் நிச்சயமாக தமிழ் மக்களின் சார்பில் பேரம் பேசும் சக்தியாக ஒரு போதும் உருவெடுத்து விடவும் முடியாது

http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=101:2009-12-07-13-22-26&catid=35:2009-11-28-06-27-57&Itemid=101

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கரி கரன் என்ற றோ உள்வாளியின் தமிழ் சமூகம் மீதான உளவுரண் உடைக்கும் போர் தொடர்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்த்தன, யாரோ உனது அப்பாவை கொலை செய்தார்கள் என்பதற்காக சிங்களவனின் கைக்கூலியாக மாறி எத்தனை ஆயிரம் தமிழ் மக்களை அடித்தே கொன்றொழி;த்தாய். ஒன்றுமே தெரியாத புத்திசவாதீனமான எனது தமபி உட்பட நீ இன்னமும் நாசமாப் போகேல்லையோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.