Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 700 கைதிகள் தொடர்பில் பசிலுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது ‐ பெ.இராதாகிருஷ்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 700 பேரும் பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்களை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பியுமான பசில் ராஜபக்விடம் கலந்துரையாடியுள்ளதாக தொழிற்பயிற்சி பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதேவேளை இவ்வாறு பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் 50 வீதமானோர் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரெஷ் தெரிவித்தார்.

நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்விருவரும் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 700 பேரும் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் கொழும்பு மலையகம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்களாவர். அவர்களின் விடுதலை தொடர்பில் நீதி, மறுசீரமைப்பு அமைச்சில் கலந்துரையாடுவதன் மூலமாக எவ்விதமான பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை அவர்களின் விடுதலை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடமே கலந்துரையாட வேண்டும் என்றார்.

இந்த கைதிகள் ஏன்? தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தக் குற்றத்தை காரணம் காட்டி கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருடன் கலந்துரையாடியுள்ளேன். அதன்போது குற்றமற்றவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் கருத்து தெரிவிக்கையில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் 50 வீதமானோர் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலேயே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர், ஏனையோர் தொடர்பில் நீதி, மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இனிமேலும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. நீதி மறுசீரமைப்பு பிரதியமைச்சர் கூறியதை போல தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் கோவைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சி.ஆர்.டி சில்வா தகவல் தருகையில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 671 அரசியல் கைதிகளில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 359 பேரும், கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் 120 பேரும், திருகோணமலையில் 66 பேரும், கண்டி போகம்பரையில் 56 பேரும் அனுராதபுரத்தில் 46 பேரும், நீர்கொழும்பில் 13 பேரும் மட்டக்களப்பில் 9 பேரும் தங்காலை சிறைச்சாலையில் இரண்டு கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இம்மாதம் மேலும் சில தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் ‐ அரச தகவல் திணைக்களம் :

2009‐12‐09 10:57:55

இலங்கையில் நாடுதழுவிய ரீதியில் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் உடனடியாக நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பவேண்டும் என்ற அழுத்தங்கள்

அதிகரித்து வரும் நிலையில் இம்மாதம் மேலும் சில தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட செய்தி வருமாறு :‐

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்;; தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்த 59 தமிழ் இளைஞர்கள் கடந்த இரு மாதங்களில் விடுதலை செய்யப்பட்டது போன்று இம்மாதமும்; குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ய சட்ட மாஅதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 650 தமிழ் இளைஞர்களின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவது தொடர்பாக சட்டமா அதிபரிடம் பேசியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் ஏற்கனவே அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தடுப்புக் காவலில் உள்ளவர்களின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் விடயம் நீதி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இணைக் கூட்டங்களின் போது பேசப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சட்ட மா அதிபர் ஏற்கனவே விசேட பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன் சர்வதேச நபர்கள் மீதான விசாரணைகளை துரிதமாக முடித்து அவர்களது கோவைகளை பூரணப்படுத்தி அனுப்புமாறு தமது அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபரை சட்டமா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார் இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.