Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடையாளம் தெரியாதவர்கள் அறிக்கை விடுகிறார்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடையாளம் தெரியாதவர்கள் அறிக்கை விடுகிறார்கள்.

தமிழீழ மக்களாகிய நாம் நொந்து நூலாகிப் போய் இருக்கும் இவ்வேளையில் அறிக்கை போர் நடத்தி வரும் சிலரில் அடையாளம் தெரியாதவர்களே. பல அறிக்கைகளை இப்படியானவர்கள் விடுக்கும் போது சிரிப்பதோ அழுவதோ என்று கூட தோண்றுகிறது.

இன்று கூட சிறிலங்காவின் துணை இராணுவக் குழுத்தலைவர்களில் ஒருவரான பிள்ளையான் எனும் ஒரு நபர் தமிழீழ தேசியத் தலைவரையும் மக்களையும் தவறாக வழிநடத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.

தமிழீழத்தில் இருக்கும் வரை எனக்கு இவர் யார் என்றே தெரியாது. அதுமட்டுமல்லாது தமிழீழத்தில் இருக்கும் எனது உறவுகளிற்கும் இவர் யார் என்று தெரியாது. இப்படியான ஒருவரின் அறிக்கையாக வெளியிடப்பட்டவை வருமாறு ” “தமிழ் மக்களின் அழிவுக்கெல்லாம் பிரதான காரணம் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பே ஆகும். பிரபாகரன் விட்ட தவறுகளைச் சுட்டிக் காட்டாமல் அவரை தவறான பாதைக்கு இட்டுச் சென்றவர்களும் இந்தக் கூட்டமைப்பினரே ஆவர். தமிழர்கள் சுயமாகச் சிந்தித்து செயற் பட முடியாத அளவுக்கு பிரபாகரன் எடுத்த முடிவுகளுக்கு இவர்களே பிரதான காரணமாக உள்ளனர். தமிழ் மக்களின் நலன்களை எண்ணிப் பார்க்காதவர்களின் பின்னால் கிழக்கு மாகாண மக்கள் ஒரு போதும் நிற்கவே மாட்டார்கள்.”

இவர் தன்னை ஒரு சிறிலங்காவின் துணைப் படைக்குழுக்களின் தலைவராக அறிமுகம் செய்து கொண்டு தமிழ் மக்களிற்கு தகுதியில்லாத சிங்களவனுக்கு செருப்பு கழுவும் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் இவர்களெல்லாம் எமது தலைவர் தவறான வழியில் சென்றதாக சொல்கிறார்கள். இவரெல்லாம் இன்று சிங்களவனிடம் செருப்பு கழுவி பிழைப்பு நடத்துவதற்கே தலைவர் போட்ட பிச்சை தான் காரணம் என்று அவனுக்கு எப்படி தெரியும்!.. ஒழுக்கம், கட்டுப்பாடு எனும் கட்டுக்கோப்புக்குள் இருக்க முடியாமல் மாதுக்கும் மதுக்குமாக தமிழினத்தை கேவலப்படுத்திய இவரெல்லாம் எம்மினத்தைப் பற்றி பேசுவதற்கே தகுதியில்லாத, எமது இனம் பயன்படுத்த முடியாமல் தூக்கியெறிந்த செருப்புக்கு சமமானவன். ஆயுதத்தைக் காட்டி மக்களின் நகைகளை பிடுங்கியும் மகிந்தவின் செருப்பு கழுவியும் பிழைப்பு நடத்தும் உமது கருத்துக்கு மக்கள் பயப்படுவார்களே தவிர பணிய மாட்டார்கள். தயவு செய்து தமிழ் ஊடகங்களே, தமிழீழ மக்களே, இப்படியானவர்களின் செய்திகளை பிரசுரிக்காதீர்கள் என அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.

ஆக்கம்

கவி

http://meenakam.com/?p=1706

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற கோடரிக்காம்புகளுக்கு முகவரி கொடுத்ததே எங்களது தலைவனல்லவா? அதனால் இவர்கள் கொத்திப்பார்க்கிறார்கள் கூராக இருக்கின்றதா என்று. பாவம் எமது தென்தமிழீழச் சொந்தங்கள். வவுனியாவில் இருந்து கிழக்கு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ள மக்களது வேதனை தொடரும் நிலையில் அதனை மாற்றக் கூடத் திராணியற்ற செருப்புக்கழுவிகள் இது போன்று புசத்தாவிடில் இவர்களுக்கு எச்சிலைகூடக் கிடைக்காதென்பதே இன்றைய நிலை. புலிகளின் மௌனம் சிங்களக் கொலையரசாளர்களைவிட இவர்களையே அதிகம் பாதிக்கிறது. அந்த வயித்தெரிச்சலில் விடும் புசத்தல்களை அறிக்கையெனபதே அபத்தமாகாதோ? பாவம் படைப்பாதுகாப்பு உல்லாச விடுதி இவையெல்லாம் குறைக்கப்படுகிறது. இனி மகிந்த தோற்றால் எங்கே ஓடுவது என்ற நிலை.......... இதன் விளைவே புசத்தலாக வருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையான் கருணா(கம்) டக்ளசு போன்றவர்கள் விடும் அறிக்கைகளை மக்கள் என்றுமே நம்புவதில்லை.அது அவர்களிற்கும் தெரியும். ஆனால் இங்கே புலம்பெயர் நாடுகளில் அறிக்கை வீரர்களின் தொல்லை இன்னும்தான் அங்கொன்று இங்கொன்றாக உள்ளதே. அதுதான் எரிச்சல்ப்படவைக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பிள்ளையானை பற்றி கேள்விப்பட்டதை இங்கே பதிகிறேன்.. யாரும் என்னில் குறை கூற வேண்டாம்.

அதுக்காகாக நான் பிளையானை ஆதரிக்கிறேன் என்று நினசுடாதீங்கோ..

பிள்ளையான் சொன்னானாம். கருணா, புலிகளை அழிச்சான், தமிழனை அழிச்சான் எங்களை வச்சுக் கொண்டு, இப்பவும் அழிச்சுக் கொண்டு இருக்கான், அவன் எங்களை புலிகளிடமிருந்து பிரிக்கைக்கே, நாங்க சின்னாக்கள், நாங்கள் புலிகளின் இயக்கத்துக்குள் இருக்கும் போது, அவன் தலைமைக்கு கீழே இருந்த நாங்கள், அவன் சொன்னதையே கேட்டு கேட்டு பழகின நாங்கள், நம்பின நாங்கள், அவன் அப்ப எங்களுக்கு பிரியிரதுக்கு சொன்ன ரீசன் சரியாதான் பட்டது, எந்த சந்தீகமும் அவன் மேல வரல, அவன்ர குள்ள நோக்கம் இப்போ தான் புரிஞ்சுது.. அவன் போகும் பாதை பிழை என்று தெரிந்த பின், எங்களுக்கு ஒன்றும் செய்யேலாம போச்சு, செயேலாத நிலைமை வந்துச்சு, நம்பி கெட்டான் நிலைமையில இருந்தம், இப்போ தேர்தல் நேரம், சம்பந்தன் ஐயாட்ட பேசி எங்களுக்கு லீடர்ஷிப் எடுங்கோ என்று சொல்லி கேட்டால், அவர் அதுக்கு ஒத்து வாராரில்லை என்று சொன்னானாம்.. இப்போ எங்களுக்கு வேறு வழி இல்லை, இருக்கிற ஒரேஒரு வழி, மகிந்தவின் பக்கம் சாயிறதுதான் என்றும்.. யாரோ கேட்டாங்களாம், கருணா பண்ணினது பிழை என்று தெரிந்தவுடனே ஏன் புலிகளின் பக்கம் ஓடலை என்று, அவர்களுடன் சேர்ந்திருக்கலாமே என்று.. அதுக்கு அவன் சொன்னானம், சரியான தகவல் பரிமாற்றம் எங்களுக்கு கிடைக்கலை, அதோட ஆம்ய்காரனுகள் எங்களை கண்கொத்தி பாம்பாக 24 மணி நேரமும் monitor பண்ணி கொண்டே இருப்பான், இப்பிடி இருக்கேக்கே, எங்களுடன் தொடர்பு கொள்வார்களா? அவர்கள் எங்களை நம்புவார்களா(புலிகள்)?? கருநாட groop இருக்கானுகள் இஞ்சே எங்களை போடுறதுக்கு, எப்டி இருக்கு? இவன் கள்ளன், அவங்களுக்கு அங்கெ போக பயம் வந்திட்டு போல,

பிள்ளயான், சம்பந்தர் ஐயாவை சந்தித்து, அவர்களிடம் நீங்கள் எங்களுக்கு லீடர்ஷிப் எடுங்கள், உங்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று.. அதுக்கு சம்பந்தன் ஐயா ஒத்துக்கவில்லையாம் என்று..

அதுக்கு, சம்பந்தன் ஐயா சொன்னாராம், புலியை அழித்த நீங்கள், அழிக்க துணை போன நீங்கள், உங்களை எங்களுக்குள் உள்வாங்குவது எங்களுக்கு ஆபத்து என்றும் மழுப்பிவிட்டாராம்..

இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை, இதை தவிர வேறு என்ன விஷயம் நடந்தது என்று எனக்கு தெரியாது, யாராவது இது பற்றி அறியத் தருவீர்களா??

அவன் கடந்த காலத்தில், மகிந்தவுக்கும், கருணாவுக்கும் கேம் காட்டி கொண்டு இருந்தவன், இப்போ பார்த்தால், மகிந்தவுக்கு வால் பிடிக்கிறானாம் .. வேறு வழியில்லாமல் பண்ணினானோ தெரியவில்லை.. கூட்டணியினர், தமிழர்களை அழிச்ச சரத்துக்கு பின்னாலே திரியிறவங்க இன்று, அரசியல் அறிவோ அல்லது படிப்பறிவோ இல்லாத அல்லது ஒழுங்கான தலைமை இல்லாமல் அல்லாடி கொண்டு இருந்த கூட்டத்தை அவர்களுடன் இணைத்து அவர்களின் வலுவை கூட்டி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்..

கருணாவுக்கும் அவனுக்கும் ஆகாது, அவனை வச்சே மகிந்தவுக்கும் , கருணாவுக்கும் எதிரா திருப்பி விட்டு இருக்கலாம்.. தமிழர் விடுதலை கூட்டணியின் பலமும் கூடி இருந்து இருக்கும்.. மகிந்தவின் வாக்கு பலத்தையும் குறைச்ச மாதிரியும் போயிருக்கும், மாற்று கருத்து உள்ளவர்களையும் எங்களில் சேர்க்கணும் இணைக்கணும் என்று எங்களில் சிலர் முடிவு எடுத்திருந்தார்கள்.. இது உண்மையாக இருந்தால், இன்றைக்கு அவன் மகிந்தவின் பக்கம் சேர்ந்திட்டான், சரியான தலைமை இல்லாமல், அங்காலையும் இல்லாமல், இங்காலையும் இல்லாமல், இருந்த பிள்ளையான் கூட்டத்தை தங்கள் சார்பாக use பண்ணுவதில் சம்பந்தர் ஐயா தவறு விட்டுட்டார் என்றே எனக்கு தெரிகிறது..

இது எனது கருத்து, உங்கள் கருத்தையும் கூறுங்கள்..

கிழக்கில் அவனது ஆட்சி, அவனுக்கும் ஆதரவு இருக்கு, இதை மறுக்காதீர்கள், எனது நண்பர்களில் சிலர் கிழக்கு மாகாணத்தவர்கள்.., இப்போ அங்கு சென்று வந்தவர்கள்.., வந்து விட்டு சொன்னார்கள் , அங்கே இருக்கிற சனத்துக்கு வன்னியில நடந்ததை பற்றி ஒரு கவலையும் இல்லாதவர்களாக இருக்கினமாம் என்று / பலருக்கு ஒழுங்காக என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. , ஒரு சிலர் இருக்கினமாம், கருணாவுக்கு ஆதரவாக, இன்னும் சிலர் பிள்ளையானுக்கு.. ஒரு சிலர் இப்போவும் புலிகளுக்கு ஆதரவாம், ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம், தங்களால எதையும் வெளிக் காட்ட முடியாத நிலையில இருக்கினமாம், தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று இணையத் தளங்களில் வந்ததும் வெடி, பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தார்களாம். STF (army), வந்தானாம், என்ன நடக்குது என்று கேட்க அதுக்கு எங்கட மகள் சாமர்த்தியம் ஆயிட்டாள் அது தான் என்று மழுப்பி விட்டார்களாம்.. அவங்கட ஏரியா பல காலமாகவே ஆமிக்காரனின் கட்டுப்பாட்டில தானாம் இருக்காம்..

இதுக்கு கிழக்கு மாகாணத்துக்கு போய் வந்தவர்கள் புலிகள் சார்பு, அங்கு போய் இன்றைய நிலைமையைப் பார்த்து விட்டு, இவங்களுக்கா நாங்க இஞ்சே குளிருக்குள்ளே நிண்டு கச்டப்படுரம்?? நாங்க இங்கே அவங்களுக்காக கஸ்டபடுறது, புலிகளின் பின்னால் அணிவகுக்கிறது பிரயோசனம் இல்ல போல தெரிகிறது என்று பெரு மூச்சு தான் விட்டார்கள்..

இது தான் நான் அறிந்தது கிழக்கு மாகாணத்துக்கு போய் வந்தவர்களிடம்.. போய் வந்த எல்லாரும் இதத் தான் சொல்லி வருந்தினார்கள் ..

என்ன செய்வது.. தமிழனின் சாபக் கேடு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.