Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறப்படிச்ச தமிழர்கள் - - வாசகன் ரட்ணதுரை

Featured Replies

‘உன்னிடம் இரண்டு விடுகள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக் கொடுப்பாயா?”

‘நிச்சயமாகக் கோடுப்பேன்”

‘உன்னிடம் இரண்டு கார்கள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக்கொடுப்பாயா?”

‘நிச்சயமாகக் கோடுப்பேன்”

‘உன்னிடம் இரண்டு புது உடைகள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக் கொடுப்பாயா?”

‘இல்லை கொடுக்க மாட்டேன். ஏனென்றால் என்னிடம் உண்மையிலேயே இரண்டு புது உடைகள் இருக்கின்றன.”

இதுதான் இன்றைய 80 வீதமான தமிழர்களின் மனநிலை. போராட்டம்,வாக்கெடுப்பு, தமிழீழம் என்று பெரிதாகக் கதைப்பார்கள். ஆனால் நடைமுறை என்று வந்துவிட்டால்...அப்படிப் பின்நிற்பது பராவாயில்லை. ஏன் இவற்றில் பங்குகொள்ளவில்லை என்று யாராவது கேட்டுவிட்டால் அவர்கள் கூறும் பதில்தான் மிகவும் பயங்கரமானது. தங்கள் போக்கை நியாயப்படுத்துவதற்காக ‘அவர்கள் கள்ளர்கள். இவர்களை நம்பமுடியாது. இந்தப் போராட்டத்தால் நன்மையில்லை’ என்று கூசாமல் கூறுவார்கள்.

இவ்வாறு இவர்கள் கூறுவது சகதமிழரிடம் மட்டும் என்றால் பரவாயில்லை. வெள்ளையர்களிடமும் இதனைத்தான் கூறுவர். தமிழ்த் தேசியத்திற்கான போராட்டங்களில் கடந்தகாலங்களில் பலரும் பங்கு கொள்வதில்லை. போராட்டங்கள் முனைப்புப்

பெற்றபோது இவர்களின் சக நண்பர்களான வெள்ளையர்கள் “ஏன் நீங்கள் அவற்றில் பங்குகொள்ளவில்லை?’ என்று கேட்டால் - இவர்கள் கூசாமல் புலிகளையும், அவர்களின் அமைப்புக்களையும் பற்றி கேவலமாகவும் அவதூறாகவும் பேசியிருப்பார்கள். இவ்வாறு இவர்கள் கூறியவற்றைத்தான் - விடுதலைப்புலிகளை பல அரசுகள் தடை செய்வதற்குக் காரணங்களாகக் கூறியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர்கள் தாங்கள் செய்வது என்னவென்பதை அறியாமல் செய்பவர்கள்.

ஆனால் இவர்களை விட இன்னொருபிரிவினர் மிகவும் அபாயகரமானவர்கள். அவர்கள் தெரிந்தே செய்பவர்கள்.அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானையில் விழுந்ததுபோல்’ என்று ஒருபழமொழி தமிழில் உண்டு. உண்மையில் அந்தப் பழமொழி ‘அறவடிச்ச முன்சோறு கழுநீர்ப் பானையில் விழுந்ததுபோல்’ என்பதாகும்.

அதாவது தமிழீழத்தில் நாங்கள் சோற்றுக் கஞ்சி வடிக்கும்போது கவனித்திருப்போம். சில சோற்றுப் பருக்கைகளும் கஞ்சிக்குள் தவறி விழுந்துவிடும். அதாவது பானையின் முனையில் உள்ள சோற்றுப் பருக்கைகளும் கஞ்சியுடன் சேர்ந்து விழுந்துவிடும். அவ்வாறு விழுவதைத் தான் அறவடிச்ச முன்சோறு கழுநீர்ப்பானையில் விழுந்ததுபோல்’என்பதாகும்.

அதாவது ஒரு சமுதாய நோக்குடைய செயற்பாடைச் செய்யும்போது சில தனிப்பட்ட நபர்களும் பாதிக்கப்படவே செய்வார்கள் என்பதை அது குறிக்கும்.அவ்வாறு பாதிக்கப்பட்ட தனிநபர்கள் தாங்கள் எதிர்ப்பைக் காட்டும்போது ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்கு எதிராகச் செயற்படுகிறோம் என்பதை மறந்துவிடுகிறார்கள். தனிப்பட்ட விடயங்களுக்காக தனிப்பட்ட ஒருவரை அல்லது தனிப்பட்ட அமைப்பு ஒன்றை எதிர்க்க முனையும் போது - ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் நலனையே எதிர்ப்பதை இவர்கள் உணர்வதில்லை. இதில் இன்று முக்கிய பங்கு வகிப்பது ஊடகங்களாகும். ஏனென்றால் இவர்களால் மட்டுமே பலரிடம் செல்லும் வகையில் செய்திகளை எடுத்துச் செல்லமுடிகிறது. பத்திரிகைகளாகட்டும், வானொலிகளாகட்டும் இன்று கனடாவில் 75 வீதமானவற்றில் - முழுமையாக அது பற்றித் தெரிந்தவர்கள், படித்தவர்கள் சமூக நோக்குடையவர்கள் அதனை நடத்துவதில்லை.

இவர்கள் சமுதாய நோக்கோடுசெயற்படுவதிலிருந்து விலகியே நிற்கின்றனர். காசுக்காக எதையும் பிரசுரிக்கவும், எந்தவொரு தமிழின எதிரிக்கும் தமது ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கவும் இவர்கள் தயங்குவதில்லை.

முன்னர் மாத்தையா பிரிந்தபோதும்,யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டபோதும்,கருணா பிரிந்தபோதும் இவர்கள் தமது சொந்தப் புத்தியைக் காட்டியிருந்தனர்.அப்போது இவர்கள் விடுதலைப்புலிகளையும், தமிழ்த் தேசியத்தையும் எதிர்த்து எழுதியும் - நிகழ்ச்சிகளை நடத்தியுமிருந்தனர்.

பின்னர் மக்கள் விழித்துக்கொண்டு இவர்களைத் தூக்கியெறிந்ததும் இவர்கள் தம்மைத் திருத்திக்கொள்ளவில்லை மாறாக விடுதலைப் புலிகளையும், தமிழ்த் தேசியத்தையும் ஆதரிப்பதாக நடிக்கத் தொடங்கினர். இப்போது புலிகள் அடக்கப்பட்டுவிட்ட நிலையில்

மீண்டும் தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இவர்களில் பலரும் தாங்கள் முன்னாள் போராளிக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று காட்டிக்கொண்டு விடுதலைப் புலிகளையே எதிர்ப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் முன்னாள் பேராளிக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்றும் அதே குழுக்களுடன் இயங்குகின்றனர் - அல்லது புலிகளுடன் சேர்ந்து போராடியுள்ளனர். இவர்கள் தாங்கள் புலிகளை மட்டும் எதிர்ப்பதாகக்கூறி இதுநாள்வரை புலிகளினதும் தேசியத்தினதும் போராட்டங்கiளை விமர்சித்தும் எதிர்த்தும்வந்தனர். ஆனால் இன்று புலிகள் இல்லையென்றானதன் பின்னரும் இவர்கள் தொடர்ந்து தேசியத்தினதும்,

தமிழ் மக்களினதும் பேராட்டங்களை விமர்சித்தும், எதிர்த்தும் வருகின்றனர். இதிலிருந்து இவர்கள் புலிகளுக்கு எதிரானவர்களோ அல்லது அவர்களி னால் நியமிக்கப்பட்ட புலம் பெயர் அமைப்புகளுக்கு எதிரானவர்களோ அல்ல என்பது புலனாகின்றது. இவர் கள் மகிந்தவிடவும், கருணா டக்ளஸ் போன்றவர்களிடமும் பணம் பெற்றுக் கொண்டு தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றவர்கள் என்பது இப்போது புலனாகின்றது. இவர்கள் இது வரையும் மகிந்தவினையோ, டக்ளஸ், கருணா போன்றவர்களையோ எதித்து எதுவும் எழுதவோ நிகழ்ச்சிகளை நடத்தவோ, பேராட்டங்களை முன்னெடுக்கவோ இல்லை. மாறாக தமிழர் கள் நடத்தும் நிகழ்வுகளை எதிர்ப்பதே தொழிலாகக் கொண்டுள்ளனர்.

இதனையே மகிந்தவின் அரசும் கூலிப்படைகளைக் கொண்டு செய்கின்றது. இவர்களைப் பயன்படுத்தி நாடு கடந்த தமிழீழ அரசை முறியடிக்க வேண்டும் என்று இப்போது ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. அதேபோல் வட்டுக் கோட்

டைத் தீர்மானத்தையும் கனடா அரசு அனுமதித்ததற்காக ஸ்ரீலங்கா அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அதனை - ஏன் புலம் பெயர்நாடுகளில் உள்ள தமிழ்த் துரோகிகளைக் கொண்டு நிறுத்தவில்லை என்று சிங்கள ஊடகங்கள் ஸ்ரீலங்கா

அரசைக் கேட்டுள்ளன. ஆனால் அவ்வாறு முயற்சிகள் நடைபெற்றும் அது மக்களின் பேராதரவால் முறியடிக்கப்பட்டது என்பதே உண்மை.

சிங்களவர்கள் தமிழர்களைக் கொல்லும் விடயத்திலும் சரி இனப்படுகொலை விடயத்திலும் சரி ஒன்றாகவே நிற்கிறார்கள். ஆனால் தமிழர்கள்தான் அதனை எதிர்ப்பதில் பிரிந்துநிற்கிறார்கள். தாங்களும் செய்ய மாட்டார்கள் மற்றவனையும் செய்ய விடமாட்டார்கள்.யாரோ ஒருவரின் தனிப்பட்ட கோபத்திற்காக யாரோ ஒருவரின் அல்லது அமைப்பின் செயற்பாடுகளை எதிர்க்க

முனைந்து முடிவில் ஒட்டுமொத்ததமிழ் மக்களின் நலன்களையே இவர் கள் எதிர்க்கிறார்கள் என்பதை ஏனோ இவர்கள் புரிந்துகொள்வதில்லை.

- வாசகன் ரட்ணதுரை

http://www.suthanthiran.com/118.pdf

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.