Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலுப்பிள்ளையின் பூதவுடலை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள மகள் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

வேலுப்பிள்ளையின் பூதவுடலை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள மகள் கோரிக்கை

உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள அவரது மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதுடன் இயற்கை மரணம் எனத் தெரிவிக்கபட்டாலும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமக்கு கருத்து தெரிவிக்கையில்,

"விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது பூதவுடலை கனடாவிலுள்ள அவரது மகளிடமோ,டென்மார்க்கிலுள்ள அவரது மகனிடமோ அல்லது இந்தியாவிலுள்ள அவரது மகளிடமோ அனுப்புவது சாத்தியமற்றது.

இந்நிலையில் கடாவிலுள்ள அவரது மகள் என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம் நான் தெரிவித்தேன் கனடாவிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை தொடர்புகொண்டு, இலங்கையிலுள்ள எமது உறவினர் சிவாஜிலிங்கத்திடம் பூதவுடலை கையளிக்குமாறும், இதற்கு நாம் அனுமதி தருவதாகவும் தெரிவிக்குமாறு கூறினேன்.

இதனையடுத்து துணைத்தூதரகம் விடுக்கும் அறிவுறுத்தலுக்கமைய, அரச தரப்புடன் கலந்தாலோசித்து அனுமதி பெற்று , நான் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் மற்றும் அவரது மனைவியை அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறையில் இறுதிக்கிரியைகளை நடத்துவேன்.

அதேவேளை அவரது மனைவி ஒரு பாரிசவாத நோயாளி. எனவே அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் அவரை இந்தியாவிலுள்ள அவரதி மகளிடம் அனுப்ப நடவடிக்கை எடுப்பேன். இந்தியா அனுமதி மறுக்குமாயின் கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பேன்.அதுவரையில் அவர் கொழும்பில் தங்குவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுடன் கதைத்து ஏற்படுத்திக் கொடுப்பேன்.இது குறித்து உரிய தரப்பு அதிகாரிகள், தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்" எனத் தெரிவித்தார்.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை இன்று மரணமடைந்ததாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் உறுதி செய்துள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடன் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரத் மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவ்ர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

-வீரகேசரி இணையம்-

.

Edited by தமிழ் சிறி

இராணுவ காவலில் சிறை வைக்கப்பட்டு அதனால் உயிரிழந்த தமிழீழ தேசிய தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடலை அவரது சொந்த ஊரான வல்வெட்டி துறையில் அடக்கம் செய்ய தருமாறு உறவினர்கள் கோரிக்கை.

மேற்படி பூதவுடல் தற்போது கொழும்பில் உள்ளதாகவும் எனினும் அவரது பாரியார் அல்லது பிள்ளைகள் முறைப்படி, சட்டரீதியாக உரிமை கோரப்படவேண்டும் என பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது. வெளி நாட்டில் இருக்கும் தேசிய தலைவர்களது சகோதர சகோதரிகள் இலங்கைக்கு செல்வது பாதுகாப்பு பிரச்சினையாக உள்ளது அவர்கள் அச்சப்படுகின்றனர். இதே வேளை வல்வெட்டி துறையில் வதியும் அவரது உறவினர்கள் பூதவுடலை பொறுப்பெடுத்து கிரிகைகள் மேற்கொள்ள விரும்புவதாகவும் அதற்காக அரசுடன் சிவாஜிலிங்கத்தினை தொடர்புகளை ஏற்படுத்தி பொறுப்பாக செயற்படுத்துமாறும் தேசிய தலைவரின் உறவினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பிந்திய செய்திகளின்படி அரசாங்கம் அவரது பூத உடலை கொழும்பிலேயே தகனம் செய்வதற்கும் இதற்காக சில உறவினர்களை கொழும்பிற்கு வரும்படியும் கேட்டுள்ளதாகவும் தகவல். ஆனால் தேசியத்தலைவரின் தந்தையின் விருப்பம் தன்னை ஊரிலேயே தகனம் செய்யவேண்டும் என்பதே ஆகும் என அவரது பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

முன்னைய செய்தி....

தமிழீழ தேசிய தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை இன்று சாவடைந்துளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவம் கூறுகின்றது.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து அரசாங்க தடுப்பு முகாமிற்கு மக்களுடன் சென்றனர் அங்கிருந்து பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்து விசாரிக்கப்பட்டனர். இவர்களை நாலாம் மாடியில் வைத்து விசாரணை செய்ததாக அப்போது உறுதிப்படுத்தப்பட்டது. தொல் திருமா இலங்கை சென்றபோது கோத்தபாயவிடம் இவர்களை பார்வையிட கேட்டபோது அவர்கள் நலமாக இருப்பதாக கூறப்பட்டது. இதே வேளை இவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் இவர்களின் உடல் நிலைகள் தொடர்பில் பலர் தொடர்பு கொண்டும் கேட்டபோது இராணுவத்தினரால் எதுவும் கூறப்படவில்லை. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை கூட பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.