Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை போர்குற்றம் தொடர்பில் ஐ. நா நிபுணத்துவ குழு அமைக்க தீர்மானம்

Featured Replies

இலங்கையில் ஆயுதப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமகள் மீறல், போர்குற்றம் ஆகியவற்றுக்கான சான்றுகள் வலுவடைந்து வரும் நிலையில் ஐ. நா அதுபற்றி விசாரணை செய்வதற்கு முன் ஓட்டமாக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்க உள்ளது. இது பற்றி பான்கி மூன் பரிந்துரைத்துள்ளார். இந்த நிபுணத்துவர் குழு பிலிப் அல்ஸ்டன் அவர்களுடன் சேர்ந்து இயங்குவதுடன் ஐ. நா செயலர் பான்கி மூனுக்கு ஆலோசனைகளையும் வழங்கும்.

முன்னதாக பிலிப் அல்ஸ்டன் சனல்4 வீடியோ காட்சியினை உண்மை தன்மை வாய்ந்தது என உறுதிப்படுத்தியுள்ளமையும் இதே வேளை இலங்கை உள் நாட்டில் அல்லாது சுதந்திரமான, நம்பிக்கையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ. நாவின் இந்த முயற்சி இலங்கை போர்க்குற்ற விசாரணைகளில் ஒரு திருப்பு முனையாகவோ அல்லது ஐ. நாவுக்கு ஆசியாவில் ஒரு கொள்கை ரீதியான மாற்றத்தினை உண்டு பண்ணுவதாகவோ அமையலாம் எனவும் கருதப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important

மகிந்த சகோதரர்களை கூண்டில் நிறுத்துவதா?

சிங்கள இனவெறி அரசை அரசை கூண்டில் நிறுத்தி................?

மகிந்த சகோதரர்களை கூண்டில் நிறுத்துவதா?

சிங்கள இனவெறி அரசை அரசை கூண்டில் நிறுத்தி................?

இன்று இரவு நெதர்லாந்த் அரச தொலைகாட்சியில் வீடியோ காட்சி காட்டப்பட்டது

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள்: தனி விசாரணைக்குழு அமைப்பது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பரிசீலனை .

.சிறிலங்காவின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு ஒன்றை நியமிப்பது தொடர்பாக தான் பரிசீலித்துவருவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சிறிலங்கா அரசுக்கு அறிவித்துள்ளார்.

சிறிலங்கா விவகாரம் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு தனி ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கான விரிவான பரிசீலனைகளை மேற்கொண்டுவருவதாக ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் மார்ட்டின் செசீக்கி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. அதிகாரி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கேட்டபோது மார்ட்டின் செசீக்கி பதிலளிக்கையில் -

ஐக்கிய நாடுகள் சபையின் படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி பிலிப் அல்ஸ்டன் சமர்ப்பித்துள்ள முன்வைத்துள்ள முடிவுகளின்படி, சிறிலங்காவில் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்த நம்பகரமான - பக்கசார்பற்ற - சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசு இந்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு வசதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகராலயம் உதவி செய்வதற்கு தயாராக உள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை தொடர்ச்சியாக சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துவருகிறது. அவ்வாறான விசாரணைகளை மேற்கொள்ளும்போது மட்டுமே சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் - என்றார்.

ஈழநேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை போர்குற்றம் தொடர்பில் ஐ. நா நிபுணத்துவ குழு அமைக்க தீர்மானம்

ஐநா அமெரிக்கா நோர்வே யப்பான் ஐரோப்பிய ஒன்றியம் எல்லாரும் சேந்துதான் இனப்படுகொலை நடத்தினதா கனக்க எழுதுப்பட்டுது.... உவை இப்ப சேப்பில்லாமல் போச்சுதோ?

அல்லது ரெம்பரியா வெளியில விட்டிட்டு முடிவுவர திரும்ப பாடுற பிளானோ? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.