Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த விடுத்த அழைப்பை யாழ் வேலையற்ற பட்டதாரி மாணவர்கள் புறக்கணிப்பு

Featured Replies

தமக்காக தேர்தல்ப் பரப்புரையில் ஈடுபடுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளினை யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேரடியாக நிராகரித்துள்ளனர்.

யாழ்.குடாநாட்டிற்கான பயணத்தினை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச ஈபிடிபியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் யாழ். ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்தார்.

இதன் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கான தேர்தல்ப் பரப்புரையில் ஈடுபடுமாறும் அவ்வாறு ஈடுபட்டால் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் மகிந்த ராஜபக்ச பட்டதாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த பட்டதாரிகள் ஏற்கனவே தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கருத்தில்க்கொண்டு தங்களுக்கு வாக்களிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ள நாங்கள் எவ்வாறு தேர்த்தல் பரப்புரைகளில் உங்களுக்குச் சார்பாகச் செயற்படமுடியும் என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் மகிந்த ராஜபக்சவும், டக்ளஸ்தேவானந்தாவும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்று யாழ்.குடாநாட்டிற்கான பரப்புரை நோக்கில் அமைந்த பயணத்தினை மகிந்த ராஜபக்ச மேற்கொண்டிருந்தார். இதனால் இன்று சில மணி நேரம் பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் முற்றாக இடைநிறுத்தப்பட்ட அதேவேளை, நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக இன்று காலை முதல் சென்ற பக்தர்கள் அனைவரும் கடும் சோதனைக் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://tamilseithekal.blogspot.com/2010/01/blog-post_8286.html :D

யாழ் நகரம் இப்போது கேளிக்கை கூடாரமாகி விட்டது என்றும் யாழ் இளைஞர்கள் வீணர்கள் போல செயற்படுகிறார்கள் என்றும் புலத்திலிருந்து வந்து சேரும் பணம் யாழ்பபாணத்தை கலாசாரச் சீரழிவுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது என்றும் வந்த செய்திகளைப் படித்து நொந்து போயிருந்த எங்களுக்கு இன்று ஆறுதலான செய்தி ஒன்று எட்டியிருக்கிறது.

தான் கொன்றொழித்த தமிழ் மக்களின் சகோதரர்களிடமே வாக்குப் பிச்சை கேட்டு வந்த மகிந்த ராஜபக்ச வேலையில்லாப் பட்டதாரிகளைச் சந்தித்து தேர்தலில் எனக்காகப் பிரச்சாரம் செய்யுங்கள்இ நான் பதவிக்கு வந்ததுமே உங்களுக்கு தொழில் தருகிறேன் என்று கேட்க ஏற்கனவே உங்களுக்கு வாக்களிப்பதில்லை என்று தீர்மானித்து விட்ட நாங்கள் எப்படி உங்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்று எதிர்க் கேள்வி கேட்டு மகிந்தவின் முகத்தில் கரி பூசியிருக்கிறீர்கள்.

விடுதலைப் புலிகளே தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டும் பிரபாகரனே எம் தலைவர் என்று மார்தட்டிக் கொண்டும் திரிந்த சிவநாதன் கிசோர்இ சிறிகாந்தா போன்றவர்கள் பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சுருதி மாறிப் பாடிக் கொண்டு திரிவதைப் பார்த்து விட்டு அட தமிழ் மக்களின் உறுதி அவ்வளவு தானா என்று தப்புக் கணக்குப் போட்டு உங்களிடம் இப்படி ஒரு கேள்வியை மகிந்தர் கேட்டிருக்கலாம். ஆனால் சொரணை கெட்ட ஒரு சில தமிழர்களை வைத்து ஒட்டு மொத்தத் தமிழினத்தையும் தப்புக் கணக்குப் போடாதே என்று மகிந்தவுக்கு உறைக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.

சிங்கள தேசத்தின் தலைவர் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று எண்ணி காய் நகர்த்தும் அயல் தேசத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பியும் ‘பாசமிகு கவனிப்பு’களால் ஏமாந்தும் தமிழக் கூட்டமைபபின் ஒற்றுமையைக் கேலிக்கூத்தாக்கியும் தமிழ் வாக்குகளைச் சிதைக்கவும் ‘சுயஇச்சை’யாய் களமிறங்கியிருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைப் பார்த்துக் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே உங்களிடம் ஒரு எலும்புத் துண்டை விட்டெறிந்த மகிந்தவிற்கு சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்.

அத்தனை வசதிகளுடன் புலத்திலே வாழ்ந்து கொண்டு ‘தமிழ்’ ‘தமிழ்’ என்று கோசம் எழுப்பிக் கொண்டு திரிந்தவர்கள் முள்ளிவாய்காலிலே தமிழரின் போராட்டம் பின்னடைவைக் கண்டதும் இனி எல்லாமுமே நீ தான் என்று கூறிக் கொண்டு அலரிமாளிகையை நோக்கி விமானமேறியதைக் கண்டு வெதும்பிப் போயிருந்த எங்களுக்கு தமிழ் மண்ணிலே இருந்து கொண்டு மண்டியிட மறுத்த உங்கள் வீரம் ஆறுதலளிக்கிறது.

அற்ப பணத்தாசைக்காக விலைபோகும் புல்லுருவிகள் மத்தியிலே மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பில் பழி வாங்கப் படுவோம் என்று தெரிந்தும் நெஞ்சை நமிர்த்தி உங்கள் மனச்சாட்சிக்குப் பங்கமில்லாமல் பேசியிருக்கிறீர்கள்.

பட்டதாரி இளைஞர்களே! பனிபடரந்த தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தாயக தேசத்தின் நிலை கண்டும் பணத்துக்கும் பதவிக்கும் விலை போகும் ஈனப் பிறவிகளின் செயல் கண்டும் நொந்து போயிருக்கும் எந்தன் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

மூலம்: http://seithi1.blogspot.com/2010/01/blog-post_10.html

  • கருத்துக்கள உறவுகள்

அற்ப பணத்தாசைக்காக விலைபோகும் புல்லுருவிகள் மத்தியிலே மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பில் பழி வாங்கப் படுவோம் என்று தெரிந்தும் நெஞ்சை நமிர்த்தி உங்கள் மனச்சாட்சிக்குப் பங்கமில்லாமல் பேசியிருக்கிறீர்கள்.

பட்டதாரி இளைஞர்களே! பனிபடரந்த தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தாயக தேசத்தின் நிலை கண்டும் பணத்துக்கும் பதவிக்கும் விலை போகும் ஈனப் பிறவிகளின் செயல் கண்டும் நொந்து போயிருக்கும் எந்தன் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

அற்ப பணத்தாசைக்காக விலைபோகும் புல்லுருவிகள் மத்தியிலே மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பில் பழி வாங்கப் படுவோம் என்று தெரிந்தும் நெஞ்சை நமிர்த்தி உங்கள் மனச்சாட்சிக்குப் பங்கமில்லாமல் பேசியிருக்கிறீர்கள்.

பட்டதாரி இளைஞர்களே! பனிபடரந்த தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தாயக தேசத்தின் நிலை கண்டும் பணத்துக்கும் பதவிக்கும் விலை போகும் ஈனப் பிறவிகளின் செயல் கண்டும் நொந்து போயிருக்கும் எந்தன் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

தலைவரின் தந்தை இறுதி நிகழ்வுக்கு போன மக்களை காட்டி குடுத்தது போல இது இல்லையோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் தந்தை இறுதி நிகழ்வுக்கு போன மக்களை காட்டி குடுத்தது போல இது இல்லையோ...??

அநேகமா புலம்பெயர் தமிழர் உசுப்பி விட்டதாலதான் இவையள் இப்பிடி தைரியமா கேள்வி கேட்டிருக்கினம்..! அப்பவே தலை தலையா அடிச்சுக்கொண்டம், உசுப்ப வேண்டாம் எண்டு..! கேட்டால்தானே.. :D

அநேகமா புலம்பெயர் தமிழர் உசுப்பி விட்டதாலதான் இவையள் இப்பிடி தைரியமா கேள்வி கேட்டிருக்கினம்..! அப்பவே தலை தலையா அடிச்சுக்கொண்டம், உசுப்ப வேண்டாம் எண்டு..! கேட்டால்தானே.. :D

முந்தி புலி உசுப்பி விட்டு சனம் வெளியாலை வந்து காட்டி கொடுக்க பட்டது இப்ப புலம்பெயந்தவை உசுப்பி விட்டே...?? நான் நினைக்கிறன் யாழ்ப்பாணத்திலை இருக்கிற தமிழன் எல்லாம் மண்டைக்கை மூளை இல்லாதவங்கள் எண்டு... தேவை இல்லாமல் அபாயத்துக்கை போகிறாங்கள்...

புலம்பெயந்த மேதைகள் சிலர் இருக்கினம் அவையிட்டை சொல்லி மூளை கொஞ்சம் அனுப்பி வைக்க வேணும்...

தமக்காக தேர்தல்ப் பரப்புரையில் ஈடுபடுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளினை யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேரடியாக நிராகரித்துள்ளனர்.

இதன் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கான தேர்தல்ப் பரப்புரையில் ஈடுபடுமாறும் அவ்வாறு ஈடுபட்டால் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் மகிந்த ராஜபக்ச பட்டதாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த பட்டதாரிகள் ஏற்கனவே தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கருத்தில்க்கொண்டு தங்களுக்கு வாக்களிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ள நாங்கள் எவ்வாறு தேர்த்தல் பரப்புரைகளில் உங்களுக்குச் சார்பாகச் செயற்படமுடியும் என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் மகிந்த ராஜபக்சவும், டக்ளஸ்தேவானந்தாவும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

http://tamilseithekal.blogspot.com/2010/01/blog-post_8286.html :D

சகோதரர்களே உங்களுடைய இந்தமுடிவை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது..

மானத்தமிழினம் எவனிடமும் மண்டியிடாது என்பதை நிரூபித்து விட்டிர்கள்...

சகோதரர்களே உங்களுடைய இந்தமுடிவை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது..

மானத்தமிழினம் எவனிடமும் மண்டியிடாது என்பதை நிரூபித்து விட்டிர்கள்...

ஊரிலை இருக்கும் மக்களுக்கான முடிவை புலம்பெயந்தவை எடுக்க முடியாது எண்டு சிலர் சொல்லிச்சினம்... இப்ப அந்த மக்களை யாரோ தூண்டி விட்டு வெளியாலை வந்து போராட வைத்து இலங்கை அரசாங்கத்துக்கு காட்டி குடுக்கினம் எண்டு எல்லோ சொல்லுகினம்...

சனம் வெளியால வராட்டால் உங்களுக்கு அவர்களின் ஆதரவில்லையாம்... வெளியால வந்தால் நீங்கள் அவர்களை காட்டி குடுக்கிறீர்களாம்... இப்படி தமிழருக்கை ஒரு வியாதி இருக்குதே....

எனக்கு என்னவோ உங்கட சந்தோசத்தை பாத்தால் நீங்கள் தான் அங்கை இருக்கிற சனத்தை தூண்டி விட்டனீங்கள் போலகிடக்கு... :D

எனக்கு என்னவோ உங்கட சந்தோசத்தை பாத்தால் நீங்கள் தான் அங்கை இருக்கிற சனத்தை தூண்டி விட்டனீங்கள் போலகிடக்கு... :D

அப்படியாயின் தயா அண்ணா நீங்கள் என்ன மகிந்தவை கண்டு!!! அவனுக்கு வாலாட்ட சொல்லி சொல்லாமல் சொல்கிறீர்களா??

Edited by shanu thinesh

அப்படியாயின் தயா அண்ணா நீங்கள் என்ன மகிந்தவை கண்டு!!! அவனுக்கு வாலாட்ட சொல்லி சொல்லாமல் சொல்கிறீர்களா??

மகிந்தவுக்கு எண்டு இல்லை ஆனால் சிங்களவன் சரத்துக்கு வாலை ஆட்டுங்கோ எண்டுதான் தமிழ் அறிவுக்களஞ்சியங்கள் எனக்கு சொல்லி தருகினம்... நான் அதை உங்களுக்கு சொல்கிறேன்...

இதுக்கு மேலை நீங்கள் என்னை என்ன மாதிரி திட்டுவதாக இருந்தாலும் திட்டலாம்... அது எனக்கு சொல்லி தந்தவர்களுக்கு சமர்ப்பணம்... :D

மகிந்தவுக்கு எண்டு இல்லை ஆனால் சிங்களவன் சரத்துக்கு வாலை ஆட்டுங்கோ எண்டுதான் தமிழ் அறிவுக்களஞ்சியங்கள் எனக்கு சொல்லி தருகினம்... நான் அதை உங்களுக்கு சொல்கிறேன்...

இதுக்கு மேலை நீங்கள் என்னை என்ன மாதிரி திட்டுவதாக இருந்தாலும் திட்டலாம்... அது எனக்கு சொல்லி தந்தவர்களுக்கு சமர்ப்பணம்... :(

நமக்குள் நாமே திட்டுப்பட்டு கொண்டிருந்தால்!!! எம்மை திட்டுவதறகான சந்ததியை நாம் இழந்து விடுவோம் அண்ணா.. :D:) :)

இருவருமே தமிழின அழிப்பில் முன்னின்று உளைத்தவர்க்ள் எனவே ஒருவனைமட்டும் எதிர்த்து மற்றவனை ஆதரிப்பதென்பது தவறு..

புலத்தில் உள்ளவர்கள் அமைதியாக இருந்தால் வலிகளை அனுபவித்தவர்கள் தீர்கமான முடிவை எடுப்பார்கள் என்று நம்புவோம் நம்புவோமாக..

Edited by shanu thinesh

நமக்குள் நாமே திட்டுப்பட்டு கொண்டிருந்தால்!!! எம்மை திட்டுவதறகான சந்ததியை நாம் இழந்து விடுவோம் அண்ணா.. :D:) :)

முதுகிலை குத்திறவனை பின்னாலை வச்சு கொண்டு எதையாவது சாதிக்கலாம் எண்டுறீயள்... நடத்துங்கோ...

இருவருமே தமிழின அழிப்பில் முன்னின்று உளைத்தவர்கள் எனவே ஒருவனைமட்டும் எதிர்த்து மற்றவனை ஆதரிப்பதென்பது தவறு..

தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் இந்த இரண்டு கொலைகாரர்களையும் நிராகரித்து விக்கிரமபாகு கருணாரட்ண போன்றவர்களை ஆதரிப்பதே சரியான தேர்வாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் தந்தை இறுதி நிகழ்வுக்கு போன மக்களை காட்டி குடுத்தது போல இது இல்லையோ...??

  • கருத்துக்கள உறவுகள்

நானும் LOGIC படித்தவன்

இருப்பதை மறுத்தும்

இல்லாததை நிறுவியும்

என்னாலும் இதுபோல் எழுதி போட்டுத்தாக்கமுடியும்

ஆனால் என் கொலரை நானே தூக்கிவிட மட்டுமே அது உதவும்

எனக்கு வேற வேலை இருக்கிறது செய்ய....

காக்க....

ஒன்று சேர்க்க...

அணி திரள.... என்று.மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் நகரம் இப்போது கேளிக்கை கூடாரமாகி விட்டது என்றும் யாழ் இளைஞர்கள் வீணர்கள் போல செயற்படுகிறார்கள் என்றும் புலத்திலிருந்து வந்து சேரும் பணம் யாழ்ப்பாணத்தை கலாசாரச் சீரழிவுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது என்றும் வந்த செய்திகளைப் படித்து நொந்து போயிருந்த எங்களுக்கு இன்று ஆறுதலான செய்தி ஒன்று எட்டியிருக்கிறது.

சகோதரர்களே உங்களுடைய இந்தமுடிவை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது..

மானத்தமிழினம் எவனிடமும் மண்டியிடாது என்பதை நிரூபித்து விட்டிர்கள்...

இந்த கருத்துக்களையே நானும் எண்ணுகிறென்.

மேலும் புலிகள் தூண்டி விட்டோ புலம் பெயர்ந்தவர்கள் தூண்டி விட்டோ அவர்கள் எதையும் செய்ய வேண்டியது இல்லை.

அடி பட்டவனுக்கு அந்த வலி இருப்பது இயல்பே.

யாரும் சொல்லி அது வெளிப்பட வேண்டிய அவசியமில்லையே????

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் தந்தையின் நிகழ்வுக்கும்

மகிந்தவால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கும்

நிறைய வேறுபாடு உண்டு

நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு போட.டுத்தாக்குங்கள்

விடிவு வரும்

நான் நினைத்தது சரி என்று நிறுவும் செய்திகள் வரும்போது

நான் போட்டுத்தாக்குகின்றேன்

எமக்கும் கணணிதானே

செலவு இல்லை

சாவதும் யாரோதானே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த விடுத்த அழைப்பை யாழ் வேலையற்ற பட்டதாரி மாணவர்கள் புறக்கணிப்பு
தலைப்பு இதுதானாம்..... :unsure:

தலைப்பு இதுதானாம்..... :unsure:

யாழ் மக்களுன் தலைவன் டக்கிளசின் ஆதரவு பெற்ற மகிந்தவை ஏன் திரும்பி போ எண்டு பெடியள் கோசம் போட்டவை...??? ஏதாவது சொந்தப்பிரச்சினையோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் மக்களுன் தலைவன் டக்கிளசின் ஆதரவு பெற்ற மகிந்தவை ஏன் திரும்பி போ எண்டு பெடியள் கோசம் போட்டவை...??? ஏதாவது சொந்தப்பிரச்சினையோ...??

நீங்கள்தான் தொடர்பில இருக்கிறீங்கள், நீங்கள் சொல்ல வாறதை தெளிவா சொன்னா கேட்டு சிரிச்சிட்டு போறம்.. சொல்லுங்கோ... :unsure:

நீங்கள்தான் தொடர்பில இருக்கிறீங்கள், நீங்கள் சொல்ல வாறதை தெளிவா சொன்னா கேட்டு சிரிச்சிட்டு போறம்.. சொல்லுங்கோ... :unsure:

உந்த பெடியளை நாளைக்கு தேர்தலிலை வெண்டால் பிறகு மண்டையிலை போடுவாங்களாம் எண்டு இங்கை கதைக்கினமே நீங்க என்ன நினைக்கிறீர்கள்....??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பெடியளை நாளைக்கு தேர்தலிலை வெண்டால் பிறகு மண்டையிலை போடுவாங்களாம் எண்டு இங்கை கதைக்கினமே நீங்க என்ன நினைக்கிறீர்கள்....??

என்னண்ணை புதுசா.... தேர்தலில வெண்டாப்பிறகு...மாறி மாறி போராடுறது எப்ப நிண்டது? யார் வந்தாலும் உது நிக்கப்போறேல்ல.

தலைவரே சொல்லிருக்கிறார்.....கடைசி தமிழன் இருக்கும்வரை போராடுவோம் எண்டு.... நீங்களும்!!!! :unsure::lol:

Edited by Mathivathanang

என்னண்ணை புதுசா.... தேர்தலில வெண்டாப்பிறகு? மாறி மாறி போடுறது எப்ப நிண்டது? யார் வந்தாலும் உது நிக்கப்போறேல்ல?

தலைவரே சொல்லிருக்கிறார்.....கடைசி தமிழன் இருக்கும்வரை போராடுவோம் எண்டு.... நீங்களும்!!!! :unsure::lol:

நீங்கள் போராடா விட்டாலும் போடுவினம் அது வேற விசயம்...

சரத் மாமா வந்தால் தாடி மாமாவையும் போடுவாராம் எண்டு எல்லோ கதைக்கினம்... இப்ப கொழும்பிலை குடு விக்கிற ஆக்களை போடுகிற மாதிரி...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் போராடா விட்டாலும் போடுவினம் அது வேற விசயம்...

சரத் மாமா வந்தால் தாடி மாமாவையும் போடுவாராம் எண்டு எல்லோ கதைக்கினம்... இப்ப கொழும்பிலை குடு விக்கிற ஆக்களை போடுகிற மாதிரி...

சிங்களவனுக்கு அரசியல் தெரியும்..... :unsure::lol:

சிங்களவனுக்கு அரசியல் தெரியும்..... :unsure::lol:

சிங்களவன் தலைமை எப்ப எல்லாம் அரசியலில் மிகப்பலம் பெற்றாலும் தனது பலத்தை காட்டுவது தமிழர்களிடம் தான்... பண்டாரநாயக்க காலத்திலை இருந்து ஜே ஆர், பிரேமதாசா , சந்திரிக்கா , எண்டு தமிழர்கள் நம்பி கெட்ட வரலாறு தான் அதிகம்... அதில் மகிந்த மட்டுமே சிங்களவரின் பூரண ஆதரவோடு பலமாக ஆட்ச்சிக்கு வந்தவன்... அதனால்த்தால் அவனை தமிழர்களில் வெறுப்பானவன் என்பதை உலகம் ஏற்று கொள்கிறது...

அதனாலை தான் சிங்களவரில் இரணில் போண்ற சில அரசியல் பழங்கள் சரத்பொன்சேகாவை கொண்டுவருவதுக்காக விட்டுக்கொடுப்போடு செயற்படுகின்றன.... நாளைக்கு நாங்கள் போரியல் குற்றச்சாட்டில் இருந்து தப்ப எப்படி தமிழர்களை ஏமாற்றினோம்.. அவர்களின் ஆதரவை சிங்களவர் தலைமைக்கு( சரத்துக்கு) இருப்பதாக காட்டி கொள்ள என்ன எல்லாம் செய்தோம். எண்டு ஒரு சிங்களவன் கட்டுரை எழுதுவான்... அதைக்கொண்டுவந்து இங்கை போட்டு பெருமூச்சு விடும் எங்கட சனம்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.