Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட இலங்கையில் தொடருந்து பாதை அமைக்க மில்லியன் கணக்கில் டொலர்களை கொட்டுகின்றது இந்தியா

Featured Replies

வட இலங்கையில் ஓமந்தைக்கும் பளைக்கும் இடையிலான தொடருந்துப் பாதையை அமைப்பதற்கான வர்த்தக உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் இன்று தி்ங்கள்கிழமை கைச்சாத்திட்டன.

கொழும்பில் உள்ள சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சில், இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.

IRCON International என்ற தொடருந்துப் பாதைகளை அமைப்பதற்கான, இந்திய அரசுத்துறை நிறுவனத்தின் சார்பில் எஸ்.எல்.குப்தாவும், சிறிலங்கா தொடருந்து திணைக்களத்தின் [sri Lnka Railway] சார்பில் விஜேசேகரவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

இந்த உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வில் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தவும், சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் கலந்து கொண்டனர்.

இந்த உடன்பாட்டின்படி இந்திய அரசு நிறுவனம் இந்த புனரமைப்பு வேலைகளுக்காக 185 மில்லியன் டொலரை கடனாக வழங்கவுள்ளது.

இரண்டரை வருடங்களுக்குள் 90 கி.மீ நீளமான இந்த தொடருந்துப் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த வருடம் முதல் காலாண்டில் இந்த வேலைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்த உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வில் பேசிய இந்தியத் தூதுவர் அசோக் கே காந்த, வடக்கில் இயல்பு நிலையை மீளவும் கட்டியெழுப்புவதற்கு போக்குவரத்து அடிக்கட்டுமானங்கள் மீளமைக்கப்படுவது மிகவும் அவசியம் என்றும், அதற்காக இந்தியா இந்த ஊக்குவிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

வடபகுதி தொடருந்துப் பாதைகளைப் புனரமைக்க ஐந்து கட்ட திட்டத்தை சிறிலங்கா அரசு தயாரித்துள்ளது.

வவுனியா – ஓமந்தை, ஓமந்தை – பளை, பளை – காங்கேசன்துறை, மதவாச்சி – மடு, மடு – தலைமன்னார் என இந்தப் புனரமைப்பு வேலைகள் இடம்பெறவுள்ளன.

சிறிலங்கா அரசின் நிதியில் வவுனியா – ஒமந்தை தொடருந்துப் பாதை புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ஒமந்தை – பளை இடையிலான தொடருந்துப் பாதை புனரமைப்பை இந்தியா ஏற்றுள்ளது.

பளை- காங்கேசன்துறை இடையிலான தொடருந்துப் பாதை புனரமைப்பு வேலைகளை சீனா மேற்கொள்ளவுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே வேளை, மதவாச்சி – மடு தொடருந்துப் பாதைப் புனரமைப்புக்காக 81 மில்லியன் டொலரையும், மடு – தலைமன்னார் இடையிலான தொடருந்துப் பாதை புனரமைப்புக்கு 149 மில்லியன் டொலரையும் இந்தியா கடனாக வழங்கவுள்ளது.

இதன்படி சிறிலங்காவின் தொடருந்து பாதைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்தியா மொத்தம் 425 மில்லியன் டொலரை செலவிடவுள்ளது.

ஏற்கனவே – சுனாமியால் பாதிக்கப்பட்ட மாத்தறை – கொழும்பு தொடருந்துப் பாதையைப் புனரமைப்பதற்காக இந்தியா 167.4 மில்லியன் டொலரை சிறிலங்காவுக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://tamilseithekal.blogspot.com/2010/01/blog-post_6089.html :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் இந்திய காந்தி குடும்பம். இவையிண்ட பிளான் பிழைச்சு போச்சு. சீனன் வந்து இரண்டு வருசத்துக்கு முன்னாடி சந்தில பூந்து சிந்து பாடிட்டான். அவன் அம்பாந்தோட்டையில இந்தியாவில இல்லாத அளவிற்கு ஒரு நவீன கடல் தளத்தை போட்டுடான். மீசைல மண்படல எண்டு காட்டுறதுக்கு இவை வடக்கை அமுக்கி காங்கேசன்துறையை டேவேலோப் பண்ண பாக்கினம். அதான் பலாலிய பெருப்பிகிரம் எண்டும் கிழம்பினம். கட்டி, முழுக்க சிங்களவரை கொண்டு குடியேற்றுவது தான் திட்டம். இது எங்கட டக்லஸ் அண்ணனுக்கு வடிவா தெரியும். அதான் யாழ் போய் கள்ளமா நிலம் வளைக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.