Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காக் கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்காக் கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர் படகுகளின் வலைகளை சிறீலங்கா கடற்படையினர் வெட்டி கடலில் மூழ்கடித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இராமேஸ்வரம் மீனவர்கள் கூறியதாவது,

கடந்த 11 ம் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 700 விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் வழக்கம் போல் இந்திய, சிறீலங்கா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு மாலை 4 மணியளவில் 5 போர் கப்பலில் சிறீலங்கா கடற்படையினர் ரோந்து வந்தனர்.

பின்னர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த லிடன், மிக்கேல், சூசை, செல்வம் உள்ளிட்ட 10 பேருக்கு சொந்தமான விசைப்படகுகளை சிறீலங்கா கடற்படையினர் பிடித்தனர்.

இதையடுத்து படகில் இருந்த மீனவர்களை கயிற்றால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அரிவாளால் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் மூழ்கடித்தனர். இதனால் மீனவர்களுக்கு ரூ.3 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் முதல் இராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தவில்லை.

இதனால் மீனவர்களுக்கு மீன்வரத்து அதிகமாகக் கிடைத்தது. இந்த நிலையில் 45 நாள்கள் கழித்து மீண்டும் சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியதால் மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

http://meenakam.com/?p=3054

Edited by விடியல்

  • கருத்துக்கள உறவுகள்

ஜீரணிக்க முடியாத சில விடையங்களை கூறுகிறேன். இந்திய மீனவர்கள், இலங்கைத் தீவின் கடற்பரப்பினிலேயே காலாகாலமயக மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். இதனை அவர்களே பலதடவை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக மண்டைதீவினை அண்மித்த பகுதிகளில் பாரிய அளவில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதன்போது இலங்கை மீனவர்கள் வலைகளை இழந்ததுடன், அன்றாட வாழ்கையும் பாதிப்படைந்தது.

என்னதான் செய்வது. இலங்கையின் இறையாண்மையின் பெயரால் இவைகள் நடக்கிறது. தமிழர்களுக்கு இப்படித்தான் தீர்வு. அது தமிழ்நாட்டுத் தமிழனாயிருந்தாலும் சரி ஈழத் தமிழனாயிருந்தாலும் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.