Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயத் தீர்வே தமிழர்கள் கேட்பது தெற்கு விட்டெறியும் பிச்சையை அல்ல--உதயன் நாளிதழ்

Featured Replies

நியாயத் தீர்வே தமிழர்கள் கேட்பது தெற்கு விட்டெறியும் பிச்சையை அல்ல--உதயன் நாளிதழ்

"நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரம் அல்ல, நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண் டும்.'' என்பது சட்ட மற்றும் நீதித்துறை தொடர்பான ஓர் ஆன்றோர் மொழியாகும்.

இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை தொடர் பான விடயத்துக்குத் தீர்வு காணும் விவகாரத்திலும் கூட அதுதான் நியாயம். அதுவே நிலைநாட்டaப்பட வேண்டிய முறையுமாகும். ஆனால் அதுபற்றி யாரும் சிந்திப்பவர்களாகத் தெரியவில்லை.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத் தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட தரப்பு சிறுபான்மை யினரான தமிழர்கள்தாம்.

தமக்கு நீதி கோரி, நியாயம் வேண்டி, கௌரவ வாழ் வுரிமை தேடி, சுதந்திரம் நாடி பல்வேறு வழிகளிலும் போராடிய தமிழர் தரப்பு இன்றும் அடக்கப்பட்டிருக் கின்றது. ஆரம்பத்தில் காந்திய நெறியில் அஹிம்சைப் பாதையில் அறவழியில் அவர்கள் தமது உரிமைகளுக்காகத் தொடுத்த போராட்டமும், பின்னர் அதே இலக்கோடு அவர்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட் டமும் ஆட்சி, அதிகாரத் தரப்பின் பலாத்கார வலிமை மூலம் அடக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் துவண்டு கிடக்கும் தமிழினத்துக்கு நீதி செய்யவேண்டிய நியாயம் இயற்ற வேண்டிய தனது பொறுப்பைச் செய்யாது தட்டிக் கழிக்கின்றது தென் னிலங்கை. நீதி, நியாயம் கோரும் தமிழர் தரப்புக்கு உரியதை அவர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்கின்ற ஒழுங்கு முறைகளை வழங்காது வேறு வியாக்கியானம் செய்ய முற்படுகின்றது தென்னி லங்கை.

போரியல் வெற்றிக்களிப்பின் உச்சத்தில் நிற்கும் கொழும்பு தான் தமிழர்களுக்கு எதை வழங்க முடி யுமோ வழங்க விரும்புகின்றதோ அது மட்டுமே தீர்வாக இருக்கமுடியும் என்று கூறுகின்றது.

அதாவது, இலங்கைத் தமிழர்கள் இரப்பவர்கள் போலவும், கொழும்பு ஆட்சியாளர்கள் இரந்துவக்கின் றவர்கள் போலவும், தமிழர் பிரதேசத்துக்கு ஆட்சித் தரப்பு விட்டெறியக் கூடிய பிச்சை போன்ற விவகார மாக இனப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழருக்கு வழங் கப்படக்கூடிய சகாயங்கள், சலுகைகள் குறித்துப் பேசுகின்றது தென்னிலங்கை ஆட்சித் தரப்பு.

தமது பாரம்பரிய தாயகத்தில், தங்களைத் தாங்களே நிர்வகிக்கின்ற தமது கட்டமைப்பு முறையை காலங் காலமாகத் தமது பிரதேசத்தில் விளங்கி வந்த சுயாட்சி முறையை தமது வரலாற்று ரீதியான உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவது குறித்தே தமிழர்கள் பேசுகின்றார்கள். அதற்காகவே அவர்கள் போராடுகின்றார்கள். அதையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழர்களின் அந்த நீதியான அபிலாஷைகளைக் கருத்தில் எடுக்காது, தாங்கள் எதை விட்டுக் கொடுக்க முடியும் என்பதைப் பற்றியே தென்னிலங்கையும், அதன் ஆட்சித் தலைமையும் பிரபலாபிக்கின்றன.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது பெரும் பான்மை இனம், சிறுபான்மை இனத்துக்கு இடக் கூடிய "பிச்சை' பற்றிய விடயம் போல கையாளப் படக்கூடாது. பெரும்பான்மையினரான சிங்களவர்கள் எதை விட்டுக்கொடுக்கத் தயாரோ, அதுவே இணக் கமான தீர்வாக இருக்கமுடியும் என அர்த்தப்படுத்தவும் கூடாது; அர்த்தப்படுத்தவும் முடியாது.

எண்ணிக்கையின் ஆள் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகாரம் யாருக்கு என்பதைத் தீர் மானிக்கும் மாண்பு ஜனநாயகத்திற்கு உரியது.

ஆனால் நீதி, நியாயம் எது என்பதை எண்ணிக் கையை வைத்துத் தீர்மானிப்பது தப்பு. பெரும்பான் மையானோர் அநீதியை விரும்புகின்றார்கள் என்பதற் காக அது நீதியாகிவிட முடியாது; நியாயமாகிவிடவும் இயலாது.

எனவே இனப்பிரச்சினையின் மூலங்களாகப் புதைந்து கிடக்கும் வரலாற்றுப் பின்புலங்களையும், சரித்திர உண்மைகளையும், பக்கம் சாராது உள்வாங்கி, இது வரையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக முன்னெடுக் கப்பட்ட நடவடிக்கைகளின்போது இணக்கம் காணப்பட்ட அம்சங்களையும் கருத்தில் எடுத்து, அவற்றின் அடிப்படையில் தமிழர் தரப்பு முன்வைத்திருக்கும் அவர்களின் அபிலாஷை பற்றிய வேணவாவையும் கவனத்தில் கொண்டு, அவற்றின் அடிப்படையில் தான் இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வு வகுக் கப்பட வேண்டும்.

அதை விடுத்து, பெரும்பான்மை இனம் என்ற பலத்தை வைத்துக்கொண்டு, அதன்மூலம் தனக்குப் பெற்றுக்கொள்ள முடிந்த இராணுவ வெற்றியின் சிகரத்தில் ஏறி நின்றபடி, தான் தூக்கி வீசுவதை சிறு பான்மை இனம் பவ்வியமாக அடங்கிப் பெற்றுக் கொள் வதே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும் என்று கொழும்பு ஆட்சித் தரப்பு தனது வழமையான மமதைப் போக்கில் நம்புமானால் அது அபத்தமின்றி வேறில்லை. அத்தகைய மமதைப் போக்கில் ஆட்சித் தரப்பு பிடி வாதமாக இருக்குமானால், இந்த நாட்டில் மற்றொரு விப ரீதத்துக்கு வினை விதைக்க அது விரும்புகிறது என்பதே அர்ததமாகும் அல்லவா?

http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=5293

  • கருத்துக்கள உறவுகள்

Uthayanukku thalai paNikiRen. pulampeyarntha ellaa amaippukaLum varalarum uthayanukkukku kadamaip paddullathu. - V.I.S.Jayapalan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நியாயத் தீர்வே தமிழர்கள் கேட்பது தெற்கு விட்டெறியும் பிச்சையை அல்ல--உதயன் நாளிதழ்

Edited by Mathivathanang

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.