Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள களியாட்டக்காரர்களால் நிரம்பிக் கிடக்கும் தமிழீழ கடற்கரைகள்: பிரித்தானிய ஊடகவியலாளர்

Featured Replies

சிங்கள களியாட்டக்காரர்களால் நிரம்பிக் கிடக்கும் தமிழீழ கடற்கரைகள்: பிரித்தானிய ஊடகவியலாளர்

போரால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட காயங்கள் ஆறும் வரைக்கும் சிறிலங்காவின் கிழக்குக் கடற்கரைகளை கடற்தொழிலாளர்களிடமும் விவசாயிகளிடமும் விட்டு வைப்பதே சிறந்தது.

பிரித்தானிய ஊடகவியலாளர் Gill Charlton என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது கட்டுரையின் முழுவிபரமாவது:

30 வருடங்கள் நீண்ட உள்நாட்டுப் போரின் பின்னர் சிறிலங்காவின் கிழக்குப் பகுதி கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படும் கரையோரங்கள் சுற்றுலாப் பயணிகளுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை.

விடுதலைப் புலிப் போராளிகளுக்குப் பதிலாக இந்தக் கரையோரங்கள் தற்போது சிங்கள இளம் களியாட்டக்காரர்களால் நிரம்பிக் கிடக்கின்றன.

திருகோணமலை நகரில் இருந்து வடக்கு நோக்கி கடந்த மாதத்தில் பயணித்தேன்.

வாகன நிறுத்துமிடங்களாக மாற்றப்பட்டிருந்த அந்த அழகிய கடற்கரையோரங்கள் வார விடுமுறையைக் கழிப்பவர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தன.

நகரில் நல்ல நிலையில் உள்ள ஒரே சுற்றுலாப் பயணிகள் விடுதி நிலாவெளி கரையோரத் தங்கு விடுதிதான். 15 அடி உயரத்திற்கு எழுந்து வந்த ஆழிப் பேரலையால் 2005ம் ஆண்டில் தாக்கப்பட்ட இந்த விடுதி இப்போது புனரமைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி இருந்த நான்கு தேன்நிலவுத் தம்பதிகளின் உயிர்கள் ஆழிப் பேரலையால் காவு கொள்ளப்பட்டிருந்தன.

தூய வெண் மணல் பரப்பின் மீது மனதை மயக்கும் வகையில் வளைந்து நிற்கும் தென்னோலைகளின் நடுவே கரையோரமாகத் தப்பிப் பிழைத்திருக்கும் ஒரே விடுதி அது.

தேசிய பாதுகாப்பு நிதி வழங்குவதற்கு விடுதியின் உரிமையாளர் மறுத்ததை அடுத்து தமிழ்ப் புலிகளால் எரியூட்டப்பட்டதன் நினைவாக, கறுப்புப் புகை படிந்த சுவர்கள் விடுதியின் வாசல் அருகே இன்னமும் எஞ்சி உள்ளன.

இந்து சமுத்திரத்தின் முத்தான இந்தத் தீவு அதன் கடலடிப் பவளப் பாறைகளுக்காகப் புகழ்பெற்றது.

படகோட்டி ஒருவர் என்னை தனது கண்ணாடி இழைப் படகில் ஏற்றி அந்தப் பகுதியைச் சுற்றிக் காட்டினார். ஆழிப் பேரலைக்குப் பின்னர் அந்தப் படகு அவருக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தது.

பவளப் பாறைகளின் செழிப்புக் காரணமாக ஏராளமான மீன்கள் அங்கு கிடைக்கின்றன. வெளிறிப்போன நிறத்தில் உடையணிந்த இருவர் அங்கு கிடந்த மர இருக்கை மீது அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகிலேயே இரு இயந்திரத் துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

“கடந்த மாதம் ஜேர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் கால்களை கண்ணாடித் துண்டுகள் வெட்டிவிட்டதை அடுத்து இங்கு காவலர்களை நியமிக்குமாறு நான் கேட்டிருந்தேன்” என்கிறார் அந்தப் படகோட்டி.

“கொழும்பில் இருந்து வரும் இந்தக் காவாலிகள் பெரும் தொல்லையாக மாறி வருகின்றார்கள். அவர்கள் குடிக்கிறார்கள், சண்டையிடுகிறார்கள் அத்துடன் கண்டதையும் தூக்கி கடற்கரையிலும் கடற்படுக்கையிலும் போட்டுவிட்டுச் செல்கிறார்கள்” என விளக்கினார் அவர்.

அங்கிருக்கும் முஸ்லிம் கிராமத்தவர்களுக்கு சிங்களவர்களின் நடத்தையை மரியாதை அற்றதாக உணர்கிறார்கள். ஆனால் அந்தச் சுற்றுலாப் பயணிகள் மூலம் அவர்களுக்குச் சில வருமானங்களும் கிடைக்கத்தான் செய்கின்றன.

கழிமுகப் பகுதியான அந்தக் கிராமத்தில் 700க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்கின்றன. விவசாயமும் மீன்பிடியும்தான் அவர்களுக்கு வருமானம் தரும் வழிகள்.

அங்கிருந்த ஆற்றுப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த சமயம் ஆற்றில் கட்டுமரத்தில் வந்த கிராமத்தவர் ஒருவர் வணக்கம் சொன்னார். ‘மிக்கி’ [Micky] என்ற அந்த நபர், தன்னுடைய ஆங்கில மொழி அறிவுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

ஆழ்கடல் நீச்சல் தொடர்பான நெறியாளராகத் தான் பயன்படுத்தப்படுகிறார் என அவர் கூறுகிறார். ஆனால், நீண்ட காலமாக அவர் ஆங்கிலம் பேசவில்லை.

ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருக்கும் நிலப்பகுதியில் இருந்து அவர் திரும்பி வந்துகொண்டிருந்தார். 30 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக அங்கு அவர் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிருக்கிறார். அவர் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கிறது.

“இப்படியான நாட்கள் திரும்பி வரும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை” என்கிறார் அவர்.

அவருக்கு நாம் கையசைத்து விடைகொடுத்த சமயம், மிக்கி ஒரு அற்புதமான மனிதர் என்று எனது படகோட்டி சொன்னார். கடந்த ஆண்டுதான் நிலக் கண்ணி வெடியில் சிக்கி மிக்கி தனது கால்களில் ஒன்றை இழந்திருந்தார்.

திருகோணமலையின் தெற்கில் இருக்கும் பாசிக்குடா மற்றும் கல்குடா பகுதிகளுக்கும் நான் சென்றேன். 1970களில் இப்பகுதிகள் மிக வளமான கரையோரங்களான இருந்தன.

உடைந்த குவியல்களாகக் கிடக்கும் மரப் பலகைகள் மற்றும் தென்னை மரச் சோலை முழுவதும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுக் கிடக்கும் நெகிழிக் [plastic] குழாய்களும் தங்களது மகிழ்ச்சியான காலங்களை நினைவுபடுத்தியபடி எஞ்சிக் கிடக்கின்றன.

கரையோரத்தில் இருந்து ஒரு மைல் தூரத்தில் நிலப்பகுதியில் அமைந்துள்ள வாழைச்சேனையில் பல வீடுகளில் அறைகள் வாடகைக்கு வழங்கப்படும் என்ற விளம்பரம் காணப்படுகின்றது.

ஆனால், முற்றுகைக்கு உள்ளான நகரம் போலவே அந்தப் பட்டிணம் இன்னமும் காட்சி அளிக்கின்றது. கிட்டத்தட்ட எல்லாக் கட்டடங்களுமே குண்டு துளைத்த ஓட்டையுடனேயே காணப்படுகின்றன.

தாண்டிச் செல்பவர்களிடம் இருந்து படையினரைத் தனிமைப்படுத்தும் வகையில் துருப்பிடித்த, நீண்ட, வளைந்த பலம் மிக்க இரும்புகள் ஆங்காங்கே நிலத்தில் அடிக்கப்பட்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரசுக்கும் போராளிகளுக்கும் இடையிலான சண்டைக் களத்தில் என்ன நடந்தது என்பது பற்றி யாரும் பேசுவதில்லை. நான் கடந்து செல்கையில் கடைக்காரர்கள் மட்டும் வாழ்த்துக்களைக் காதோடு குசுகுசுக்கிறார்கள்.

கல்குடாவின் வெள்ளை மணல் பரப்புக்குத் திரும்பி வந்தால், அமைதியாக இப்போது அங்கே சூரியக் குளியல் எடுக்கலாம்.

ஆயிரக்கணக்கான மீன்பிடிப் படகுகள் அந்தக் கரையோரம் அணிவகுத்து நிற்கின்றன.

இப்போதெல்லாம் மீன்பிடித் தொழில் நன்றாக நடப்பதாகச் சொல்கிறார், மணல் மூட்டைத் தடுப்பின் பின்னால் நின்றுகொண்டிருக்கும் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த நபர்.

அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் கால்நடைகள் கரையோரம் எங்கும் உலாத்துகின்றன. நெகிழிக் [plastic] கழிவுகள் மணல் பிரதேசம் எங்கும் பரந்து கிடக்கின்றன.

கடற்கரையோரம் துப்புரவு செய்யப்பட்டு மீன்பிடித் தொழிலுக்கும் சுற்றுலாத் துறைக்குமான வளாகங்கள் பிரிக்கப்பட்டால், கல்குடா மற்றொரு ‘கோவா’ கரையோரமாக வளரும்.

ஆனால், உள்நாட்டுப் போரால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட காயங்கள் ஆறும் வரைக்கும் சிறிலங்காவின் கிழக்குக் கடற்கரைகளை கடற்தொழிலாளர்களிடமும் விவசாயிகளிடமும் விட்டு வைப்பதே சிறந்தது.

http://www.puthinappalakai.com/view.php?20100116100325

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.